Hardik Pandya | முத்தம் கொடுத்தது குத்தமா? வழக்குப் பதிவால் புதிய சிக்கலில் ஹர்திக் பாண்ட்யா
- மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது.
- காவல் துறை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஐ.சி.சி. நடத்திய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.
கோப்பையை வென்ற நிலையில், இந்திய அணி வெற்றியை கொண்டாடி தீர்த்தது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா தேசிய கொடியை அவமதித்து விட்டதாக வழக்கறிஞர் ஒருவர் பூனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா தேசிய கொடியை அவமதித்ததை எதிர்த்து வழக்கறிஞர் வஜித் கான், சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டதாக காவல் துறை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார். தனது புகாரில் அவர், பாண்ட்யா வெற்றிக் கொண்டாட்டத்தின் போது தேசிய கொடியை தன் மீது போர்த்திக் கொண்டு ஆபாச நடத்தையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த செயல் தொடர்புடைய சட்டத்தின் கீழ் குற்றமாகும், மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய கொடியின் கண்ணியத்தை மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும், என்று அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.