என் மலர்
தொழில்நுட்பம்
சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி பட்ஸ் 2 விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புது கேலக்ஸி பட்ஸ் 2 ஏற்கனவே அறிமுகமான கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் மாடல்களை விட வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி பட்ஸ் 2 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் விலை கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடலை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இந்த மாடல் தலைசிறந்த இன்-இயர் டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய கேலக்ஸி பட்ஸ் 2 வைட், லிலக் மற்றும் ஆலிவ் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி பட்ஸ் 2 விலை 149 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11,100 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த நின்டென்டோ ஸ்விட்ச் புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
நின்டென்டோ ஸ்விட்ச் (OLED மாடல்) புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இது இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என தெரிகிறது.

புதிய நின்டென்டோ ஸ்விட்ச் மாடல் தற்போது கிடைக்கும் அனைத்து நின்டென்டோ ஸ்விட்ச் கேம்கள் மற்றும் ஜாய்-கான் கண்ட்ரோலர்களை சப்போர்ட் செய்யும். புதிய OLED மாடலில் சற்றே பெரிய டிஸ்ப்ளே, முந்தைய மாடலை விட இருமடங்கு இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
பெரிய டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தாலும், புதிய கன்சோல் அளவில் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய நின்டென்டோ ஸ்விட்ச் OLED மாடல் விலை 349.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 26,100 ஆகும். முன்னதாக 2017-இல் அறிமுகம் செய்யப்பட்ட நின்டென்டோ ஸ்விட்ச் விலை 299.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22,400 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
ரியல்மியின் டிசோ பிராண்டு மொபைல் போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
டிசோ பிராண்டின் புது வயர்லெஸ் இயர்போன் மாடல்கள் கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது டிசோ பிராண்டு புது பீச்சர் போன் மாடல்கள் சத்தமின்றி அறிமுகமாகி இருக்கின்றன. இரு மாடல்களும் டிசோ ஸ்டார் 300 மற்றும் ஸ்டார் 500 என அழைக்கப்படுகின்றன. முன்னதாக இரு மொபைல் போன்களும் எப்.சி.சி. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய 2ஜி மொபைல் போன் மாடல்களில் Spreadtrum SC6531E பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் QQVGA மற்றும் QVGA ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பிரைமரி கேமரா, ஆங்கிலம் உள்பட தமிழ், இந்தி, குஜராத்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கும் வசதி உள்ளன.
டிசோ ஸ்டார் 300 அம்சங்கள்
- 1.77 இன்ச் 160x120 பிக்சல் QQVGA LCD ஸ்கிரீன்
- 26MHz SC6531E பிராசஸர்
- 32MB ரேம்
- 32MB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- 0.08 எம்பி பிரைமரி கேமரா
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்பி3 பிளேயர்
- 2ஜி GSM 900/1800, ப்ளூடூத் 2.1, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 2550 எம்.ஏ.ஹெச். பேட்டரி

டிசோ ஸ்டார் 500 அம்சங்கள்
- 2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
- 26MHz SC6531E பிராசஸர்
- 32MB ரேம், 32MB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- 0.3 எம்பி பிரைமரி கேமரா
- ஸ்ட்ரிப் டார்ச்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்.பி. 3 பிளேயர்
- 2ஜி GSM 900/1800, ப்ளூடூத் 2.1, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 1900 எம்.ஏ.ஹெச். பேட்டரி
டிசோ ஸ்டார் 300 மாடல் பிளாக், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 ஆகும். டிசோ ஸ்டார் 500 மாடல் பிளாக், கிரீன் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 ஆகும். இவற்றின் விற்பனை ஜூலை 8 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் உருவாக்கி வரும் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 2019 வாக்கில் நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அதன்பின் இந்த மாடலுக்கான மேம்பட்ட வேரியண்ட் இதுவரை அறிமுகம் செய்யப்படவே இல்லை. எனினும், நோக்கியா 9 சீரிஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் உருவாக்கப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா 9.3 ஸ்மார்ட்போனினை வெளியிட ஹெச்.எம்.டி. குளோபல் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சீனாவுக்கான ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவன மேலாளர் ஷாங் யுஷெங், புதிதாக 5ஜி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 11 ஆம் தேதி சீன சந்தையில் வெளியாகும் என தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கத்திய நாடுகளில் பிளாக் பிரைடே விற்பனை போன்று சீனாவில் நவம்பர் 11 ஆம் தேதி சிங்கில்ஸ் டே விற்பனை நடைபெற்று வருகிறது.
புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் நோக்கியா X50 மற்றும் நோக்கியா X70 ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் வெளியிட இருப்பதாக கூறப்பட்டது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F22 ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் கேலக்ஸி F22 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இது 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி F22 அம்சங்கள்
- 6.4 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 இன்பினிட்டி-யு HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
- ARM மாலி-G52 2EEMC2 GPU
- 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
- 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யு.ஐ. கோர் 3.1
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 13 எம்பி செல்பி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- சாம்சங் பே மினி
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி F22 ஸ்மார்ட்போன் டெனிம் பிளாக் மற்றும் டெனிம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,499 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக புது ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் புது 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு புது ஸ்மார்ட்போனிற்கான டீசரை அமேசானில் வெளியிட்டுள்ளது. டீசரில் “Fast and Futuristic” வாசகம் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பெயர் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், புகைப்படத்திற்கான இணைய முகவரியில் புது ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10டி 5ஜி என தெரியவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 5ஜி மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலும் ரெட்மி நோட் 10 5ஜி மாடலின் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 10டி 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.5 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
- டூயல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் கிரீன், புளூ, சில்வர் மற்றும் கிரே நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.
ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புது டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் டேப்லெட் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) பெயரில் புது சாதனம் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. புது ஒன்பிளஸ் பேட் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

தற்போது புது ஒன்பிளஸ் பேட் 'examination' பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் டிவி, அணியக்கூடிய சாதனங்களை தொடர்ந்து ஒன்பிளஸ் தற்போது டேப்லெட் பிரிவில் களமிறங்க இருக்கிறது. வரும் நாட்களில் புது ஒன்பிளஸ் பேட் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போவுடன் இணைக்கப்படுவதாக இருநிறுவனங்களும் அறிவித்தன. அதன்படி ஆக்சிஜன் ஒஎஸ் கஸ்டம் ரோம் ஒப்போவின் கலர் ஒஎஸ் உடன் இணைக்கப்பட இருக்கிறது. இணைப்புக்கு பின் ஆக்சிஜன் ஒஎஸ்-இல் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
ஹெச்எம்டி குளோபல் அறிமுகம் செய்து இருக்கும் நோக்கியா G20 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் நோக்கியா G20 இந்த வாரம் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்சங்களை பொருத்தவரை புது நோக்கியா G20 மாடலில் 6.5 இன்ச் HD+V நாட்ச் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா G20 அம்சங்கள்
- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 வி-நாட்ச் டிஸ்ப்ளே
- 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா
- 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX2)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5050 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
நோக்கியா G20 ஸ்மார்ட்போன் நைட் மற்றும் கிளேசியர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 ஆகும். புது நோக்கியா ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 7 ஆம் தேதி துவங்குகிறது.
ரியல்மி நிறுவனத்தின் துணை பிராண்டான டிசோ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது சாதனத்திற்கான டீசரை வெளியிட்டு உள்ளது.
ரியல்மியின் துணை பிராண்டு டிசோ இந்தியாவில் புது பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த வாரம் டிசோ பிராண்டின் புது ஆடியோ சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வரிசையில் தற்போது பீச்சர் போன் அறிமுகமாக இருக்கிறது. இந்த போனில் கேமரா வழங்கப்படுகிறது.

டீசரின் படி புது பீச்சர் போன் அசத்தலான அனுபவத்தை வழங்கும் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. புது பீச்சர் போன் ஸ்டார் 5 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.
ஸ்டார் சீரிசில் குறைந்த விலை மொபைல் போன்களை அறிமுகம் செய்ய டிசோ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டிசோ ஸ்டார் 5 விவரங்கள் எப்.சி.சி. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி இந்த மாடலில் டூயல் சிம் வசதி, 2ஜி கனெக்டிவிட்டி, மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 1830 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டது.
விவோ நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
விவோ நிறுவனம் டிரோன் செயல்பாடுகள் கொண்ட பறக்கும் கேமரா தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போனில் வழங்க திட்டமிட்டுள்ளது. பறக்கும் கேமரா கொண்ட புது ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பெற விவோ விண்ணப்பித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா டிரோன் போன்று பறக்கும் திறன் கொண்டிருக்கிறது.

சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விவோ விண்ணப்பித்து இருக்கும் புது தொழில்நுட்பம் ஜூலை 1 ஆம் தேதி வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கின்றன. அதன்படி பறக்கும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் தோற்றத்தில் தற்போது அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது.
ஸ்மார்ட்போனில் உள்ள புதுவிதமான கேமராவை பறக்க வைக்க நான்கு ப்ரோப்பெல்லர்கள் உள்ளன. இதற்கென தனியாக பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த கேமரா மாட்யூலில் இரண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பரிசோதனை கட்டத்தில் உள்ள புது தொழில்நுட்பம் உண்மையில் சாத்தியமாக மேலும் சில ஆண்டுகள் ஆகும்.
சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் மாடல்களுக்கு 2 ஆண்ட்ராய்டு அப்டேட், 3 MIUI அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.
சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமான ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருந்தது. பின் இந்த ஸ்மார்ட்போனிற்கு MIUI 12 அப்டேட் வழங்கப்பட்டது.

அந்த வரிசையில் தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கான ஆண்ட்ராய்டு 11 அப்டேட் V12.0.1.0.RJXINXM பில்டு நம்பர் கொண்டுள்ளது. தற்போது இது ஸ்டேபில் பீட்டா வடிவில் வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்த அப்டேட் அனைவருக்கும் கிடைக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது. வழக்கமாக ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட், மூன்று MIUI அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.
இசட்.டி.இ. நிறுவன அதிகாரிகளில் ஒருவர் புது ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு இருக்கிறார்.
இசட்.டி.இ. நிறுவனம் 20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இதுபற்றிய தகவலை அந்நிறுவன அதிகாரி ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீப காலங்களில் அசுஸ் மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்கள் 18 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், இசட்.டி.இ. உருவாக்கும் 20 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டியை மேலும் கடுமையாக்கும் என தெரிகிறது. இதுதவிர அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளிலும் இசட்.டி.இ. ஈடுபட்டு வருகிறது.
இசட்.டி.இ. நிறுவன இயக்குனர்களில் ஒருவரான லு கியன் ஹௌ 20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளார். இத்துடன் அதிகபட்சம் 1000 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களை எதிர்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் லு கியன் ஹௌ தெரிவித்தார்.






