search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா கூட்டணி"

    • இந்தியா கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும்.
    • கேரளாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்த லுக்கு பிறகு அதாவது ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தியா கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும்.

    இந்த தேர்தலில் மக்கள் மனநிலை இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது. தென் மாவட்டங் களில் பா.ஜனதாவை விட நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    2019 தேர்தலில் தெலுங் கானாவில் 3 இடங்களை மட்டுமே பெற்றோம். ஆனால் இந்த முறை 11 முதல் 12 இடங்கள் கிடைக்கும். கேரளாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்.

    தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு ஒரு தொகுதி ஒரு இடம் கூட கிடைக்காது. இந்தியா கூட்டணி அனைத்து தொகுதியிலும் அங்கு வெற்றி பெறும். மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாரி (இந்தியா கூட்டணி) மொத்த இடத்தில் பாதியை யாவது பெறுவதற்கு தயாராக உள்ளது. பீகாரில் நாங்கள் சிறப்பான நிலையை பெறுவோம்.

    உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா 15 முதல் 20 இடங்களை இழக்கும். இந்தியா கூட்டணி 40 இடங்களை பிடிக்கும்.ராஜஸ்தானில் 10, அரியானாவில் 5 முதல் 6 இடங்களும் கிடைக்கலாம் என்பது எங்கள் கணக்காகும்.

    பா.ஜனதாவை வீழ்த்து வதற்காக போட்டியிடும் இடங்களை குறைத்து நாங்கள் தியாகம் செய்துள்ளோம். தேர்தல் முடிவுகள் வெளியான 24 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளரை நாங்கள் முடிவு செய்வோம். புதிய பிரதமர் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வார்.

    ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதற்கு காங்கிரஸ் முயற்சியா? என்பது பற்றி பேச இது நேரமில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒன்றாக அமர்ந்து பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம்.

    தேர்தலின் தொடக்கத்தில் பா.ஜனதாவுக்கு 400 இடங்கள் கிடைக்கும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்தார். ஆனால் உண்மை நிலை முற்றிலும் மாறி விட்டது. கடந்த முறை வெற்றி பெற்ற பல இடங் களை இழந்து வருவதை பா.ஜனதா உணர்ந்துள்ளது. அந்த கட்சியினர் பீதியில் உள்ளனர்.

    இந்த தேர்தலில் உண்மையான பிரச்சினைகளை பிரதமர் பேச விரும்ப வில்லை. மதம் மற்றும் சமூகங்களின் அடிப்படையில் மக்களை பிளவுப் படுத்துவது அவரது நிகழ்ச்சி நிரலாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மம்தா பானர்ஜி வெளியில் இருந்து (கூட்டணி) அல்லது உள்ளே இருந்து என செய்வார் என்பது எனக்குத் தெரியாது.
    • அவர் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்குக் கூட செல்ல முடியும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை தோற்கடிக்க நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இந்த சிக்கலால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டி என அறிவித்தார். இதனால் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ்- பா.ஜனதா இடையே முத்தரப்பு போட்டி நிலவுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து ஏறக்குறைய மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமூகமாக தீர்த்துக் கொண்டது.

    தற்போது நான்கு கட்ட வாக்குப்பதிகள் முடிவடைந்து விட்டனர். இந்தியா கூட்டணி தங்களுக்குதான் வாய்ப்பு என கூறி வருகிறது. அதேவேளையில் 3-வது முறையாக பிரதமாக பதவி ஏற்பது உறுதி என மோடி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    ஆனால், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன், மம்தா பானர்ஜி மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆதிர் ரஞ்சன் கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி வெளியில் இருந்து (கூட்டணி) அல்லது உள்ளே இருந்து என செய்வார் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். ஆனால் அவர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. அவர் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்குக் கூட செல்ல முடியும். இந்தியா கூட்டணி பெங்கால் காங்கிரசை கணக்கில் கொள்ளாது என்கிறார். இந்தியா கூட்டணி பற்றி அவர் புகார் கூற இருந்தால், அது உருவானபோது எழுப்பியிருக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியை அழித்து விடுவதாகவும், காங்கிரஸ் 40 தொகுதிகளை தாண்டாவது எனவும் பா.ஜனதா கூறியது. தற்போது மம்தா சொல்வதின் அர்த்தம் காங்கிரஸ், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதுதான்.

    • மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன.
    • ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கார்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன. மக்களவை தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி உடைந்துவிடும். தோல்விக்கு பிறகு பலிகடாவை தேடுவார்கள்.

    அமேதியில் (ராகுல் காந்தி கடந்த வருடம் தோல்வியடைந்ததை மனதில் வைத்து கூறினார்) இருந்து காங்கிரஸ் சென்று விட்டது. ரேபரேலியில் (தற்போது ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுகிறார்) இருந்தும் செல்வார்கள். ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக பதோஹியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியால் டெபாசிட்டை பாதுகாப்பதே கடினம்தான். ஆகவே, அவர்கள் பதோஹியில் பரிசோதனை அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் என்பது இந்துக்கள் கொலை, தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான துன்புறுத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை. அங்கு பல பாஜக தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இந்துக்களை கங்கை நதியில் மூழ்கடித்து கொன்று விடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறுகிறார்.

    மேற்கு வங்காளத்தில் இந்த வகையிலான அரசியலைத்தான் திரிணாமுல் காங்கிரஸ் செய்கிறது. சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் திரிணாமுல் அரசியலை முயற்சிக்க விரும்பின. அது அரசியல் திருப்திபடுத்துதல், தலித்துகள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் அரசியலாகும்" என்றார்.

    • பா.ஜ.க. அதிகபட்சமாக 200 இடங்களில் வெற்றி என்ற அளவுடன் கட்டுப்படுத்தப்படும்.
    • நமது மத வழக்கங்களாகட்டும் அல்லது உணவுப் பழக்கவழக்கங்களாகட்டும். அனைத்திலும் பா.ஜ.க.வினர் தலையிடுகின்றனர்.

    கல்யாணி:

    மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம், கல்யாணி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    சந்தேஷ்காளி விவகாரத்தில் பா.ஜ.க.வினரும் பிரதமரும் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். உத்தரவாத மன்னர் (மோடி) மேற்கு வங்காளத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்.

    தற்போது பல்வேறு வீடியோக்கள் வெளியாகி உண்மை வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் அந்தக் காட்சிகளைக் காட்ட வேண்டாம் என்று பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி சேனல்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 முதல் 315 வரையிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும். பா.ஜ.க. அதிகபட்சமாக 200 இடங்களில் வெற்றி என்ற அளவுடன் கட்டுப்படுத்தப்படும். இந்த பாராளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வர மாட்டார் என்பதே எங்களின் ஒரே உத்தரவாதமாகும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த விட மாட்டோம்.

    நமது மத வழக்கங்களாகட்டும் அல்லது உணவுப் பழக்கவழக்கங்களாகட்டும். அனைத்திலும் பா.ஜ.க.வினர் தலையிடுகின்றனர். இதை ஏற்க முடியாது. இது நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது.
    • இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி. லோகூர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என். ராம் ஆகியோர் பாராளுமன்றத் தேர்தலின் முக்கிய பிரச்சனைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினர்.

    இந்த கடிதம் கிடைத்தவுடனே அழைப்பை ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி, பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். இந்நிலையில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

    அத்தகைய விவாதத்தை நடத்துவதற்கு நரேந்திர மோடிக்கு துணிவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மடியில் கனம் இருப்பதால் ராகுல்காந்தியுடன் விவாதிக்க நரேந்திர மோடி தயாராக இல்லை.

    விலைவாசி உயர்வு, வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, கொரோனா தொற்றினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு, மோடியின் சலுகையினால் அதானி, அம்பானி சொத்து குவிப்பு, ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரம் இழப்பு, மாநில உரிமைகள் பறிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக நரேந்திர மோடி திரும்ப ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு கடுகளவு கூட இல்லை என்று அறிவார்ந்த அரசியல் வல்லுநர்களும், பாரபட்சமற்ற தேர்தல் கணிப்பாளர்களும் நாள்தோறும் கருத்துகளை கூறி வருகிறார்கள்.

    இதனால் பதற்றமும், அச்சமும் அடைந்த பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அச்சுறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்கிற கனவை நாளுக்கு நாள் ராகுல்காந்தி தகர்த்து வருகிறார்.

    இதன்மூலம் தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பின்னணியில் தான் ராகுல்காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின் வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழகத்தில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றி முழுமையான வெற்றி பெறும். அதற்கு காரணம் கூட்டணி வலிமை.
    • ஆக்கப்பூர்வமான உத்தரவாதங்கள் எதையும் அவர்களால் மக்களுக்கு கொடுக்க முடியவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரான கே.எஸ்.அழகிரி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றி முழுமையான வெற்றி பெறும். அதற்கு காரணம் கூட்டணி வலிமை.

    ராகுல், மு.க.ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக தேர்தல் பணியை முன்னெடுத்தார்கள். மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000, பஸ்களில் இலவச பயணம், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் சம்பள உயர்வு ஆகியவையும் ராகுல் அறிவித்துள்ள பெண்களுக்கு ரூ.1 லட்சம் போன்ற திட்டங்கள் பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 99 சதவீத பெண்கள் ஆதரவு இந்த கூட்டணிக்குத்தான் கிடைக்கும் என்பதை மறுக்க முடியுமா?

    எதிர்கட்சிகள் சிதறி கிடக்கின்றன. ஆக்கப்பூர்வமான உத்தரவாதங்கள் எதையும் அவர்களால் மக்களுக்கு கொடுக்க முடியவில்லை.

    பா.ஜனதாவால் வேரூன்ற முடியவில்லை. பிரதமர் மோடி பிரிவினை வாத அரசியலை கையில் எடுத்துள்ளார். மக்களை ஒற்றுமை படுத்துபவராக இல்லை.

    தமிழக மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு போதும் மத வெறியர்களாக மாறமாட்டார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் சரி.

    அதற்கு காரணம் இந்த மண்வாசனை அப்படிப்பட்டது.

    பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பா.ஜனதா தனது கணக்கை தமிழ் நாட்டில் இருந்து தொடங்கும் என்று கூறி வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கை நிச்சயம் பலிக்கும். பா.ஜனதாவின் நாடு தழுவிய தோல்வி கணக்கை இங்கிருந்துதான் தொடங்குவார்கள்.

    அதற்கு கோவை தொகுதி ஒரு சாட்சி. அந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு பூத்தில் அமர கூட ஆட்கள் இல்லை. அதனால்தான் தோல்வியை உணர்ந்து ஒரு லட்சம் ஓட்டுக்களை காணவில்லை என்றார்கள். வாக்காளர்களின் பெயர் சேர்க்க, சரி பார்க்க எவ்வளேவா அவகாசம் கொடுத்தும் ஒரு லட்சம் பெயர்கள் விடுபட்டது என்பது எப்படி சாத்தியம்?

    கோவையில் அண்ணாமலையின் தோல்வி எழுதி வைக்கப்பட்டது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு பா.ஜனதா தனது நிலையை உணர்ந்து கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
    • மஹாராஷ்டிராவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் முதல் 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    இதனையடுத்து 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைந்தது.

    இந்நிலையில், மஹாராஷ்டிராவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அது தொடர்பான வீடியோவை பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, "மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஹரியானா, பீகார் என நாடு முழுவதும் இந்தியா கூட்டணியின் புயல் வீசுகிறது. மீண்டும் சொல்கிறேன் ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக இருக்க மாட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஜார்கண்ட் என்ற அடையாளத்தின் இருப்புக்காக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.
    • எனது வாழ்க்கையில் ஒரு புதிய சவாலை ஏற்க தயாராக இருப்பதாக உணர்கிறேன்.

    ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து கட்சி நடவடிக்கைகளை ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கவனித்து வருகிறார்.அவர் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் கல்பனா சோரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கேள்வி:-கடந்த 2 மாதங்களாக உங்கள் அரசியல் பயணம் எப்படி இருந்தது?

    பதில்:-எனது கணவர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31-ந்தேதி கைது செய்த பிறகு எனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.ஏனென்றால் இது திடீரென்று நடந்தது. எனக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது.ஆனால் அனைத்து தடைகளையும் கடந்து தற்போது தேர்தல் பரபரப்பில் இருந்து வருகிறோம். ஜார்கண்ட் என்ற அடையாளத்தின் இருப்புக்காக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.

    கேள்வி:-உங்களது கணவரின் அண்ணன் மனைவி சீதா சோரன் ஜே.எம்.எம். கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர எடுத்த முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-அவர் எடுத்த முடிவு ஊடகங்கள் மூலம் எங்களுக்கு தெரிந்தது. இது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனது கணவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் நான் ஏற்கனவே உடைந்து போயிருந்தேன். அதிலிருந்து வெளியே வர சிறிது நேரம் பிடித்தது. அந்த முடிவு அவருடைய தனிப்பட்டது என்று நம்புகிறேன். அதை நான் மதிக்கிறேன்.

    கேள்வி:-ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், என்ன செய்வது என்று அவருடன் விவாதித்தீர்களா?

    பதில்:-ஹேமந்த் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். நான் சட்ட நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தேன். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் சொந்தப் பொறுப்பில் ஈடுபட்டிருந்தனர். எனவே ஒரு மனைவியாகவும், ஒரு மனிதனாகவும் குடும்பம், கட்சி, தொண்டர்களுக்காக துணை நிற்பது எனது தனிப்பட்ட கடமை என்று நான் நினைத்தேன். எனது பிறந்த நாளான மார்ச் 3-ந்தேதி அன்று ஏற்பட்ட சூழ்நிலை மற்றும் பொறுப்பின் காரணமாக மாமனார், மாமியார் ஆசியுடன் தீவிர அரசியலில் இறங்கினேன்.

    கேள்வி:-உங்கள் கணவர் கைது செய்யப்பட்டதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:-ஹேமந்த் கைது தொடர்பான நிலம் அவரது பெயரில் உள்ளதா என அதிகாரிகள் சோதித்திருக்க வேண்டும். அவரது பெயரில் ஒரு பேப்பர் கூட இல்லை.இந்தக் கேள்வி ஏன் ஹேமந்த்திடம் கேட்கப்படுகிறது என்று கேட்க விரும்புகிறேன். நிலம் தங்களுக்கே சொந்தம் என்று தற்போதும் கூறும் நில உரிமையாளர்களிடம் ஏன் கேள்வியை கேட்கவில்லை. நில உரிமையாளரும் குற்றம் சாட்டப்பட்டுஉள்ளாரா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

    கேள்வி:-ஹேமந்த் சோரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பார்க்கும் போது, ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:-எங்களது உரிமையை பெற்று தருமாறு மத்திய அரசிடம் கேட்கிறோம். மத்திய அமைச்சகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சர்னா மதக் குறியீட்டை நாங்கள் கேட்கிறோம்.ஆனால் அது மறுக்கப்படுகிறது. அதுவும் ஊழல்தான். நான் ஊழலுக்கு முற்றிலும் எதிரானவள். ஆனால் மத்திய அரசு ஜார்கண்ட்டை வளர்ப்பு மகன் போல நடத்துகிறது. அதுவும் ஊழல்தான். நாங்கள் ஏமாற்றப் பட்டதாக உணர்கிறோம். இதனால்தான் மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்குக்கு எதிராக முதல்வராக இருந்து ஹேமந்த் குரல் எழுப்பினார்.

    கேள்வி:-ஜார்கண்ட்டின் வருங்கால முதல்-மந்திரியிடம் பேசுகிறோம் என்று கூறலாமா?

    பதில்:-இப்போதே இல்லை.எனது மாமனார் சிபு சோரன், கணவர் ஹேமந்த், கட்சித் தொண்டர்களின் எண்ணங்கள், லட்சியங்களில் இருந்து நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். தொண்டர்கள் என்னைப் பார்க்கும்போது அவர்கள் மிகவும் உற்சாகமாக உணர்கிறார்கள்.

    கேள்வி:-கட்சியினர் உங்கள் பெயரை முன்மொழிந்தால் முதல்-மந்திரி பொறுப்பை ஏற்க தயாரா?

    பதில்:-மக்கள் என்னை ஒரு போர்வீராங்கனையாக ஆக்கியுள்ளனர். நான் ஒரு போராட்ட குணம் படைந்தவள் என்பதால் அந்த வார்த்தையை விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய சவாலை ஏற்க தயாராக இருப்பதாக உணர்கிறேன். நான் அதை செய்ய விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது.
    • தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள்.

    தெலுங்கான மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.

    அப்போது சந்திரசேகர ராவ் கூறியதாவது:-

    நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது. தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள். இது என்டிஏ அல்லது இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் பிராந்திய கட்சிகள் அல்ல. அது போன்று நடக்காது. பா.ஜனதா தலைமையிலான என்டிஏ அல்லது காங்கிரஸ் தலைமையலான இந்தியா கூட்டணி பிராந்தியக் கட்சிகளின் குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டும். இது ஒரு தலைகீழ் விஷயமாக இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள்.

    தெலுங்கானாவில் கடந்த முறை 17 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை இரண்டு இலக்க எண் இடங்களில் வெற்றி பெறுவோம்.

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் மட்டுமே காங்கிரஸ் அளித்த வாக்குறுதியில் நிறைவேற்றியுள்ளது. அதுவும் பெரிய நகைச்சுவையாகிவிட்டது. பெண்கள் பேருந்துகளிலும், ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைகளிலும் (போராட்டம்) போராடுகிறார்கள். இதனால் மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். எனது ஆட்சியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற விவசாய சமூகமும் கடும் கோபத்தில் உள்ளது. இது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என நினைக்கிறேன்.

    கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மக்களவை தேர்தலில் தெலுங்கானாவில் பா.ஜ.,வுக்கு ஒன்று அல்லது எதுவுமே கிடைக்காது.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    • மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார் என்பதை எழுத்துப்பூர்வ உறுதியாக அளிக்கிறேன்.
    • எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களையும், இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரடியாக களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

    நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார். அவரது பிரதமர் காலம் முடிந்தது. இதை எழுத்துப்பூர்வ உறுதியாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

    கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பிரதமர் மோடி அதானி மற்றும் அம்பானி பெயரை உச்சரித்தது கிடையாது. தற்போது அவர்களால் மோடியை காப்பாற்ற முடியும் என அவர் நினைக்கிறார்.

    இந்தியா கூட்டணி என்னை சூழ்ந்து சுற்றி வளைத்துள்ளது. நான் தோற்றுக் கொண்டு வருகிறேன். என்னை காப்பாற்றுங்கள். அதானி- அம்பானி ஜி என்னை காப்பாற்றுங்கள் என மோடி, அவரது தொழில் அதிபர் நண்பர்களிடம் கூறும் நிலையில் மோடி இருக்கிறார் என்பதுபோல் ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.

    ஆகவே எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும். டெம்போ குறித்த தனிப்பட்ட அனுபவம் மோடிக்கு உள்ளது.

    உத்தர பிரசேதத்தில் நீங்கள் பார்க்க போகிறீர்கள்... இந்தியா கூட்டணி என்ன புயல் வந்து கொண்டிருக்கிறது. இங்கு பா.ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வ உறுதியாக தருகிறேன். இந்தியாவில் மாற்றம் நிகழப் போகிறது. மக்கள் முடிவு செய்துவிட்டனர். உ.பி.யில் மாற்றம் நிகழும் என மக்கள் முடிவு செய்திருந்தனர்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    • தேர்தல் முடிவை உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.
    • சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல்.கிரிக்கெட் சூதாட்டம் ஒரு புறம் களை கட்டி இருந்தாலும் மறுபுறம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பது தொடர்பான சூதாட்டமும் தற்போது இணையதளத்தை கலக்கி வருகின்றன.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் 3- வது முறையாக பாரதீயஜனதா கட்சி ஆட்சி அமைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா? என்ற பரபரப்பு எகிறி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிவை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.

    பாராளுமன்ற தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவுகள் தொடர்ச்சியாக நடந்து வரும் சூழ்நிலையில் இணையதளத்தில் சூதாட்டமும் களை கட்டி உள்ளது. இதற்காக தனி செயலிகள் மற்றும் இணையதளங்கள் முளைத்து உள்ளது. பெரும்பாலானவை இந்தியாவை தாண்டி மற்ற நாடுகளில் இருந்து இந்த இணையதளங்கள் இயங்கி வருகின்றன.

    இதில் 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும், ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும், வேட்பாளர்கள் எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது போன்ற சூதாட்டம் நடந்து வருகிறது.

    இதைத்தவிர தொகுதி வாரியாகவும் சூதாட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும், எந்த வேட்பாளர்கள் வெல்வார்கள் என இப்படி பல்வேறு வகைகளில் சூதாட்டம் நடக்கிறது. இந்த சூதாட்டம் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    குறைந்தது 100 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை போட்டி போட்டுக்கொண்டு பலர் பணத்தை கட்டி வருகின்றனர். யு.பி.ஐ மூலமாகவும், வங்கி கணக்குகள் மூலமாகவும் இந்த சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த சூதாட்டம் மேலும் சூடு பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் இது போன்ற இணையதள சூதாட்டங்கள் நடந்தது. ஆனால் அதை விட தற்போது அதிகளவில் இந்த சூதாட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
    • ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருக்கிறார்கள் என்று கூறியதாக ஒரு கருத்தை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவை முறிக்க தி.மு.க. தயாரா என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்திருக்கிறார்.

    எதற்கு எதை முடிச்சு போடுவது என்று தெரியாமல் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துகளை திரித்து பேசுவது மோடியின் கை வந்த கலையாக இருக்கிறது. அதை ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது.

    இந்நிலையில் அமெரிக் காவில் வாழ்கிற சாம்பிட் ரோடா ஏற்கனவே தெரிவித்த ஒரு கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பை வெளியிட்டது. அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இக் கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என மறுப்பு கூறியிருக்கிறார்.

    இதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் பொறுப்பிலிருந்து சாம்பிட்ரோடா விலகிக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவரது கருத்தை காங்கிரஸ் கட்சி முழுமை யாக நிராகரித்திருக்கிறது. இதற்கு பிறகும் இக்கருத்தின் அடிப்படையில் சவால் விடுவது அரசியல் நாகரீக மற்ற செயலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    அமெரிக்க குடியரசு தலைவராக பராக் ஒபாமா 2010-ல் இந்தியாவுக்கு வருகை புரிந்த போது, அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை சந்தித்து இந்தியாவில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு எதிராக வளர்ந்து வருகிற அச்சுறுத் தலையும், அதன்மூலம் இந்து தேசியவாதத்தை பா.ஜ.க. வளர்ப்பதையும் கவலையோடு பகிர்ந்து கொண்டதை இங்கு நினைவு கூறுவது அவசியமாகும்.

    அன்று பராக் ஒபாமா எதை கண்டு அச்சம் தெரிவித்தாரோ அத்தகைய அச்சத்தை 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் மூலம் நாடு முழுவதும் தீய பிரசாரம் பரப்பப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் தோற்பது உறுதியாகியதை முற்றிலும் உணர்ந்து விட்ட மோடி, மக்களை பிளவு படுத்துவதற்கு இல்லாததை எல்லாம் இட்டுக் கட்டி அப வாதங்களை கூறி வருகிறார்.

    10 ஆண்டுகால ஆட்சியின் மூலம் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளை மூடி மறைப்பதற்கு வகுப்புவாத, நச்சு கருத்துகளை பரப்பி மக்களை பிளவுபடுத்தும் மோடியின் முயற்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் களத்தில் நின்று போராடி மக்கள் மன்றத்தில் முறியடித்து வருகிறார்கள்.

    இவர்களது கடும் பரப்புரையினால் வகுப்புவாத மோடி ஆட்சி வீழ்த்தப்பட்டு, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதன்மூலம் மக்களவை தேர்தலுக்கு பிறகு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நல்லாட்சியை இந்தியா கூட்டணி அமைப்பதை நரேந்திர மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×