செய்திகள்

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி

Published On 2018-06-08 16:58 IST   |   Update On 2018-06-08 16:58:00 IST
விழுப்புரம் அருகே சாலையை கடக்க முயன்ற காவலாளி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 46). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு செஞ்சி நான்குமுனை சந்திப்பில் கணேசன் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்தவழியாக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மாணவர்கள் சூர்யா(20), அபிவர்மன்(20), பிரவீன்(20) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக சாலையை கடக்க முயன்ற கணேசன் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட கணேசன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 மாணவர்களும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News