search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெனிசுலா அதிபர்"

    வெனிசுலா விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள் என்று அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido

    மாஸ்கோ:

    வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் கெய்டோ போட்டி அரசாங்கம் நடத்துகிறார். தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துள்ளார். அவருக்கு அமெரிக்கா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

    அதேநேரத்தில் அதிபர் மதுரோவுக்கு ரஷியா மற்றும் சீனாவும் ஆதரவு அளித்துள்ளன. இதற்கிடையே ரஷியாவின் 2 ராணுவ விமானங்கள் கராகஸ் விமானநிலையத்துக்கு வெளியே ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுத தள வாடங்களுடன் ஒருவாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனே ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு ரஷியா-வெனிசுலா இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளது.

     


    வெனிசுலாவுக்கு ரஷியா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது ரஷியா ‘எஸ்-300’ என்ற ஏவுகணையை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதனால் இங்கு விமான ராணுவங்களும், வீரர்களும் முகாமிட்டுள்ளதாக தெரிவித்தது.

    இந்தநிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால் ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வெனிசுலாவில் இருந்து வெளிநாட்டு படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியா வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் மரியா ‌ஷகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில் வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும், மிரட்டுவதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்தி உள்நாட்டு போர் உருவாக்குவதையும் நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido

    தென்னமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ, தங்கள் நாட்டின் மருத்துவ பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 500 கோடி டாலரை அமெரிக்க அதிபர் டிரம்ப் திருடி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். #Maduro #Trumpstole #Venezuelamedicine
    மெக்சிகோ சிட்டி:

    தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான வெனிசுலா நாட்டு அதிபர் பதவிக்கு நடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ பெற்ற வெற்றி செல்லாது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், எதிர்க்கட்சி தலைவரான ஜுவான் குவய்டோ தன்னை வெனிசுலா அதிபராக பிரகடனப்படுத்தி கொண்டார்.

    அவருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. அதைதொடர்ந்து 50-க்கும் அதிகமான நாடுகளும் அவரை பிரதமராக அங்கீகரித்த நிலையில் நிக்கோலஸ் மடுரோ தனது பதவியை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

    ரஷியா, சீனா, கியூபா, பொலிவியா உள்ளிட்ட சில நாடுகள் மடுரோவை ஆதரித்து வருகின்றன.

    இந்நிலையில், நிக்கோலஸ் மடுரோ தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த பல உதவிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டின் சுமார் 700 கோடி டாலர் மதிப்பிலான பெட்ரோல் கிணறும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தங்கள் நாட்டின் மருத்துவ பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 500 கோடி டாலரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திருடி விட்டதாக நிக்கோலஸ் மடுரோ குற்றம்சாட்டியுள்ளார்.

    வெனிசுலா நாட்டில் தேசிய மருந்து தயாரிப்புத்துறை வளர்ச்சி திட்டத்தை மீண்டும் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய மடுரோ, ‘நம் நாட்டில் மருந்துகள் தயாரிப்பு, மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய மருந்துகள், மருந்தகங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் இயக்கம் ஆகியவற்றுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 கோடி டாலர் பணத்தை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திருடி விட்டது.

    வெனிசுலா நாட்டு மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த மோசமான கிரிமினல் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமே காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். #Maduro #Trumpstole #Venezuelamedicine 
    வெனிசுலாவில் அரசின் தடையை மீறி உதவிப் பொருட்களை கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், கொலம்பிய எல்லையில் உள்ள 3 பாலங்களை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #VenezuelaCrisis #JuanGuaido #VenezuelaVicePresident
    கராகஸ்:

    வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

    ஜூவான் குவைடோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் ஆதரவு தெரிவித்து அங்கீகரித்ததால், அந்த நாடுகளுடன் அதிபர் நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார். ஆட்சியைக் கவிழ்க்க அந்த நாடுகள் முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    இதற்கிடையில் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசுலா மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை வழங்க முன்வந்தன. ஆனால் இந்த உதவிகளை மதுரோ ஏற்க மறுத்துவருகிறார். உதவிப் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் பிரேசில் எல்லையை மூடினார். ஐநா மூலம் வரக்கூடிய உதவிகளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

    இதற்கிடையே மதுரோ தலைமையிலான அரசின் தடையை மீறி, நேற்று அண்டை நாடான கொலம்பியா சென்ற குவைடோ, அங்கு நிதி மற்றும் உதவிப்பொருட்கள் சேகரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கொலம்பிய அதிபர் இவான் டக்கும் கலந்துகொண்டார். அங்கிருந்து இன்று உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.



    தடையை மீறி கொலம்பியாவுக்கு சென்றதால் அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அத்துடன் கொலம்பியாவையும் வெனிசுலாவையும் இணைக்கும் மூன்று பாலங்களையும் தற்காலிகமாக மூட அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக துணை அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்தார். கொலம்பியா அரசிடம் இருந்து, வெனிசுலாவின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வருவதால் மூன்று பாலங்களையும் மூடுவதாக அவர் கூறியுள்ளார்.

    எதிர்க்கட்சியால் திரட்டப்பட்ட உதவிப்பொருட்கள் மற்றும் அமெரிக்காவின் உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர உள்ள நிலையில், பாலங்கள் மூடப்படுவதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உதவிப் பொருட்கள் மக்களை சென்று சேருவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

    வெனிசுலா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜான் போல்டன், தனது தென் கொரிய பயணத்தை ரத்து செய்துள்ளார்.  #VenezuelaCrisis #JuanGuaido #VenezuelaVicePresident
    பனிப்போரை வெளிப்படையான அரசியல் நிலைப்பாடாக மாற்றும் வகையில் அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூடுமாறு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மடுரோ உத்தரவிட்டுள்ளார். #Maduro #Venezuelaembassy #UnitedStates
    காரகாஸ்:

    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மடுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், நிகோலஸ் மடுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.
     
    ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மடுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மடுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.

    அதிபர் மடுரோவுக்கு எதிராக, ராணுவத்தில் உள்ள ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.

    மடுரோவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜெண்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    குறிப்பாக,  ஜூவான் கெய்டோவை அதிகாரப்பூர்வமான வெனிசுலா அதிபர் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிகோலஸ் மடுரோ உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    ஆனால், எனது பதவிக்காலம் 2025-ம் ஆண்டுவரை உள்ளது. அதற்குள் நான் பதவியை விட்டு இறங்க மாட்டேன் என நிகோலஸ் மடுரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  மடுரோவுக்கு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஜூவான் கெய்டோவுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவை கண்டு நிகோலஸ் மடுரோ ஆத்திரமடைந்துள்ளார். இதன்விளைவாக, வெனிசுலா நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்னும் 72 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டது.

    இதேபோல், அமெரிக்காவில் உள்ள வெனிசுலா தூதரகத்தை மூடுமாறு நிகோலஸ் மடுரோ இன்று உத்தரவிட்டுள்ளார். இதனால், வெனிசுலா-அமெரிக்கா இடையிலான விரிசல் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. #Maduro #Venezuelaembassy #UnitedStates
    ×