வரிவிதிப்பில் இருந்து தேர்தல் பக்கம் திரும்பினார்- அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் டிரம்ப்
- அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
- நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாரும் வாக்கு சீட்டு முறையில் ஓட்டளிக்க கூடாது.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டினார். தற்போது அவரது கவனம் தேர்தல் மீது சென்றுள்ளது. அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறிருப்பதாவது:- அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் போது மோசடி செய்யப்பட்டன, திருடப்பட்டன. நாம் அவற்றை சரி செய்ய போகிறோம். தேர்தல் சீர்திருத்தங்கள், கடுமையான கட்டுப்பாடுகள் தேவை.
* சில சந்தர்ப்பங்களைத் தவிர வாக்காளர்கள் ஓட்டளிக்க அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.
* அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
* மெயிலில் இனி வாக்கு சீட்டுகள் இல்லை. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாரும் வாக்கு சீட்டு முறையில் ஓட்டளிக்க கூடாது.
இந்த நடைமுறைகளை அனைத்து குடியரசு கட்சியினரும், பின்பற்றுவதற்காக போராடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.