என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய ஆடியோ சாதனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    ஹெச்எம்டி குளோபல் புதிய நோக்கியா பிராண்டு ஆடியோ சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஏப்ரல் 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகிறது. புதிய ஆடியோ சாதனம் மழை, கூட்ட நெரிசல் மிக்க பகுதி, உடற்பயிற்சி, விளையாட்டு என பல செயல்களின் போது பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஏப்ரல் 5 ஆம் தேதி புதிய இயர்போன் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் டீசர்களும் புதிய ஆடியோ சாதனம் இயர்போனாக இருக்கும் என்பதையே உணர்த்துகிறது.

     ப்ளிப்கார்ட்

    முன்னதாக வெளியான தகவல்களின் படி நோக்கியா பிராண்டு விரைவில் ப்ளூடூத் வசதி கொண்ட நெக்பேண்ட் இயர்போன்களை ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. புதிய இயர்போன் ப்ளூடூத் 5.1 வசதி, குவால்காம் நிறுவனத்தின் ஆப்ட்எக்ஸ் ஹெச்டி ஆடியோ தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இத்துடன் ரேபிட் சார்ஜிங் வசதி, பிளாக், புளூ மற்றும் கோல்டன் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆடியோ சாதனம் தவிர ஏப்ரல் 8 ஆம் தேதி நோக்கியா எக்ஸ் சீரிஸ் மற்றும் ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    ஆப்பிள் நிறுவனத்தின் புது ஐபோன் எஸ்இ மாடல் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, 5ஜி வசதியுடன் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் எஸ்இ 2020 மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஐபோன் 8 சார்ந்த வடிவமைப்பே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐபோன் எஸ்இ புது மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

     ஐபோன் எஸ்இ

    அதன்படி மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்இ 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என்றும் இதில் 4.7 இன்ச் எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஐபோன் எஸ்இ மாடல் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 2023 வாக்கில் மற்றொரு ஐபோன் எஸ்இ மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த மாடல் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2023 ஆண்டு அறிமுகமாகும் ஐபோன் 14 சீரிஸ் பன்ச்-ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவின் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது. அந்த வகையில் புது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போனின் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்டை சில வாரங்களுக்கு முன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது.

    கனெக்டிவிட்டி மட்டுமின்றி இரு மாடல்களின் பிராசஸர் மற்றும் ரிப்ரெஷ் ரேட் உள்ளிட்டவை முற்றிலும் வேறுபடும் என தெரிகிறது. இதன் 5ஜி வேரியண்ட் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அந்த வகையில் இதன் இந்திய வேரியண்டும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் SM A526B/DS எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இதே போன்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எப்சிசி வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. 

    ஐரோப்பிய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 429 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆசம் பிளாக், ஆசம் புளூ, ஆசம் வைலட் மற்றும் ஆசம் வைட் போன்ற நிறங்களில் வெளியிடப்பட்டது.
    சியோமி நிறுவனம் தனது புதிய எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

    சியோமி நிறுவனம் தனது எம்ஐ11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏப்ரல் 23 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என சியோமி தெரிவித்து உள்ளது.

    முன்னதாக இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சரவ்தேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை எம்ஐ11 அல்ட்ரா மாடலில் 6.4 இன்ச் E4 AMOLED குவாட் கர்வ்டு டாட் டிஸ்ப்ளே, பின்புறம் 1.1 இன்ச் AMOLED இரண்டாவது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சியோமி டீசர்

    சியோமி எம்ஐ11 அல்ட்ரா அம்சங்கள்

    - 6.81 இன்ச் 3200×1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரல்லா கிளாஸ் விக்டஸ்
    - 1.1 இன்ச் 126x294 பிக்சல் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
    - அட்ரினோ 660 GPU
    - 8 ஜிபி LPPDDR5 6400MHz ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி
    - 12 ஜிபி LPPDDR5 6400MHz ரேம்,  256 ஜிபி / 512 ஜிபி UFS 3.1 மெமரி
    - டூயல் சிம் 
    - எம்ஐயுஐ 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 50 எம்பி பிரைமரி கேமரா, 1.4μm, f/1.95, OIS, LED பிளாஷ்
    - 48 எம்பி 128° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 48 எம்பி டெலிபோட்டோ கேமரா, OIS, f/4.1
    - 20 எம்பி செல்பி கேமரா, 0.8μm, f/2.2
    - இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 67 வாட் வயர்டு / வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங்
    - 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் 
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப் சீரிசில் இரண்டு புதிய மாடல்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    ப்ளிப்கார்ட் தளத்தில் கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்கள் பிரத்யேக வலைப்பக்கத்தில் விவரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இரு மாடல்களும் வாட்டர்-டிராப் ரக நாட்ச் கொண்டிருக்கிறது. இத்துடன் கேலக்ஸி எப்1 இரு ஸ்மார்ட்போன்களில் உயர்ந்த மாடலாக இருக்கும் என தெரிகிறது.

     சாம்சங் டீசர்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எப்02எஸ் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள், 13 எம்பி பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி எப்12 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, குவாட் கேமரா சென்சார்கள், யுஎஸ்பி டைப் சி போர்ட், எக்சைனோஸ் 850 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் தனது சி சீரிசில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் ரியல்மி சி25, ரியல்மி சி20 மற்றும் சி21 ஆகிய ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 8 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. மூன்று ஸ்மார்ட்போன்களிலும் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர ரியல்மி சி21 மற்றும் சி25 மாடல்கள் டியுவி ரெயின்லேண்ட் சான்று பெறுகின்றன. சி சீரிஸ் மாடல்கள் இதுபோன்ற சான்று பெறுவது இதுவே முதல்முறை ஆகும். ரியல்மி சி25 மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

     ரியல்மி டீசர்

    இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 13 எம்பி ஏஐ மூன்று கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டரி புளூ மற்றும் வாட்டரி கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கின்றன. மேலும் இவை பிரத்யேக வடிவமைப்பு கொண்டுள்ளன.

    ரியல்மி சி20 மற்றும் சி21 மாடல்களில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்படுகின்றன. ரியல்மி சி21 மாடலில் 13 எம்பி ஏஐ மூன்று கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ரியல்மி சி20 மாடலில் 8 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

    ரியல்மி சி20 மாடல் கூல் புளூ மற்றும் கூல் கிரே நிறங்களிலும் ரியல்மி சி21 மாடல் கிராஸ் புளூ மற்றும் கிராஸ் பிளாக் நிறங்களிலும் கிடைக்கின்றன. புதிய ரியல்மி சி20, சி21 மற்றும் சி25 ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. 
    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களின் விற்பனையில் கிடைத்த லாபம் பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களின் இரண்டு வார விற்பனையில் ரூ. 500 கோடி வருவாய் கிடைத்ததாக சியோமி அறிவித்து இருக்கிறது. ரெட்மி நோட் 10 சீரிசில் - ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

     ரெட்மி நோட் 10

    ஒவ்வொரு மாடலும் மார்ச் 16, மார்ச் 17 மற்றும் மார்ச் 18 ஆகிய தேதிகளில் முதல் விற்பனைக்கு வந்தன. இதுவரை நடைபெற்ற இரு விற்பனையில் மொத்தம் எத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன என்பது குறித்து சியோமி எந்த தகவலையும் வழங்கவில்லை. 

    எனினும், அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சுமார் 2.27 லட்சம் முதல் 4.16 லட்சம் யூனிட்கள் வரை விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. ரெட்மி நோட் 10 சீரிஸ் துவக்க விலை ரூ. 11,999 ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15,999 முதல் துவங்குகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 10 சீரிஸ் அடுத்த விற்பனை இன்று (ஏப்ரல் 1) நடைபெறுகிறது.
    ஒப்போ நிறுவனம் தனது எப்19 ஸ்மார்ட்போனினை விரைவில் சர்வதேச சந்தையில் வெளியிட இருக்கிறது.


    ஒப்போ எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது ஒப்போ நிறுவனம் புதிய எப்19 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     ஒப்போ எப்19 ப்ரோ

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ஒப்போ அறிவித்து இருந்தது. அந்த வகையில் சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ எப்19 ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 4310 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
    சியோமி நிறுவனம் புதிய கார்பரேட் லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் புதிய லோகோவை அறிமுகம் செய்தது. புதிய லோகோ உயிரோட்டத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது பிரீமியம் சந்தையில் சியோமியின் கால்தடத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும், பிராண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

    புதிய லோகோவை உலக புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கென்யா ஹாரா வடிவமைத்து இருக்கிறார். புது லோகோ முந்தைய லோகோவை போன்றே ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது. இதே லோகோ பிளாக் மற்றும் சில்வர நிறங்கள் உயர் ரக சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் என சியோமி தெரிவித்து உள்ளது. 

     சியோமி லோகோ

    லோகோ அறிமுகம் செய்ததுடன், சியோமி நிறுவனம் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் களமிறங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதற்கென சியோமி நிறுவனம் முதற்கட்டமாக 10 பில்லியன் யுவான்களை முதலீடு செய்ய இருக்கிறது. இதுதவிர அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.

    சியோமியின் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்திற்கான தலைமை செயல் அதிகாரியாக சியோமி தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் பொருப்பேற்கிறார். 
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலின் 5ஜி வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது வேரியண்டில் 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி SA/NSA, 8 ஜிபி ரேம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1 வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி

    சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி அம்சங்கள்

    - 6.5 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    -  8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1
    - ஹைப்ரிட் டூயல் சிம் 
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8, PDAF, OIS
    - 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
    - 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - யுஎஸ்பி டைபி சி
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
    - 4500 எம்ஏஹெச் பேட்டரி
    - 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி மாடல் கிளவுட் லாவண்டர், கிளவுட் மின்ட் மற்றும் கிளவுட் நேவி நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 47,999 அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 55,999 ஆகும்.
    அசத்தலான அம்சங்கள் நிறைந்த புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. எம்ஐ மிக்ஸ் போல்டு என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போனில் 8.01 இன்ச் WQHD+ மடிக்கக்கூடிய உள்புற டிஸ்ப்ளே, 6.52 இன்ச் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா மற்றும் லிக்விட் லென்ஸ் தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது இகும். 

     எம்ஐ மிக்ஸ் போல்டு

    எம்ஐ மிக்ஸ் போல்டு அம்சங்கள்

    - 8.01 இன்ச் 2480x1860 பிக்சல் QHD+ AMOLED HDR10 + டிஸ்ப்ளே
    - 6.5 இன்ச் 2520x840 பிக்சல் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
    - அட்ரினோ 660 GPU
    - 12 ஜிபி LPPDDR5 3200MHz  ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
    - 12 ஜிபி / 16 ஜிபி LPPDDR5 3200MHz ரேம், 512 ஜிபி (Ultra) UFS 3.1 மெமரி
    - டூயல் சிம் 
    - எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 108 எம்பி பிரைமரி கேமரா, f/1.75,  LED பிளாஷ், லிக்விட் லென்ஸ்
    - 8 எம்பி கேமரா
    - 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
    - 20 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யுஎஸ்பி டைப் சி
    - 5,020 எம்ஏஹெச் பேட்டரி

    எம்ஐ மிக்ஸ் போல்டு ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை 9999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 1,11,735 என்றும் 12 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை 10999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 1,22,905 என்றும் 12 ஜிபி + 512 ஜிபி கிளாஸ் பிளாக் மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி செராமிக் ஸ்பெஷல் எடிஷன் விலை 12,999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 1,45,255 என நி்ர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    பயனாளர் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்த விவகாரம் குறித்து மொபிகுவிக் விளக்கம் அளித்து இருக்கிறது.

    மொபிகுவிக் சேவையை பயன்படுத்துவோரில் சுமார் 35 லட்சம் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்து இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர் ராஜசேகர் ராஜாரியா தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்த செய்திகள் பரவலாக வெளியாகி வருகிறது. 

    பயனாளிகள் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்த விவகாரம் குறித்து பதில் அளித்த மொபிகுவிக், இணையத்தில் வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்து உள்ளது. 

     மொபிகுவிக்

    எனினும், பயனர் தகவல்கள் விற்பனைக்கு வந்து இருப்பதாக பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஹேக்கரான ராபர்ட் பேடிஸ்ட்-ம் தெரிவத்து இருக்கிறார். இணைய வரலாற்றில் மிகப்பெரும் டேட்டா லீக் இது என அவர் தெரிவித்தார். மொத்தம் 36,099,759 தரவுகள் மொத்தம் 8.2 டெராபைட் அளவு கொண்டுள்ளன. இவை மொத்தம் 1.5 பிட்காயின்கள் அதாவது 84 ஆயிரம் டாலர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    `பாதுகாப்பு வல்லுநர்கள் என கூறிக் கொண்டு தகவல்களை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் முழு ஆய்வு நடத்தப்பட்டது. எங்கள் தரப்பில் எவ்வித பாதுகாப்பு முறைகேடும் நடைபெறவில்லை. எங்களின் பயனர் விவரங்கள் முழுவதும் பாதுகாப்பாக இருக்கிறது,' என மொபிகுவிக் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளது.
    ×