உலகம்

கனடாவில் இந்திய பெண் படுகொலை

Published On 2025-12-24 17:16 IST   |   Update On 2025-12-24 17:16:00 IST
  • ஒரு குடியிருப்பில் ஹிமான்ஷி குரானா பிணமாக கிடந்தார்.
  • டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி(32) என்பவரை குற்றவாளியாக அறிவித்து தேடி வருகிறார்கள்.

கனடாவின் டொராண்டோவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி பெண்ணான ஹிமான்ஷி குரானா(வயது 30) திடீரென்று மாயமானார். இதற்கிடையே அங்குள்ள ஒரு குடியிருப்பில் ஹிமான்ஷி குரானா பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக இந்திய தூதரகம் கூறும்போது, ஹிமான்ஷி குரானா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம்.

இந்த விவகாரம் தொடர்பாக தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. மேலும், உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே ஹிமான்ஷி குரானா கொலையில் சந்தேக நபர் குறித்த விவரங்களை போலீசார் வெளியிட்டனர். டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி(32) என்பவரை குற்றவாளியாக அறிவித்து தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News