search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு அரிவாள் வெட்டு"

    • கடை வாடகை முறையாக கொடுக்க வில்லை என பிரச்சினை எழுந்துள்ளது.
    • இதனால் கடையை காலிசெய்து பாக்கி வாடகையை கேட்டுள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் டோபிகானல் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் அருண் குமார் (30) இவருக்கு லாஸ் காட்ரோடு பகுதியில் வணிக கடை உள்ளது. அந்தக் கடையை பீட்டர்(45) என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். வாடகை முறையாக கொடுக்க வில்லை என பிரச்சினை எழுந்துள்ளது.

    இதனால் கடையை காலிசெய்து பாக்கி வாடகையை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பீட்டர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண்குமாரை வெட்டி யதில் காயம் ஏற்பட்டது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த அப்பகுதி மக்கள் காயமடைந்த அருண்குமாரை கொடை க்கானல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் மேல்சிகிச்சை க்காக தேனி க.விலக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் பீட்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஊனத்தை கேலி செய்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி வாலிபரை சரமாரியாக வெட்டியதால் கைது செய்யப்பட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே சில்ல மரத்துப்பட்டியை சேர்ந்தவர் மோகன்(56). இவர் மாற்றுத்திறனாளி யாவார். அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்(39) என்ற வாலிபர் மோகனின் உடல் ஊனத்தை கேலி, கிண்டல் செய்து வந்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மோகன் அவரது உறவினரை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். மோகன் தன்னைத்தான் திட்டுவதாக நினைத்து அருகில் இருந்த அரிவாளை எடுத்து ரமேசை சரமாரியாக வெட்டி ச்சாய்த்தார்.

    இதில் படு காயமடைந்த ரமேஷ் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 4வது குறுக்கு த்தெருவை சேர்ந்தவர் மனோஜ் (22). இவர் திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி அருகே ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது 2 பேர் அவரை தனியாக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மறைவான இடத்தில் நின்று கொண்டி ருந்த 2 பேர் மனோஜை பட்டாக்கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் மனோஜ் உயிருக்கு பயந்து கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மனோஜை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பின் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சி கிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறி த்து தாடிக்கொம்பு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசா ரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் மனோஜ் அரிவாளால் வெட்ட ப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,

    திண்டுக்கல் கிழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த தேவா என்ற திவாகர் (22) என்பவர் ஜோதிபாசு மனைவி உத்ரா (27) என்பவருடன் பழகி வந்துள்ளார். பால் வியாபாரம் செய்துவரும் ஏற்கனவே மனோஜ்டன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். திவாகர் பழகுவதை அறிந்ததும் அவர் கண்டித்துள்ளார். இதனால் மனோஜ் மற்றும் தேவாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த தகராறில் தான் மனோஜ் அரிவாளால் வெட்டப்பட்டது உறுதி யானது. இதை தொடர்ந்து தேவா மற்றும் மேற்கு அசோக்நகரை சேர்ந்த ஜான் என்ற ஜானகிரமன் (22), அஜய் (20), உத்ரா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • திண்டுக்கல்லில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    குள்ளனம்பட்டி :

    திண்டுக்கல் சவேரியார்பாளையம் நேருஜிநகரை சேர்ந்த சகாயராஜ் மகன் அருண்குமார்(25). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலையில் வேலை முடிந்து அதேபகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் முடிவெட்டுவதற்காக சென்றார். அப்போது அந்த கடைக்குள் புகுந்த ஒரு கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு அருண்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்தும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காயமடைந்த அருண்குமாரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் அசனாத்புரத்ைத சேர்ந்த சிராஜ்தீன்(25), திருப்பூரை சேர்ந்த ஜெயராஜ்(27) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்விரோதத்தில் அருண்குமார் சிராஜூதீனை வெட்டியுள்ளார்.

    அதற்கு பழிக்குபழி வாங்கும் நோக்கில் சிராஜூதீன் தனது நண்பர்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு சிலரை தேடி வருகின்றனர்.

    ×