search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினாடி வினா போட்டி"

    • தங்கை கனிமொழி முன்னெடுக்கும் “கலைஞர் 100”-ல் வினாடி-வினா போட்டி முயற்சி பாராட்டத்தக்கது.
    • செப்டம்பர் 15-ம் நாள் தொடங்கவுள்ள உள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை கனிமொழி முன்னெடுக்கும் "கலைஞர் 100"-ல் வினாடி-வினா போட்டி முயற்சி பாராட்டத்தக்கது. செப்டம்பர் 15-ம் நாள் தொடங்கவுள்ள உள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • வாணியம்பாடி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
    • வருகிற 25-ந் தேதி பரிசு வழங்கப்பட உள்ளது.

    வாணியம்பாடி:

    தேசிய வாக்காளர் தின விழாவினை முன்னிட்டு மாநில தலைமை தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்ட இணைய வழியிலான வினாடி வினா போட்டியில் மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் முதல் பரி சை வென்றுள்ளது.

    இதில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 9 ம் வகுப்பு மாணவர் சாரதி மாநிலத்திலேயே முதல் இடமும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காவியா தர்ஷினி இரண்டாவது இடமும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கோகன் ஸ்ரீபிரசாந்த் மூன்றாவது இடமும் பெற்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதி அன்று சென்னையில் நடைபெறும் நிகழ்சியில் பாராட்டி பரிசு வழங்கப்பட உள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப்-கலெக்டர் வில்சன் ராஜசேகர் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் மாணவர்களை தலைமையாசிரியர் எஸ். தமிழரசி, உதவி தலைமையாசிரியர் எஸ்.குமரேசன், பொறுப்பாசிரியர் கே.சதிஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.

    • 3 பிரிவுகளில் நடந்த இந்த ேபாட்டி நடந்தது.
    • 30 பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஒன்றிய அளவிலான துளிர் ஜந்தர்மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டி கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் 30 பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கு கோத்தகிரி அரிமா சங்கத்தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். அரிமா சங்க செயலர் ரெட்டி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தின் உதவி முதல்வர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் கே.எம்.பெள்ளி வாழ்த்துரை வழங்கினார்.

    நெஸ்ட் அறக்கட்டளையின் செயலர் ராமதாஸ், பொரங்காடு சீமை நல சங்கத்தின் செயலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் போஜன் ஆசிரியர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    3 பிரிவுகளில் நடந்த இந்த ேபாட்டியில் அரவேணு, கேர்கெம்பை உயர்நிலைப்பள்ளிகள், ஹில்போர்ட் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, கோத்தகிரி அரசு மேனிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகள் முதலிடத்தையும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கேர்பெட்டா, கிரிஈஸ்வரா மெட்ரிக் பள்ளி கக்குச்சி, பாண்டியின் நினைவு மேனிலைப்பள்ளி, புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

    கிரீன்வேலி மெட்ரிக் மேனிலைப்பள்ளி, ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பெற்றனர். இந்த போட்டியில் முதல் 2 இடங்களைப்பிடித்த அணிகள் வருகிற 29-ந் தேதி ஊட்டியில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர். முடிவில் பொருளாளர் பிரகாஸ் நன்றி கூறினார். 

    ×