2 நாட்கள் தாமதமாக ஐ.பி.எல். தொடர்?
- ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது.
- இந்த கூட்டத்தில் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
புதுடெல்லி:
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மார்ச் 26-ந்தேதி தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் 2 நாள் தாமதமாக மார்ச் 28-ந்தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்குகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மே 31-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள சென்னை, கொல்கத்தா, கவுகாத்தி ஆகிய இடங்களில் ஐ.பி.எல். போட்டி நடத்தப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக சேப்பாக்கம் இருக்கிறது. இதேபோல கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கொல்கத்தா மைதானம் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 2-வது மைதானமாக கவுகாத்தி உள்ளது. இதனால் அதற்கேற்ற வகையில் போட்டி அட்டவணையை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.