கிரிக்கெட்
null

மும்பை அணிக்காக சதமடித்த 5-வது வீரர்: சூர்யகுமார் யாதவ் சாதனை

Published On 2023-05-13 06:06 GMT   |   Update On 2023-05-13 06:10 GMT
  • மும்பை அணிக்காக முதல் சத்தத்தை பதிவு செய்தவர் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யா ஆவார்.
  • மும்பை அணிக்காக சதம் அடித்தவர்கள் அனைவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததுள்ளார்.

ஐபிஎல் 2023 தொடரின் 57-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 218 ரன்கள் குவித்துள்ளது.

அதில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் பேட்டிங் செய்ய வந்தது முதல் குஜராத் பெளலர்கள் பந்து வீச்சை நாலபுறமும் பறக்க விட்டார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 5-வது இடத்தை பிடித்துள்ளார். மும்பை அணிக்காக முதல் சத்தத்தை பதிவு செய்தவர் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யா ஆவார். அதற்கு அடித்தப்படியாக சச்சின், ரோகித் சர்மா, சிம்மோன்ஸ் சதம் அடித்துள்ளனர். அதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

மும்பை அணிக்காக சதம் அடித்தவர்கள் அனைவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News