search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதைப்பண்ணை"

    • தரமாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க அறிவுரை
    • பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட வேளாண்மை, பொதுப் பணித்துறை, மீன்வ ளத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் நேற்று ஆய்வு செய் தார்.

    அதன் ஒரு கட்டமாக திருப்பதிசாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசு விதைப்பண்ணையில் முதல் பருவத்தில் பயிரி டப்பட்ட அம்பை-16, டி.பி.எஸ்.5, கருங்குறுவை அறு வடை பணிகளையும் பார்வையிட்டார். தக்கை பூண்டு பயிரிடப்பட்ட பகுதிகளையும், 2-ம் பருவத்திற்கு தயார் நிலை யில் உள்ள நாற்றாங்காலை யும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் விதை சுத்தி கரிப்பு நிலையம், மாநில அரசு விதைப்பண்ணையில் சேகரித்து வைக்கப் பட்டுள்ள நெல் விதைகளை பார்வையிட்டதோடு, அவற்றை பாதுகாப்பாக வைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தரமான விதைகள், நாற்று கள் மற்றும் இடுபொருட்க ளை உற்பத்தி செய்து விவ சாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

    மாவட்டத்தின் வேளாண் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் வேளாண்மை தொழில் நுட்பங்களில் உறைவிடம் மற்றும் அறிவு மையமாக செயல்பட வேண்டும் என்றும், விவசாய முகாம்க ளி லும், வட்டார அளவிலும் விவசாயிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து கன்னியாகுமரி சென்ற கலெக்டர் ஸ்ரீதர், அங்கு சுற்றுலாத்துறையின் சார்பில் கதிரியக்க தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் ரூ.11.98 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு அய்யன் திருவள்ளுவர் சிலையில் செயல்படுத்தப்பட உள்ள பணிகள் குறித்து கேட்ட றிந்ததோடு, பணிகளை விரைந்து மேற்கொண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    கன்னியாகுமரி படகு துறையில் கூடுதல் படகு நிறுத்தும் தளம் அமைக்கும் பணிகளையும் கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், 80 மீட்டர் நீளத்திற்கு கூடுதலாக படகு அணையும் தளம் அமைப்பதற்கு தேவையான கான்கிரீட் பிளாக்குகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பணித்த ளத்தில் இவற்றை அமைக்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் தரமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் படகு தளம் அமைக்கும் பணி தற்போது 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்றும் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

    • ராமநாதபுரத்தில் விதைப்பண்ணை அமைக்க பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
    • நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. ஆகவே விவசாயி களுக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பும் உள்ளது மாவட்ட த்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதை யின் உற்பத்தியை அதிகரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.ராமநாத புரம் மாவட்டத்தில் 86 கிராமங்கள் கலைஞர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் நெல் விதைப் பண்ணை அமைப்பதற்கு தேவையான வல்லுநர் விதை, ஆதார நிலை நெல் விதைகளை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உதவி விதை அலுவலர்களை அணுகி பெற்றிடலாம். கோ 51, ஏ.டி.டீ. 45, ஆர்.என்.ஆர் 15,048 போன்ற குறுகிய கால நெல் விதை ரகங்களை தேர்வு செய்யலாம். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகள் ஆகிய வற்றை விதை அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப் பண்ணைகளை பதிவு செய்திடல் வேண்டும். நெல் விதைப் பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதை அறிக்கைக்கு பதிவுக் கட்டணம் ரூ. 25-ம், வயலாய்வுக் கட்டணமாக ரூ 100-ம் விதை பரி சோதனைக் கட்டணமாக ரூ.80-ம் செலுத்தி நெல் விதைப் பண்ணை அமைத்து லாபம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என விதைச்சான்று உதவி இயக்குநர் ஆலோசனை வழங்கினார்.
    • விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபும் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகவே விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பு வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைப்பண்ணை அமைப்ப தற்கு தேவையான ஆதார நிலை மற்றும் சான்றுநிலை நெல் விதைகளை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    கோ 51, ஏடிடீ 45 போன்ற குறுகிய கால விதை ரகங்கள் மற்றும் டி.கே.எம். 13, என் .எல். ஆர். 34449, போன்ற மத்திய கால விதை ரகங்களை தேர்வு செய்யலாம். விதைகளை வாங்கும் போது காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகள் ஆகியவற்றை விதைப்பு அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப்பண்ணைகளை பதிவு செய்திடல் வேண்டும்.

    விதைப்பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதைப்பு அறிக்கைக்கு பதிவுக்கட்டணம் ரூ.25, வயலாய்வு கட்டணம் ரூ.100, விதை பரிசோதனைக் கட்டணம் ரூ.80 செலுத்த வேண்டும்.

    விதைத்த 35-வது நாள் அல்லது பயிர் பூப்பதற்கு 15 நாட்கள் முன்பு இதில் எது முன்னதோ அதற்குள் பதிவு செய்ய வேண்டும். விதைப்பண்ணையில் இரு வேறு பகுதிகள் 50 மீட்டர்க ளுக்கு அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த விதை பண்ணைகள் விதைச் சான்று அதிகாரிகளால் உரிய காலங்களில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு கல வன்கள் அகற்றப்பட்டு, பயிரின் வளர்ச்சி கண்காணிக்கப்படுவதால் தரமான விதை உற்பத்தி செய்யப்படுகிறது.

    இவ்வாறு கலவனற்ற, இனத்தூய்மை உள்ள விதைப்பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளுக்கு கொள்முதல் மற்றும் விற்பனை மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெல் விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம்.

    இது தவிர சிறுதானி யங்களான குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, பயறுவகைகளான உளுந்து, பாசிப்பயறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை, எள் ஆகிய ரகங்களில் விதைப்பண்ணை அமைக்க இருக்கும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நல்ல தரமான பயிறு வகைகளை விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.
    • சுற்று வட்டார பயிறு வகை சாகுபடி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

    வெள்ளகோவில் : 

    முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டி மற்றும் நத்தக்கடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட குட்டப்பாளையம் கிராம பகுதிகளில் விவசாயிகள் பாசிப்பயறு, உளுந்து பயிறு, ஆதார நிலை 2 உள்ள பயறு வகைகளை சாகுபடி செய்து விதைப்பண்ணைகளாக அமைத்து உள்ளனர்.

    முத்தூர் பகுதிகளான மங்களப்பட்டி, வேலம்பாளையம், ஊடையம் மற்றும் நத்தக்காடையூர் பகுதிகளான குட்டப்பாளையம் ஆகிய கிராம பகுதிகளில் விவசாயிகளின் பயிறு வகை விதைப்பண்ணைகளுக்கு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் பி.அ.மாரிமுத்து நேரில் வந்து ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் விவசாயிகளிடம் கூறியதாவது:-

    பயிறு வகை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் விதைப்பண்ணைகள், வயல் தர நிலைகளில் தேர்ச்சி பெற்ற நல்ல தரமான பயிறு வகைகளை விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். நன்கு தேர்ச்சி பெற்ற பயிறுவகை விதை குவியல்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அரசு அங்கீகாரம் வழங்கி விதை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும். விதைசுத்திகரிப்பு நிலையங்களில் விதைச்சான்று அலுவலர்களால் பயிறு வகை மாதிரி சேகரிக்கப்பட்டு, நல்ல தரமான விதை குவியல்களுக்கு சான்று அட்டை பொருத்தப்பட்டு தரமான விதை குவியல்களாக வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது காங்கயம் வட்ட விதை சான்று அலுவலர் ஸ்ரீ காயத்ரி, உதவி நிலை அலுவலர் கிருபானந்தன் மற்றும் சுற்று வட்டார பயிறு வகை சாகுபடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • உழவர் உற்பத்தியாளர் நிறுவன விதைப்பண்ணை சாகுபடியாளர்களுக்கு தரமான சான்று விதை உற்பத்தி பயிற்சி வழங்கப்பட்டது.
    • பயிற்சியின் போது சாகுபடியாளர்கள் தனது வயலில் கடைபிடிக்க வேண்டிய விதை நேர்த்தி முறைகள், கலவன் அகற்றும் முறைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல், ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி ஈரோடு துல்லிய பண்ணை விதை உற்பத்தியாளர் வளாகத்தில் வேளாண்மை  உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விதைப்பண்ணை சாகு படியாளர்களுக்கு தரமான சான்று விதை உற்பத்தி பயிற்சி வழங்கப்பட்டது.

    இப்பயிற்சியில் விதை ச்சான்று மற்றும் அங்க கச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியின் போது சாகுபடியாளர்கள் தனது வயலில் கடைபிடிக்க வேண்டிய விதை நேர்த்தி முறைகள், கலவன் அகற்றும் முறைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல், ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.

    கொடுமுடி, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா கலந்து கொண்டு வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்தார். மேலும், விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) மா.கணேசமூர்த்தி விதை ப்பண்ணை பதிவு செய்தல், வயலாய்வு செய்தல், சுத்தி அறிக்கை பெறுதல் பற்றி பயிற்சி அளித்தார்.

    ஈராடு, அங்ககச்சான்று ஆய்வாளர் சி.மகாதேவன், அங்ககச்சான்று பதிவு செய்தல் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்தார். கொடுமுடி, அட்மா திட்ட வட்டார மேலாளர் கிருத்திகா இப்பயிற்சிக்கான எற்பாடுகளை செய்தார்.

    ஈரோடு துல்லிய பண்ணைய சுத்தி நிலைய பொறுப்பு அலுவலர் பாபு விதை சுத்தி நிலைய செயல்பாடுகள் பற்றி செயல் விளக்கம் அளித்தார்.

    ×