என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 ப்ரோ பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • நத்திங் போன் 2a மாடலில் பிளாஸ்டிக் பேக் உள்ளது.

    நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நத்திங் போன் 2a மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நத்திங் போன் 2a மாடலில் 6.7 இன்ச் FHD+ 120Hz OLED ஸ்கிரீன், அதிகபட்சம் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 ப்ரோ பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மசிமோ விக்னெலியின் நியூ யார்க் சப்வே மேப்-ஐ தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரு மாடல்களில் கிலாஸ் பேக் வழங்கப்பட்டிருந்த நிலையில், நத்திங் போன் 2a மாடலில் பிளாஸ்டிக் பேக் கவர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    நத்திங் போன் 2a அம்சங்கள்:

    6.7 இன்ச் 2412x1084 பிக்சல் FHD+ OLED ஃபிலெக்சிபில் AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 ப்ரோ பிராசஸர்

    மாலி-G610 MC4 GPU

    8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த நத்திங் ஒ.எஸ். 2.5

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    50MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி.டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    45 வாட் வயர்டு சார்ஜிங் வசதி

    இந்திய சந்தையில் நத்திங் போன் 2a மாடல் வைட் மற்றும் டார்க் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய நத்திங் போன் 2a மாடலின் விற்பனை மார்ச் 12-ம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்குகிறது. முதல் விற்பனையில் நத்திங் போன் 2a மாடல் ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    • குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனிற்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் விலையில் அறிமுகமான ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் ரூ. 3 ஆயிரம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 37 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     


    ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனின் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 41 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஒன்கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    விலை குறைப்பு ஒன்பிளஸ் மற்றும் அமேசான் இந்தியா வலைதளங்களில் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்டிக் சில்வர் மற்றும் சோனிக் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

    • ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யு.ஐ. 6 கொண்டிருக்கிறது.
    • இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கேலக்ஸி F15 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ 90Hz AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, பன்ச் ஹோலில் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யு.ஐ. 6 கொண்டிருக்கிறது.

     

    புதிய கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போனிற்கு நான்கு தலைமுறை ஆண்ட்ராய்டு அப்டேட்கள், ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி F15 5ஜி அம்சங்கள்:

    6.6 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்

    ARM மாலி-G57 MC2 GPU

    4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யு.ஐ. 6

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    5MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ சென்சர், எல்.இ.டி. ஃபிளாஷ்

    13MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

    6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

     


    இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போன் ஆஷ் பிளாக், ஜேசி கிரீன் மற்றும் குரூவி வைலட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், தேர்வு செய்யப்பட்ட ரிடெயில் ஸ்டோர்களில் மார்ச் 11-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

    அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடியும், எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 1299 மதிப்புள்ள சார்ஜரை ரூ. 299 விலையில் வாங்கிட முடியும்.

    • கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    குவால்காம் ஸ்னப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 990-க்கும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று மாறிவிடும். இந்திய சந்தையில் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிரீன், ஃபேண்டம் பிளாக் மற்றும் கிரீம் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராஸர், அட்ரினோ GPU, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ், 12MP செல்ஃபி கேமரா உள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் பவர்ஷேர், ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • இதில் புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.
    • இந்த சாதனங்கள் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாதனங்கள் செய்தி குறிப்பின் வாயிலாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    இம்முறை புதிய மேக்புக் ஏர் மாடல்களுடன் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் புதிய நிற ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் மற்றும் மேக்புக் ஏர் மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சாதனங்கள் வரும் வாரத்திலேயே அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

     


    பிரபல ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில் வரும் வாரங்களில் ஆப்பிள் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள், மேம்பட்ட ஐபேட் ஏர், 12.9 இன்ச் மாடல், புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.

    மேக் சாதனங்களை பொருத்தவரை 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்கள் அதிநவீன M3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சாதனங்கள் அனைத்தும் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை மிக விரைவில் அறிவிக்க ஆப்பிள் விளம்பர குழுக்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்.

    இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 4ஜி மற்றும் ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. புதிய அறிவிப்பு காரணமாக இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இரு மாடல்களுக்கான விலை குறைப்பு மார்ச் 8-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விலை குறைப்பு விவரங்கள்:

    ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 14 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தன.

    தற்போது விலை குறைப்பின் படி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இவற்றின் விலை முறையே ரூ. 10 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 12 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. குறைக்கப்பட்ட விலையில் இருந்து ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இவற்றின் விலை ரூ. 9 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 11 ஆயிரத்து 499 என்றும் மாறியுள்ளது.

     


    இந்திய சந்தையில் ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை முறையே ரூ. 9 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 11 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    தற்போது இவற்றின் விலை ரூ. 9 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 10 ஆயிரத்து 499 என்று மாறியுள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு மார்ச் 8-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • கட்டண சேவையாக கூகுள் 11 சதவீதத்திலிருந்து 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது
    • சுமார் 3 வருடங்களுக்கும் மேல் தவணை வழங்கினோம் என கூகுள் தெரிவித்தது

    இணையதள தேடல் இயந்திரங்களில் (search engines), உலகின் முன்னணியானது அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் கூகுள் (Google) நிறுவனத்தின் "கூகுள் தேடல் இயந்திரம்."

    உலகெங்கும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் பயனர்கள் தங்கள் ஸ்மார்போன்களில் பயன்படுத்தும் வகையில் அவர்கள் நிறுவன மென்பொருள் "ஆப்" (app) எனப்படும் செயலிகளை கூகுள் தேடல் இயந்திரத்தின் பதிவிறக்க தளமான "ப்ளே ஸ்டோர்" எனும் தளத்தில் கட்டமைத்து இருந்தன.

    ப்ளே ஸ்டோர் ஆப்பிலிருந்து பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இத்தகைய செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக அந்த நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

    கட்டண சேவையாக கூகுள் 11 சதவீதத்திலிருந்து 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது.

    இந்நிலையில் நேற்று, கூகுள் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    கூகுள் நிறுவனம் அறிவித்ததாவது:

    எந்த விசாரணை அமைப்புகளோ அல்லது நீதிமன்றங்களோ, கட்டணம் வசூலிக்க கூகுள் நிறுவனத்திற்கு உள்ள உரிமையை தடை செய்யவோ அல்லது ரத்து செய்யவோ இல்லை. எங்களுக்கு உரிமையள்ள தொகையை கேட்டும் இதுவரை தராத பிரபலமான 10 இந்திய நிறுவனங்களின் செயலிக்கள், ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு சுமார் 3 வருடங்களுக்கும் மேல் தவணை வழங்கினோம்; ஆனால், அவை கட்டணத்தை கட்ட தவறின. எனவே, அவற்றை நீக்கி விட்டோம்.

    இவ்வாறு கூகுள் தெரிவித்துள்ளது.


    ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில், இந்தியாவின் பிரபலமான வேலை தேடுவோருக்கான செயலியான "நவுக்ரி.காம்" (naukri.com), ரியல் எஸ்டேட் சேவைக்கான செயலியான "நைன்டிநைன் ஏக்கர்ஸ்.காம்" (99acres.com), திருமண சேவைக்கான "பாரத்மேட்ரிமோனி.காம்" (bharatmatrimony.com) மற்றும் "ஷாதி.காம்" (shaadi.com) உள்ளிட்டவை அடங்கும்.

    பாரத் மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல் ஜானகிராமன் (Murugavel Janakiraman), "இது இந்திய இணைய சேவை காலகட்டத்தில் ஒரு கருப்பு தினம்" என கூறினார்.

    "இந்திய நிறுவனங்களின் செயலிகளுக்கு என பிரத்யேகமான ஒரு "ஆப் ஸ்டோர்" (app store) தேவை" என நவுக்ரி.காம் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் பிக்சந்தானி (Sanjeev Bikhchandani) தெரிவித்தார்.

    இந்நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டண பாக்கியை செலுத்தும் வரை, இந்த சேவையை பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல் நீடிக்கும் என தெரிகிறது.

    • புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • முழுமையான 5ஜி அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் ஜியோ பிரான்டிங்கில் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய 5ஜி போன் என்ட்ரி லெவல் மாடல் என்றும் இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பிராசஸர் அதிக செலவின்றி முழுமையான 5ஜி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    முன்னதாக ஜியோ பிரான்டிங்கில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஸ்மார்ட்போன்களுக்கு இணையான திறன் கொண்டிருக்காத காரணத்தால், அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை.

    இந்த போன்களில் யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த போதிலும், இதில் மற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடியவில்லை. ஜியோ 5ஜி போன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்திய சந்தையில் ஜியோ பிரான்டிங்கில் மொபைல் போன் மட்டுமின்றி, ஜியோபுக், ஜியோ டைவ், ஜியோ வைபை மெஷ் எக்ஸ்டென்டர், ஜியோ ப்ளூடூத் கேம் கண்ட்ரோலர், ஜியோஃபை, ஜியோ எக்ஸ்டென்டர், யு.எஸ்.பி. கேமரா என பல்வேறு சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    • இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5 வழங்கப்பட்டு இருக்கிறது.
    • கேலக்ஸி A15 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A15 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கேலக்ஸி A15 5ஜி மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2408 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP லென்ஸ், 2MP சென்சார் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., 3.5mm ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது.

    இதர சென்சார்களாக அக்செல்லோமீட்டர், கைரோ சென்சார், ஜியோ-மேக்னடிக் சென்சார், விர்ச்சுவல் பிராக்சிமிட்டி சென்சார் உள்ளது. இத்துடன் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5 வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    கேலக்ஸி A15 5ஜி 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ரூ. 17 ஆயிரத்து 999

    கேலக்ஸி A15 5ஜி 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ரூ. 19 ஆயிரத்து 499

    கேலக்ஸி A15 5ஜி 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 22 ஆயிரத்து 499

    இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A15 5ஜி ஸ்மார்ட்போன் புளூ பிளாக் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு ஒ.எஸ். அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது.

    • டெக்னோ ஸ்பார்க் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    டெக்னோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. டெக்னோ ஸ்பார்க் 20C என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டெக்னோ ஸ்பார்க் 20C மாடலில் 6.6 இன்ச் HD+ டாட்-இன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13 கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் டூயல் ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். ஆடியோ, மேஜிக் ஸ்கின் 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    டெக்னோ ஸ்பார்க் 20C அம்சங்கள்:

    6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ 90Hz டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர்

    IMG பவர் வி.ஆர். GE 8320 GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    ஏ.ஐ. கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

    3.5mm ஆடியோ ஜாக்

    எஃப்.எம். ரேடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய டெக்னோ ஸ்பார்க் 20C ஸ்மார்ட்போன் அல்பென்குளோ கோல்டு, மிஸ்டரி வைட், கிராவிட்டி பிளாக் மற்றும் மேஜிக் ஸ்கின் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மார்ச் 5-ம் தேதி அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது.

    • 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.
    • சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் பயனர்கள் தங்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில் உருவாக்கி இருக்கும் அதிநவீன தொழில்நுட்பம் பற்றிய விவரங்களை 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.

    அதன்படி தனது கேலக்ஸி ரிங் சாதனத்தை அறிமுகம் செய்து, பயனர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக சாம்சங் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அறிவித்தது. புதிய கேலக்ஸி ரிங் 24 மணி நேரம் ஒருவர் மிகவும் சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    கேலக்ஸி ரிங் சாதனத்தை கொண்டு பயனர்கள் தங்களது உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். உடல்நலம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது பல்வேறு சாதனங்களிலும் கேலக்ஸி ஏ.ஐ. அனுபவத்தை புகுத்த திட்டமிட்டு வருகிறது.

    இதன் அங்கமாகவே கேலக்ஸி ரிங் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வீட்டிற்குள் ஒருவருக்கு தனித்துவம் மிக்க மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய தீர்வுகளை வழங்கும் வகையில் கேலக்ஸி ரிங் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய சாதனம் அறிமுகம் செய்ததோடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான சேவைகளை சாம்சங் ஹெல்த்-இல் இணைக்க சாம்சங் திட்டமிட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கேலக்ஸி ரிங் சாதனம் அடுத்து நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டு, பிறகு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    முன்னதாக நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் சாதனத்தின் டீசரை வெளியிட்டு, விரைவில் இது பற்றிய விவரங்களை வழங்குவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    • நுபியாவின் முதல் ஃப்ளிப் போன் 4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 33 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    நுபியா நிறுவனத்தின் முதல் ஃப்ளிப் போன் 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நுபியா ஃப்ளிப் 5ஜி மாடலில் 6.9 இன்ச் 120Hz OLED டிஸ்ப்ளே, வெளிப்புறம் 1.43 இன்ச் அளவில் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஃப்ளிப் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை 73 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

     


    நுபியா ஃப்ளிப் 5ஜி அம்சங்கள்:

    6.9 இன்ச் 2790x1188 பிக்சல் FHD+ 120Hz AMOLED மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே

    1.43 இன்ச் 466x466 பிக்சல் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ 644 GPU

    6 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    நுபியா ஃப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49 ஆயிரத்து 650 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் என நுபியா தெரிவித்துள்ளது.

    ×