2026 ஐபிஎல் போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்த எல்.எஸ்.ஜி. அணி
- ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி கடந்த முறை 7-வது இடத்தை பிடித்தது.
- 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர், 2026 ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன.
டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தொடர் முடிவடைந்த பின்னர், ஐபிஎல் அணியின் முகாம்களில் பங்கேற்பார்கள். உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்காத வீரர்கள் ஏற்கனவே பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, வீரர்களுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பிரத்யேக வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
2025 தொடரில் லக்னோ 14 போட்டிகளில் 6-ல் வெற்றி, 8-ல் தோல்வி மூலம் 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்தது. அந்த அணி 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்-ஐ வாங்கியுள்ளது. இவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணியில் ரிஷப் பண்ட் உடன் மார்க்கிராம், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் முகமது ஷமி, நோர்ஜே உள்ளிட்டோர் உள்ளனர்.