search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாழக்கிழமை"

    • குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது.
    • தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும்.

    1. இது சூரியனுக்கு சுமார் 48,00,00,030 கி.மீ. தூரத்திற்க்கு அப்பால் உள்ளது.

    2. இது தன்னைத்தானே 9 மணி 55 நிமிடங்களில் சுற்றுகிறது.

    3. குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது.

    4. மந்திரம், ஞாபகசக்தி, வேதமந்திர சாஸ்திர அறிவு,யானை,குதிரை போன்ற வாகன அந்தஸ்த்து, பணம், அனைத்திற்கும் காரகன் ஆகிறார்.

    5. குரு பார்வை கோடி புண்ணியம். இவரின் பார்வையால் அனைத்து தோஷமும் நீங்கும்.

    6. குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும்.

    7. குரு தோஷங்கள் விலகிட ஆலங்குடி சென்று வழிபடலாம்.

    8. 24 நெய் தீபங்கள் ஏற்றி 24 முறை மவுன வலம் வரவேண்டும்.

    9. குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள்நிற வஸ்திரம் வெண்முல்லை ஆகியவற்றால் அலங்காரம் செய்து எலுமிச்சம் பழம் அன்னம் நிவேதிக்க வேண்டும்.

    10. சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச்ச வீடு மகரம்.

    11. குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இணைந்து 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம் கிடைக்கும். கோடிஸ்வர யோகம் அமையும்.

    12. மேதைகளையும், ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும்.

    13. பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.

    14. குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும்.

    15. ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார்.

    16. அறிவு வாய்ந்த குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.

    17. பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார்.

    18. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும்.

    19. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.

    20. வடக்குத் திசை குருவிற்கு உரியது.

    21. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை.

    22. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.

    23. ஒரு ராசியை கடக்க ஓராண்டு எடுத்துக்கொள்ளும் குரு பகவான் பன்னிரெண்டு ராசிகளையும் கடக்க பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன.

    24. குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் உலவும் போது சந்திரன் மக நட்சத்திரத்தில் வந்து குருவை தொட்டுவிட்டால் அன்று தான் மகாமகம். இது மருவி மாமாங்கமாகி விட்டது. இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும். வடநாட்டில் கும்பமேளா என்று நடப்பது போல தமிழ்நாட்டில் மகாமக விழா நடத்தப்படுகிறது.

    25. குரு பகவான் ஆங்கிரச முனிவருக்கும், சிரத்தா தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு தாரை என்ற மனைவி உண்டு.

    26. ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் பெற்ற குருவிற்கு பரத்வாஜர் என்ற மகனும் இருந்தார். குருவைப்பற்றி புராணத்தில் பல கதைகள் உள்ளன.

    28. காசிக்கு சென்று ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாறாயிரம் ஆண்டுகள் சிவபெருமானை நோக்கி குரு தவம் செய்தார். இவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு.

    29. குருவிற்கு பிரஹஸ்பதி என்றும், வியாழன் என்றும், மந்திரி என்றும், அரசன் என்றும் பல பெயர்கள் உண்டு.

    30. குரு பகவான் தமிழகத்தில் திருச்செந்தூர், பாடி, தென்குடி திட்டை ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று ஈஸ்வரனை பூஜித்து பேறு பெற்றதாக கூறப்படுகிறது.

    • பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
    • மேயர் மகேஷ் உறுதி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மேயர் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வார்டு, வார்டாக சென்று ஆய்வு மேற்கொண்டு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து அந்த பணிகளை துரிதப்படுத்தி னார். நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சி யாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வியாழக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மகேஷ் அறிவித்தார்.

    அதன்படி இன்று முதல் வியாழக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    ஆணையாளர் ஆனந்த மோகன், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், சுனில் அரசு மற்றும் கவுன்சி லர்கள் கலந்துகொண்டனர்.

    பொதுமக்கள் வீட்டு வரி கட்டணம் குறைக்க கோரியும், சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினை, வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிவறையை சீரமைக்க வேண்டும் உள்பட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க கோரி மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மேயர் மகேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோ வில் மாநகராட்சி மேயராக பதவியேற்று 16 மாதங்கள் ஆகிறது. பதவியேற்ற பிறகு ஒவ்வொரு வார்டாக சென்று தினமும் காலை ஆய்வு செய்தேன். நடந்து சென்றும், இருசக்கர வாகனங்களில் சென்றும் ஆய்வு மேற் கொள்ளப் பட்டது.

    நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சி மாற்ற ரூ.267 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் திட்டங்கள் அனைத்தும் செயல் படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்ற நடவ டிக்கை எடுக்கப்படும்.

    பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உட னடி நடவடிக்கை மேற் கொள்ளப்படும். வரி விதிப்பு பெயர் மாற்றம் தொடர்பாக மனுக்கள் வந்துள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலை சீரமைப்பிற்கு இதுவரை ரூ.111 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது. அந்த பணிகள் தற்பொழுது நடை பெற்று வரு கின்றன.

    நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒரு சில சாலைகளை இருவழி சாலைகளாக மாற்ற திட்டமி டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடை உரிமை யாளர்களிடம் பேசி உள்ளோம். அவர்களும் இடம் தருவதாக உறுதி அளித்துள்ளனர். அந்த இடத்தை பார்வையிட்டு வரையறை செய்து வருகிறார்கள். விரைவில் வடசேரி, மணிமேடை சாலை இருவழிப்பாதையாக மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் நிலக்கடலை மறைமுக ஏலம் விற்பனை நடக்க உள்ளது.
    • தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலமும் நடக்கிறது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட விற்பனைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சனிக்கிழமை தோறும் எள் மறைமுக ஏலமும், கூடுதலாக தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலமும் நடக்கிறது. வரும் வியாழக்கிழமை முதல் நிலக்கடலை மறைமுக ஏலம் விற்பனை நடக்க உள்ளது.

    இதற்காக புதன் கிழமை மாலை, 4 மணிக்குள் நிலக்கடலையையும், சனிக்கிழமை காலை, 8 மணிக்குள் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காயை எடுத்து வர வேண்டும்.

    விளை பொருட்களை கல், மண், தூசு நீக்கம் செய்து, தரம் பிரித்து விற்பனை கூடத்துக்கு கொண்டு வர வேண்டும். வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விளை பொருளுக்கான தொகையை நேரடியாக விவசாயி வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    எனவே, விவசாயிகள், தங்களது வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும். மேலும் கூடுதல் தகவலுக்கு ஈரோடு மாவட்ட விற்பனைக்குழு – 99445 23556, மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை, 99425 06990 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×