search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரவணக்கம்"

    • வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி.
    • பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட உள்ளன.

    நாகப்பட்டினம்:

    மீட்பு பணிகளில்தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் ஏப்ரல் 14ஆம் நாள் தீ தொண்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    அந்த வகையில் இன்று நாகை தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை அலுலர்கள் மலர்வலையம் வைத்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் 14ஆம் தேதி முதல் 20தேதி வரை பொதுமக்கள் கூடும் இடம், மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏர்படுத்தும் வகையில் நிகழ்சிகள் நடத்தபட உள்ளன.

    • என்.சி.சி.மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தாக்குதல் நடந்தது

    நாகர்கோவில்:

    ஜம்மு காஷ்மீரின் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் லெத்போராவில் கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இதில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 40 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந்தேதி இந்தியாவின் கருப்பு தின மாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் பிப்ரவரி 14-ந்தேதி யான இன்று நாடு முழுவதும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதேபோல் குமரி மாவட்ட ராணுவ வீரர்களின் அமைப்பான ஜவான்ஸ் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    அந்த வகையில் கன்னியாகுமரி, மாதவபுரம், குளச்சல், திங்கள்சந்தை, திக்கணங்கோடு, தக்கலை மற்றும் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 150 ராணுவ வீரர்கள் பங்கேற்று பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.இதில் என்.சி.சி.மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வடசேரியில் இருந்து புத்தேரி வரை சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை ராணுவ வீரர்கள் நட்டு வைத்தனர்.

    • பிப்ரவரி 14 -ம் நாள் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.
    • காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

    தருமபுரி,

    2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் என்பது இந்தியாவின், ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது பிப்ரவரி 14 -ம் நாள் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.

    இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்த வீரர்களுக்கு நான்காம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தருமபுரி நான்கு ரோடு அண்ணா சிலை அருகே உயிர் தியாகம் செய்த 40 துணை ராணுவீர்களின் உருவப்படத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம், நகர காவல் உதவி ஆய்வாளர் விஜய் சங்கர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் சின்னசாமி உள்ளிட்ட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். 

    • விவசாயிகள் சங்கம் சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் பழனிசாமி, சி.பி.எம். பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    கடந்த 1982 ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நடைபெற்ற நவீன தாராளமய கொள்கைகளை எதிர்த்தும் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்தும் நடந்த பாரத் பந்த் போராட்டத்தின்போது, தஞ்சாவூரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 19-ந்தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்லடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார்.

    மாநில துணைத்தலைவர் நாமக்கல் பி.பெருமாள், மாவட்ட செயலாளர் ஆர்.குமார், சிஐடியு. மாவட்ட துணைத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சியில்இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜி.சுந்தரம்,சிஐடியு. மாவட்ட பொருளாளர் ஜி.சம்பத், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர் தண்டபாணி, பல்லடம் ஒன்றிய தலைவர் கே.வி.சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, சி.பி.எம். பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் அடிப்படை ஊதியத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
    • மாலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதிய தமிழகம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துதரப்பு மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக புதிய தமிழகம் கட்சி உள்ளது.

    நாளை (சனிக்கிழமை) நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் அடிப்படை ஊதியத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

    வருடம்தோறும் இந்த வீரவணக்க நினைவஞ்சலி புதிய தமிழகம் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, இந்தாண்டிற்கான வீரவணக்க நினைவஞ்சலி, வீரவணக்க பேரணி மற்றும் அதனைத்தொடர்ந்து அன்று மாலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புதிய தமிழகம் கட்சியினர் திரளாக சென்று பங்கேற்றிட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு தந்து சிறப்பித்திட வேண்டும்.

    எனவே மாவட்டம் முழுவதும் உள்ள புதிய தமிழகம் தொண்டர்கள், கட்சியினர் அனைவரும் குடும்பத்துடன் அணி திரண்டு வந்து பங்கேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×