search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliamentary elections"

    • ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார்.
    • ஆந்திராவில் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் வாக்களித்து வருகின்றனர்.

    நான்காவது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற வருகிறது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடப்பா தொகுதியின் ஜெயமஹால் அங்கனவாடி வாக்குச் சாவடி எண் 138ல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார்.


    இத்தொகுதியில் காங்கிரஸின் ஒய்.எஸ்.சர்மிளா, தெலுங்குதேசம் கட்சியின் சாதிபிரல்லா பூபேஷ் சுப்பராமி ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அப்போது ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, "கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பார்த்துவிட்டீர்கள், இந்த ஆட்சியில் பலன் அடைந்ததாக நீங்கள் நினைத்தால், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் இந்த ஆட்சிக்கு வாக்களியுங்கள்.. என்று அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.



    • தேர்தல் பிரச்சாரத்திற்காக பல முறை ஒடிசா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆளும் பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
    • அடுத்த 10 ஆண்டுகளில் கூட ஒடிசாவில் பாஜக வெற்றி பெற முடியாது.

    ஒடிசா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பிரதமருக்கு நினைவில் உள்ளதா என்று ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் கேள்வி எழுப்பி உள்ளார்.

    நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும், பாஜகவும் இந்த முறை தனித்தனியாக போட்டியிடுவதால் இரு கட்சிகளுக்கு இடையே அதிகபட்ச மோதல் போக்கு நிலவுகிறது. இந்தக் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்திற்காக பல முறை ஒடிசா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆளும் பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்

    இந்நிலையில் நேற்று ஒடிசாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், "ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும், தலைநகரங்களையும் காகித குறிப்பு ஏதுமின்றி சொல்ல முடியுமா" என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு சவால் விடுத்தார்.

    நினைவுத்திறன் தொடர்பாக சவால் விடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடனடியாக தனது எக்ஸ் தள பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.

    பிரதமர் மோடி அவர்களே, "தாங்கள் ஒடிசா மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைத்திருக்கிறீர்களா?" "ஜூன் 10ம் தேதி எதுவும் நடக்காது. அடுத்த 10 ஆண்டுகளில் கூட ஒடிசாவில் பாஜக வெற்றி பெற முடியாது. ஜகந்நாதரின் ஆசியுடனும், ஒடிசா மக்களின் அன்புடனும் பிஜேடி ஆட்சி அமைக்கும் என நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

    • உத்தரபிரதேசத்தில் 130 வேட்பாளர்களும், மராட்டியத்தில் 298 வேட்பாளர்களும், மத்திய பிரதேசத்தில் 74 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
    • இன்னும் 163 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

    2-ம் கட்டமாக கேரளா உள்பட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடந்தது. 3-ம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடந்தது.

    இதுவரை நடந்து முடிந்து உள்ள 3 கட்ட தேர்தல்களிலும் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதால், அந்த இடத்தை தவிர மற்ற 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது.

    இந்த நிலையில் 4-ம் கட்ட தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 9 மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீநகர் தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளுக்கு நாளை 4-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகள், தெலுங்கானா வில் உள்ள 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் உள்ள 13 தொகுதிகள், மராட்டியத்தில் உள்ள 11 தொகுதிகள், மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகு திகள், பீகாரில் 5 தொகுதிகள், ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் தலா 4 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி ஆகிய தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடத்தப்படு கிறது.

    நாளை தேர்தலை சந்திப்பவர்களில் முக்கிய வேட்பா ளர்களாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியிலும், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா தொகுதி யிலும், ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ் வரி ராஜ மகேந்திரவரம் தொகுதியிலும், மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுச ராய் தொகுதியிலும், மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி தொகுதியிலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மேற்கு வங்காள மாநிலம் பஹரம்பூர் தொகுதி யிலும், நடிகர் சத்ருகன் சின்கா மேற்கு வங்காள மாநி லம் அசன்சோல் தொகுதியிலும், நடிகை மாதவி லதா ஐதராபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

    இந்த தேர்தலில் 170 பெண்கள் உள்பட மொத்தம் 1,717 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் 130 வேட்பாளர்களும், மராட்டியத்தில் 298 வேட்பாளர்களும், மத்திய பிரதேசத்தில் 74 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

    நாளை 4-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. 96 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத் தொகுதியை தவிர தேர்தல் நடக்கும் 542 தொகுதிகளிலும் 4 கட்ட தேர்தல்களையும் சேர்த்து மொத்தம் 379 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

    இன்னும் 163 தொகுதி களில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. 5-ம் கட்டமாக மே 20-ந்தேதி 49 தொகுதிகளுக்கும், 6-ம் கட்டமாக மே 25-ந்தேதி 57 தொகுதிகளுக்கும், 7-ம் கட்டமாக ஜூன் 1-ந்தேதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிந்ததும் ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    • பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இவர், தான் இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதி அளித்தார்.
    • தொழிலாளர்களின் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 2-வது கட்ட தேர்தலின் போது கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு எப்படியும் வெற்றி பெற்று தனது வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என பாரதிய ஜனதா திட்டமிட்டு தேர்தல் பணியாற்றியது. இதற்காக முக்கிய பிரமுகர்களை களம் இறக்கியது. இதில் முக்கியமானவர் நடிகர் சுரேஷ்கோபி.

    திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இவர், தான் இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதி அளித்தார். இதனை உறுதி செய்துள்ள பாரதிய ஜனதா நிர்வாகிகள், திருச்சூர் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ்கோபி வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளனர்.

    இந்து வாக்குகள் அனைத்தும் சுரேஷ்கோபி மீது குவிந்துள்ளதாக தெரிவிக்கும் பாரதிய ஜனதா, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சுரேஷ்கோபிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. தொழிலாளர்களின் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன என்றும் அவர்கள் நம்புகின்றனர். திருச்சூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அவருக்கு 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை கிடைக்கும் என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

    • இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விவாதத்தில் பங்கேற்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    • இந்த பொது விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது.

    உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என் ராம் ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தோதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், "பொதுமக்கள் என்ற முறையில், நாங்கள் இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் மட்டுமே கேட்டோம், ஆனால் அர்த்தமுள்ள பதில்கள் எதையும் கேட்கவில்லை. ஆகவே மக்கள் உண்மையை தெரிந்து கொண்டு வாக்கு செலுத்துவதற்கு இந்த விவாதம் தேவைப்படுகிறது.

    ஆகவே முக்கிய தேர்தல் பிரச்சினைகள் குறித்த இந்த விவாதத்தில் பங்கேற்குமாறு மோடியையும் ராகுல் காந்தியையும் நாங்கள் கேட்டு கொள்கிறோம். அவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை அவர்கள் பரிந்துரைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், "இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விவாதத்தில் பங்கேற்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த பொது விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது" என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விடுத்த அழைப்புக்கு ராகுல் காந்தி கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார். 

    • 4-வது கட்டத் தேர்தலுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் முதல் 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    இதனையடுத்து 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த 96 தொகுதிகள், ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மராட்டியம் (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8), காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் இடம்பெற்று உள்ளன.

    இதில் தெலுங்கானா, ஆந்திராவில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    4-வது கட்டத் தேர்தலுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் 96 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது.

    • 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம்.
    • 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்த பிறகும், தேர்தல் ஆணையம் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை.

    பத்திரிகையாளர் அமைப்பான பிரஸ் கிளப் ஆப் இந்தியா பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

    அக்கடிதத்தில், "கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம்.

    இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவில் நடைபெறும் பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளில் என்ன நடந்தது என்பதை பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும்.

    பத்திரிகையாளர் சந்திப்புகளில், பத்திரிகையாளர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றைத் தீர்த்து வைப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    பத்திரிகையாளர்கள் நடந்துகொண்டிருக்கும் தேர்தல்களைப் பற்றி மக்களுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தல் ஆணையர்கள் மின்னணு ஊடகங்கள் மூலம் வாக்காளர்களிடம் நேரடியாக பேசலாம்.

    நாடு முழுவதும் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்த பிறகும், தேர்தல் ஆணையம் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தாதது குறித்து பத்திரிகையாளர் அமைப்புகளான நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். கடந்த தேர்தல்களில் இவ்வாறு நடந்ததில்லை. இந்த புதிய மாற்றங்கள் தேர்தல் நேர்மையாக நடக்கிறதா என்ற அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

    இந்தச் சூழலில், ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகும் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று கோருகிறோம். மேலும், வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நாளுக்குள் பதிவான வாக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை மற்றும் இறுதியான வாக்குப்பதிவு சதவீதம் உள்ளிட்ட முழு வாக்குப்பதிவு தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று கோருகிறோம்.

    தேர்தல் முறையில் வாக்காளர்களின் நம்பிக்கையை உறுதிசெய்ய இத்தகைய வெளிப்படைத்தன்மை அவசியம். இந்தக் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆந்திரா தேர்தல் களத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் vs தெலுங்கு தேசம் இடையேதான் கடும் போட்டி.
    • ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெறுகிறது.

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா, கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். ஆந்திரா சட்டசபை தேர்தல் களத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்- பா.ஜ.க. - ஜனசேனா மற்றும் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆந்திரா தேர்தல் களத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் vs தெலுங்கு தேசம் இடையேதான் கடும் போட்டி. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட வெல்லாத காங்கிரஸ் இம்முறை ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளா ஆகியோரின் தாயார் விஜயம்மா, எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடப்பாவில் போட்டியிடும் தனது மகளிற்கு ஆதரவளிக்கும் விதமாக 'ஷர்மிளாவிற்கு ஓட்டு போடுங்கள்' என்று மக்களை வலியுறுத்தி தனது விருப்பத்தை தெரிவித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும்.
    • பதற்றமான ஓட்டுச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் நாளை காலை முதல் சென்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த மாதம் 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

    இதை தொடர்ந்து 3-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்தது. கடந்த 5-ந் தேதி பிரசாரம் ஓய்வுபெற்ற நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை 93 தொகுதிகளில் 3-வது கட்டத் தேர்தல் நடந்தது.

    அதில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் 4-வது கட்டத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

    4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    இந்த 96 தொகுதிகள், ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), மராட்டியம் (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8), காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் இடம்பெற்று உள்ளன. இதில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.


    அதுபோல ஆந்திரா மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. 4-வது கட்டத் தேர்தலுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக பிரசாரம் தீவிரமாக நடந்து வந்தது. பா.ஜ.க., காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆந்திராவில் முற்றுகையிட்டு ஆதரவு திரட்டினார்கள்.

    கடந்த 2 நாட்களாக தேசிய தலைவர்களும் அங்கு முகாமிட்டு ஓட்டு வேட்டையாடினார்கள்.

    பிரசாரம் நிறைவு பெற சில மணி நேரங்களே இருப்பதால் 96 தொகுதிகளி லும் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தேர்தல் பிரசாரம் மிகமிக தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்றத்துக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருப்பதால் அங்கு, தேர்தல் பிரசாரம் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடு வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஒடிசாவிலும் சட்டசபைத் தேர்தலுடன் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அங்கு அசைக்க முடியாத செல்வாக்குடன் இருக்கும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியமைக்கும் வகையில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.

    ஆனால் நவீன் பட்நாயக்கிடம் இருந்து கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.


    மராட்டியம், உத்தரபிர தேசம், மேற்குவங்காளம் மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் போட்டி போட்டு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

    96 தொகுதிகளிலும் இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு பிறகு தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள். முக்கியத் தொகுதிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நாளை எந்த கட்சியும், எந்த வகையிலும் பிரசாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 96 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கு நாளை காலையில் இருந்து பணிகள் தொடங்குகின்றன.

    ஓட்டுச் சாவடி அதிகாரிகள் வசம் மின்னணு எந்திரங்கள் ஒப்படைக்கப்படும். பதற்றமான ஓட்டுச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் நாளை காலை முதல் சென்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

    பாராளுமன்றத்தில் ஆட்சியை கைப்பற்ற அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கு 4-வது கட்டத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த 96 தொகுதிகளிலும் அதிக இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவை காங்கிரஸ் கூட்டணி கடுமையான சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 4-வது கட்டத் தேர்தலை பா.ஜ.க. தலைவர்கள் முக்கியமாக கருதி, பிரசாரத்தை தீவி ரப்படுத்தி இருக்கிறார்கள்.

    குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

    குஜராத்தில் உள்ள தாஹோத் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக ஜஸ்வந்த்சிங் பாபோர் உள்ளார்.

    இந்நிலையில், தாஹோத் மக்களவைத் தொகுதியில் உள்ள பர்தாம்பூர் கிராமத்தின் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அத்தொகுதியின் பாஜக எம்.பியின் மகன் விஜய் பாபோர் கைப்பற்றினார். அது சம்பந்தமான வீடியோவை சமூக வலைத்தளங்களில் அவர் நேரடியாக ஒளிபரப்பினார்.

    பின்பு விஜய் பாபோர் அந்த வீடியோவை நீக்கினார். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    தஹோத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரபாபென் தாவியாட் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், பர்தாம்பூர் வாக்குச்சாவடியில், மே 11-ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தேர்தல் ஆணைய தரவுகளின்படி, தாஹோத் தொகுதியில் 58.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி, இடஒதுக்கீடு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து மற்றும் செல்வத்தை மறுபங்கீடு செய்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பல கேள்விகள் எழுப்பியுள்ளார்.
    • மல்லிகார்ஜுன கார்கே, அரசியலமைப்பை சிதைப்பது, தேர்தல் பத்திர திட்டம், சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக பல கேள்விகளை கேட்டுள்ளார்.

    உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என் ராம் ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தோதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    அக்கடிதத்தில், "தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும் காங்கிரசும் நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படை தொடர்பான பல கேள்விகளை கேட்டுள்ளனர்.

    குறிப்பாக பிரதமர் மோடி அவர்கள் இடஒதுக்கீடு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து மற்றும் செல்வத்தை மறுபங்கீடு செய்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் அரசியலமைப்பை சிதைப்பது, தேர்தல் பத்திர திட்டம், சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக பல கேள்விகளை கேட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியுடன் பொது விவாதம் நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    பொதுமக்கள் என்ற முறையில், நாங்கள் இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் மட்டுமே கேட்டோம், ஆனால் அர்த்தமுள்ள பதில்கள் எதையும் கேட்கவில்லை. ஆகவே மக்கள் உண்மையை தெரிந்து கொண்டு வாக்கு செலுத்துவதற்கு இந்த விவாதம் தேவைப்படுகிறது.

    ஆகவே முக்கிய தேர்தல் பிரச்சினைகள் குறித்த இந்த விவாதத்தில் பங்கேற்குமாறு மோடியையும் ராகுல் காந்தியையும் நாங்கள் கேட்டு கொள்கிறோம். அவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை அவர்கள் பரிந்துரைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் முடிவை உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.
    • சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல்.கிரிக்கெட் சூதாட்டம் ஒரு புறம் களை கட்டி இருந்தாலும் மறுபுறம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பது தொடர்பான சூதாட்டமும் தற்போது இணையதளத்தை கலக்கி வருகின்றன.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் 3- வது முறையாக பாரதீயஜனதா கட்சி ஆட்சி அமைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா? என்ற பரபரப்பு எகிறி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிவை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.

    பாராளுமன்ற தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவுகள் தொடர்ச்சியாக நடந்து வரும் சூழ்நிலையில் இணையதளத்தில் சூதாட்டமும் களை கட்டி உள்ளது. இதற்காக தனி செயலிகள் மற்றும் இணையதளங்கள் முளைத்து உள்ளது. பெரும்பாலானவை இந்தியாவை தாண்டி மற்ற நாடுகளில் இருந்து இந்த இணையதளங்கள் இயங்கி வருகின்றன.

    இதில் 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும், ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும், வேட்பாளர்கள் எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது போன்ற சூதாட்டம் நடந்து வருகிறது.

    இதைத்தவிர தொகுதி வாரியாகவும் சூதாட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும், எந்த வேட்பாளர்கள் வெல்வார்கள் என இப்படி பல்வேறு வகைகளில் சூதாட்டம் நடக்கிறது. இந்த சூதாட்டம் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    குறைந்தது 100 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை போட்டி போட்டுக்கொண்டு பலர் பணத்தை கட்டி வருகின்றனர். யு.பி.ஐ மூலமாகவும், வங்கி கணக்குகள் மூலமாகவும் இந்த சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த சூதாட்டம் மேலும் சூடு பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் இது போன்ற இணையதள சூதாட்டங்கள் நடந்தது. ஆனால் அதை விட தற்போது அதிகளவில் இந்த சூதாட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×