search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதைப்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
    X

    விதைப்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

    • ராமநாதபுரத்தில் விதைப்பண்ணை அமைக்க பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
    • நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. ஆகவே விவசாயி களுக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பும் உள்ளது மாவட்ட த்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதை யின் உற்பத்தியை அதிகரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.ராமநாத புரம் மாவட்டத்தில் 86 கிராமங்கள் கலைஞர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் நெல் விதைப் பண்ணை அமைப்பதற்கு தேவையான வல்லுநர் விதை, ஆதார நிலை நெல் விதைகளை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உதவி விதை அலுவலர்களை அணுகி பெற்றிடலாம். கோ 51, ஏ.டி.டீ. 45, ஆர்.என்.ஆர் 15,048 போன்ற குறுகிய கால நெல் விதை ரகங்களை தேர்வு செய்யலாம். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகள் ஆகிய வற்றை விதை அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப் பண்ணைகளை பதிவு செய்திடல் வேண்டும். நெல் விதைப் பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதை அறிக்கைக்கு பதிவுக் கட்டணம் ரூ. 25-ம், வயலாய்வுக் கட்டணமாக ரூ 100-ம் விதை பரி சோதனைக் கட்டணமாக ரூ.80-ம் செலுத்தி நெல் விதைப் பண்ணை அமைத்து லாபம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×