என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐகூ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இந்திய சான்றளிக்கும் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.


    இந்தியாவில் ஐகூ 7 ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போது இரண்டு புதிய ஐகூ ஸ்மார்ட்போன்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. இதில் ஒன்று ஐகூ 7 என்றும் மற்றொரு மாடல் ஐகூ நியோ 5 என கூறப்படுகிறது.

    சமீபத்தில் ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் அறிமுகமானதில் இருந்து இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வந்தது. ஏற்கனவே ஐகூ 7 இந்திய வேரியண்ட் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்தது. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.

     ஐகூ 7

    பி.ஐ.எஸ். தளத்தில் இடம்பெற்று இருக்கும் இரண்டு ஐகூ ஸ்மார்ட்போன்கள் I2009 மற்றும் I2011 எனும் மாடல் நம்பர்களை கொண்டுள்ளன. இதில் I2009 ஐகூ 7 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்றும் I2011 ஐகூ நியோ 5 மிட்-ரேன்ஜ் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். தளத்தில் I2012 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. 

    தற்போதைய தகவல்களின்படி ஐகூ பிராண்டு இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஐகூ பிராண்டின் ஐகூ 3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ஸ்மார்ட்போன் சந்தையில் உலகின் மூன்றாவது பெரும் நிறுவனமாக சீனாவை சேர்ந்த நிறுவனம் உருவெடுக்கும் என கூறப்படுகிறது.


    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல ஆண்டுகளாக சியோமி நிறுவனம் முன்னணி இடத்தில் உள்ளது. தற்போதைய தகவல்களின் படி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் 2021 ஆண்டு மூன்றாவது இடத்தை பிடிக்கும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஹூவாய் நிறுவனம் மூன்றாவது பெரும் நிறுவனமாக இருக்கிறது.

    ஹூவாய் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சியோமி நிறுவனம் உலகின் மூன்றாவது பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக உருவெடுக்கும் என ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆசியா பசிபிக், மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளில் சியோமி கவனம் ஈர்த்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     சியோமி ஸ்மார்ட்போன்

    அந்த வகையில் 2021 ஆண்டிற்குள் சியோமி உலகின் மூன்றாவது பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனம் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. இந்தியா மற்றும் ரஷ்ய சந்தைகளில் சியோமி நிறுவனம் அபார வளர்ச்சியை பெற்று வருகிறது. இதேபோன்று மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளிலும் சியோமி சாதனங்கள் அதிகளவு விற்பனையாகி வருகின்றன.

    2021 சீன ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களுக்கான ஆண்டாக இருக்கும். சியோமி மட்டுமின்றி ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் ஆசியா பசிபிக் பகுதிக்கான முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறலாம் என ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் லிண்டா சு தெரிவித்தார். 
    ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரத்தை அதன் சி.இ.ஒ. அறிவித்து இருக்கிறார்.


    ரியல்மி நார்சோ 30 சீரிஸ் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார். புதிய ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    முன்னதாக ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாத வாக்கில் வெளியிடப்பட்டது. சமீபத்திய யூடியூப் நேரலையில், ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் நார்சோ 30 4ஜி வெர்ஷன் மட்டும் வெளியிட திட்டமிட்டு, தற்போது 4ஜி மட்டுமின்றி 5ஜி வெர்ஷனும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

     ரியல்மி நார்சோ 30 ப்ரோ

    மேலும் ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒரே நிகழ்வில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ரியல்மி நார்சோ 30 பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. 

    ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் நார்சோ 30ஏ மாடல்கள் தற்போது ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ரியல்மி யுஐ கொண்டுள்ளது. விரைவில் இரு மாடல்களுக்கும் 2021 மூன்றாவது காலாண்டு வாக்கில் ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19 சீரிஸ் மாடல்கள் அசத்தல் சலுகைகளுடன் விற்பனைக்கு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஒப்போ நிறுவனம் எப்19 மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை சில தினங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களின் விற்பனையும் இன்று (மார்ச் 17) துவங்குகிறது.

    ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி அமேசான் தளத்தில் ரூ. 25,990 விலையிலும், ஒப்போ எப்19 ப்ரோ ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் முன்னணி வலைதளங்களில் ரூ. 21,490 எனும் துவக்க விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. 

     ஒப்போ எப் 19 ப்ரோ பிளஸ்

    இன்று துவங்கி மார்ச் 19 வரை இரு மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் அசத்தலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பணம் செலுத்தாமல் மாத தவணை முறையை பெறும் வசதி வழங்கப்படுகிறது.

    மார்ச் 20 ஆம் தேதிக்குள் புது ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் one-time screen replacement வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் சேதமடைந்தால் மாற்றிக் கொள்ளலாம். மார்ச் 23 ஆம் தேதிக்குள் வாங்குவோர் ஒப்போ என்கோ டபிள்யூ11 வாங்கும் போது ரூ. 999 தள்ளுபடியும், ஒப்போ பேண்ட் ஸ்டைல் ரூ. 2499 விலைக்கும் வாங்க முடியும்.

    இத்துடன் உறுதியான பை பேக் சலுகை வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 70 சதவீதம் பை பேக் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 19 ஆம் தேதிக்குளஅ வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி, எப்19 ப்ரோ மாடலுக்கு ரூ. 1500 உடனடி தள்ளுபடி பெறலாம். 
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி100 மாடல் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 25ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது புது ஸ்மார்ட்போனின் டீசரை மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது. 

    புதிய மோட்டோ ஜி100 அந்நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்த மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா வெளியிட்டு இருக்கும் டீசர்களில் தேதியை குறித்து கொள்ளுங்கள் எனும் வாசகம் மற்றும் மார்ச் 25 மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தேதியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்த டீசர்களில் தெரியவரும்.

    முந்தைய தகவல்களின் படி மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கீழ்புறத்தில் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படும் என கூறப்பட்டது. மேலும் இதில் குவாட் கேமரா சென்சார், டூயல் செல்பி கேமரா வழங்கப்படலாம். 
    விவோ நிறுவனத்தின் வி சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு புதிய அம்சங்கள் நிறைந்த ஒஎஸ் அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.


    விவோ நிறுவனம் தனது வி17 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கி வருகிறது. புது அப்டேட் பன்டச் ஒஎஸ் 11 யுஐ உடன் வழங்கப்படுகிறது. விவோ வி17 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 சார்ந்த பன்டச் ஒஎஸ் 9.2 ஒஎஸ் உடன் 2019 டிசம்பர் வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக இந்தியாவில் மட்டும் இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் இந்த அப்டேட் வழங்கப்படலாம்.

    புதிய பன்டச் ஒஎஸ் அப்டேட் அளவில் 3.43 ஜிபியாக இருக்கிறது. இந்த அப்டேட் PD1948F_EX_A6.70.8 எனும் பில்டு நம்பர் கொண்டுள்ளது. விவோ வி17 பயன்படுத்துவோர் புது அப்டேட் மாற்றங்களை ஸ்கிரீன்ஷாட் வடிவில் ட்விட்டரில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். 

     விவோ வி17

    சிலர் புது அப்டேட் பிழைகள் நிறைந்துள்ளது என குற்றஞ்சாட்டி வருகின்றனர். எதுவாயினும் புது அப்டேட் வேண்டும் என நினைப்போர் இந்த அப்டேட்டை டவுன்லோட் செய்யலாம். இவ்வாறு செய்ய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சிஸ்டம் அப்டேட் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். 

    விவோ வி17 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 8ஜிபி ரேம், 12ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் 48 எம்பி குவாட் கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. முன்னதாக விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் மாடல்களில் இப்படி ஒரு சங்கதி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி மாடல்களில் டவுன்லோட் வேகம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அமெரிக்க சந்தையில் கிடைக்கும் சுமார் 25 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் 5ஜி டவுன்லோட் வேகம் ஐபோன் மாடல்களை விட அதிகமாக இருக்கிறது என ஒபன்சிக்னல் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    25 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் 60 சதவீதம் சாம்சங் நிறுவன மாடல்கள் ஆகும். ஐபோன் பயனர்களின் ஒட்டுமொத்த 4ஜி டவுன்லோட் வேகத்தை விட ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களில் 2.3 மடங்கு அதிவேக டவுன்லோட் கிடைத்தது. 5ஜி டவுன்லோட் வேகத்தை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி 56Mbps வேகம் கொடுத்து முதலிடம் பிடித்து இருக்கிறது. டிசிஎல் ரெவல் 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 8டி பிளஸ் முறையே 49.8Mbps மற்றும் 49.3Mbps வேகம் கொடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்து உள்ளன.

     ஐபோன் 12

    5ஜி கிடைக்கும் பகுதிகளில் ஆப்பிள் பயனர்கள் சாம்சங் மாடல்களில் கிடைப்பதை விட 18 சதவீதம் குறைவான டவுன்லோட் வேகத்தை அனுபவிக்கின்றனர். இதுபற்றிய தகவல்கள் நவம்பர் 11, 2020 முதல் பிப்ரவரி 26, 2021 வரையிலான காலக்கட்டங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டு உள்ளன. அதிவேக 5ஜி டவுன்லோட் வழங்கிய மாடல்களின் டாப் 10 பட்டியலில் மற்ற இரண்டு கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்கள் இடம்பெற்று உள்ளன. 

    இதுதவிர மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களான மோட்டோரோலா ரேசர் 5ஜி, சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் போல்டு 2 5ஜி உள்ளிட்டவையும் இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றன. இந்த மாடல்கள் முறையே 44Mbps, 44.7Mbps மற்றும் 39.4Mbps வேகம் கொடுத்துள்ளன.
    கூகுள் நிறுவனம் விரைவில் புது பிக்சல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனம் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கான பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இது ஏற்கனவே இங்கு விற்பனையாகும் பிக்சல் 4ஏ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

     கூகுள் பிக்சல் 4ஏ

    இந்தியாவில் பிக்சல் 4ஏ மாடலை விட பிக்சல் 5ஏ மாடலை இருமடங்கு அதிக யூனிட்களை கொண்டுவர இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்தது. பிக்சல் 5ஏ பற்றிய அறிவிப்பை தொடர்ந்து இதன் வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

    மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாகும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ஓரளவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். புது பிக்சல் போன் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது.
    நார்டு மாடலில் சிறு கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டை ஒன்பிளஸ் மீண்டும் வழங்க துவங்கி இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்சிஜன் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு இந்த மாத துவக்கத்தில் வழங்கியது. பின் இந்த அப்டேட்டில் கோளாறு இருப்பதாக கூறி அப்டேட் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தியது. 

    தற்போது பிழை சரி செய்யப்பட்டதை தொடர்ந்து புது ஆண்ட்ராய்டு அப்டேட் மீண்டும் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு ஆக்சிஜன் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மீண்டும் வழங்கப்படுகிறது. 

    ஒன்பிளஸ் நார்டு மாடலில் ஆண்ட்ராய்டு 10 வைத்திருப்போருக்கு தற்போதும் புது அப்டேட் அளவு 2.9 ஜிபியாகவே இருக்கிறது. ஏற்கனவே ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்-ஐ அப்டேட் செய்தவர்களுக்கு இந்த அப்டேட் வெறும் 11 எம்பி தான்.
    போக்கோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகமாகிறது.


    போக்கோ நிறுவனம் தனது எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனினை மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ எப்1 மாடலுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய போக்கோ எப்1 ஸ்மார்ட்போனினை போன்றே புதிய எக்ஸ்3 மாடலுக்கும் #PROformance ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போக்கோ நிறுவனம் மார்ச் 22 ஆம் தேதி சர்வதேச நிகழ்வு பற்றி அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் போக்கோ எப்3 அறிமுகம் செய்யப்படலாம். இது ரெட்மி கே40 மாடலின் சர்வதேச எடிஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    அம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் FHD+120Hz AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம். 

    இந்த ஸ்மார்ட்போன் பிராஸ்ட் புளூ, பேண்டம் பிளாக் மற்றும் மெட்டல் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 27 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம்.
    ரியல்மி நிறுவனத்தின் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் 108 எம்பி கேமரா கொண்ட புது ஸ்மார்ட்போனை மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. முன்னதாக மார்ச் 23 ஆம் தேதி ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    புதிய 108 எம்பி கேமரா ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் வெளியிட்டார். டீசர் வீடியோவில் இரண்டு ஸ்போர்ட்ஸ் கார்கள் இன்பினிட்டி டிசைன் உருவாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. டீசர் வீடியோவில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 

    ரியல்மி டீசர்

    எனினும், தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 8 சீரிஸ் மாடல்கள் மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படகிறது. புது சீரிஸ் ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இரு மாடல்களுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

    முந்தைய டீசர்களில் ஸ்டான்டர்டு மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதன்படி ப்ரோ வேரியண்ட் 108 எம்பி கேமரா கொண்டிருக்கும். இதுதவிர இரண்டு மாடல்களிலும் மொத்தம் நான்கு கேமரா செட்டப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கலாம்.
    ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வழக்கமான மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஒப்போ மட்டுமின்றி பல்வேறு இதர சீன நிறுவனங்களும் இந்த ஆண்டு தங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிட திட்டமிட்டு வருகின்றன. முன்னதாக பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட கான்செப்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கின்றன. 

     ஒப்போ ஸ்மார்ட்போன் கான்செப்ட்

    கூகுள் நிறுவனமும் இந்த ஆண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு சாம்சங் நிறுவனம் டிஸ்ப்ளேக்களை வினியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    இது திறக்கப்பட்ட நிலையில் 7.7 இன்ச் அளவிலும், வெளிப்புறம் 2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் தனது மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதுதவிர சாம்சங் நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய மாடல்களை மேம்படுத்தி புது மாடல்களை அறிமுகம்  செய்ய இருக்கிறது.  
    ×