கிரிக்கெட் (Cricket)

கிரிக்கெட்டை வேறு நிலைக்கு இந்தியா எடுத்து சென்றுள்ளது - விவியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம்

Published On 2026-03-12 15:57 IST   |   Update On 2026-03-12 15:57:00 IST
  • வெஸ்ட் இண்டீஸ் அணி 1975 மற்றும் 1979-ல் உலக கோப்பையை கைப்பற்றியது.
  • விவியன் ரிச்சர்ட்சும் இந்திய அணியை புகழ்ந்து உள்ளார்.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் நாடு என்ற புதிய வரலாற்றை படைத்தது.

இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விவியன் ரிச்சர்ட்சும் இந்திய அணியை புகழ்ந்து உள்ளார். இந்தியா தனது கிரிக்கெட்டை வேறு நிலைக்கு எடுத்து சென்று உள்ளது என்று பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக ரிச்சர்ட்ஸ் கூறியதாவது:-

ஒரு நாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி கிரிக்கெட்டை வேறு நிலைக்கு எடுத்து சென்றுள்ளதாக நான் கருதுகிறேன். ரசிகர்களுக்கு இது சிறந்த பரிசாகும். ஏனென்றால் அவர்கள் இந்த விளையாட்டின் மீது காட்டும் அன்பும், ஆர்வமும்தான் இதற்கு காரணம். இந்த அன்பும், ஆதரவும் விளையாடப்படும் நாட்டுக்கும் கிடைத்த சரியான வெற்றியாக இருந்து உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 1975 மற்றும் 1979-ல் உலக கோப்பையை கைப்பற்றியது. எனவே நாங்கள் கிரிக் கெட்டில் பெரிய பங்கு வகிக்கிறோம். கடந்த காலங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரசிகர்களாக இருந்தவர்கள் தங்களுக்கு கிடைத்த சில சிறந்த தருணங்களை நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1975, 1979-ல் வெஸ்ட் இண்டீஸ் உலக கோப் பையை வெல்ல ரிச்சர்ட்ஸ் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News