செய்திகள்

இடைத்தேர்தலில் எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம்- தங்க தமிழ்ச்செல்வன்

Published On 2018-09-29 10:27 GMT   |   Update On 2018-09-29 10:27 GMT
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #Thiruparankundram #ThangaTamilselvan
திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வருகிற 7-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்ட விழாவிற்கு கால்கோள் விழா இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பரங்குன்றத்தில் 7-ந்தேதி நடைபெறும் கூட்டத்திற்கு டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக அ.ம.மு.க. பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள். தொண்டர்கள் ஆதரவு, மக்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது. இடைத்தேர்தல் நடந்தால் நல்லது. ஆனால் பாராளுமன்ற தேர்தலோடு தான் நடத்துவார்கள்.


ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது என விசாரணை கமி‌ஷன் அமைத்தனர். 1 வருடம் ஆகியும் விசாரணை நிறைவு பெறவில்லை. இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. டெபாசிட் காலியாகும்.

இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கேட்டுள்ளோம். அது இல்லை என்றால் பேனா, தொப்பி உள்பட எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #AmmaMakkalMunnetraKazhagam #TTVDhinakaran #Thiruparankundram #ThangaTamilselvan
Tags:    

Similar News