சூப்பர் 8 சுற்றில் திரில் வெற்றி: நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்புக்கு செக் வைத்த இங்கிலாந்து
- முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது.
- கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை தொடரின் 49-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 39 ரன்னும், டிம் சைபர்ட் 35 ரன்னும், பின் ஆலன் 29 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், வில் ஜாக்ஸ், ரேஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. டாம் பாண்டன் 33 ரன்னும், ஹாரி புரூக் 26 ரன்னும் எடுத்தனர்.
கடைசி 3 ஓவரில் வெற்றிபெற 43 ரன்கள் தேவைப்பட்டது. ரெஹான் அகமது அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
இங்கிலாந்து 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் 32 ரன்னும், அகமது 7 பந்தில் 19 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட் வீழ்த்தினார்.