search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாணி ஜெயராம்"

    • 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசு தலைவர் வழங்கினார்.
    • இதில் மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது கருதப்படுகிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது உறவினர் பெற்றுக் கொண்டார். மேலும், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்திக்கு சமூக பணிக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

    • பிரபல பாடகி வாணி ஜெயராம் சமீபத்தில் அவரது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
    • இவரது உடல் 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

    வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். 'வீட்டுக்குவந்த மருமகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' முதலான படங்களில் பாடியிருந்தாலும் 'தீர்க்கசுமங்கலி' படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    இவர் சமீபத்தில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். இவரது உடல் காவல்துறை சார்பில் 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடியதும் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இதேபோல் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரிமுத்து, தங்கவேலு, சீனிவாசன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா ஆகி யோரது மறைவுக்கு இரங்கல் குறிப்புகளும் கொண்டு வரப்பட்டன. இவர்கள் மறைவுற்ற செய்தியை இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவிப்ப தாக சபாநாயகர் அப்பாவு கூறினார். மறைந்த உறுப்பினர்களின் மறைவால் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்வதாக கூறி உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதிகாத்தனர்.

    • தொடக்க கல்வி படித்த பள்ளியை நினைவில் கொண்டிருந்த வாணிஜெயராம் 2015-ம் ஆண்டு பள்ளிக்கு வருகை தந்தார்.
    • படித்த வகுப்பறையில் உள்ள கரும்பலகையிலும், பழைய நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்தார்.

    வேலூர்:

    சினிமா பின்னணி பாடகிகளில் தனக்கென தனி முத்திரையை பதித்த வாணி ஜெயராம். 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' என்ற பாடல் மூலமாக, மக்களின் மனங்களை கொள்ளை கொண்டு தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டவர். அதோடு, சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர்.

    இவர், வேலுார் கொசப்பேட்டை நல்லெண்ண பட்டறை தெருவில், தன் சிறு வயதில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள ஈவெரா அரசு பள்ளியில் படித்தார். கலைவாணி என்ற பெயருடன் தன் ஆரம்பக்கல்வியை பயின்றவர், பின்னாளில் இசைக்குயில் வாணி ஜெயராமாக அழைக்கப்பட்டார்.

    தான் தொடக்க கல்வி படித்த பள்ளியை நினைவில் கொண்டிருந்த வாணிஜெயராம், 2015-ம் ஆண்டு பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது, பள்ளி வளாகத்தில் விளையாடிய இடங்கள், தான் படித்த வகுப்பறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு, தன் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

    அதோடு தான் படித்த வகுப்பறையில் உள்ள கரும்பலகையிலும், பழைய நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்தார்.

    தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு ஆசிரியர்களுடன் குரூப் படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார்.

    மக்களின் மனதை தன் இனிய குரலால் மயக்கிய கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைந்தாலும், இந்த பள்ளியில் படித்த அவரின் சிறப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும். 

    • வாணி ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.
    • எந்த மொழியில் பாடல் பாடினாலும், அந்த மொழியின் தொன்மையை உணர்ந்து, அதன் அர்த்தம் மாறாமல் பாடுவதில் வல்லவர்.

    வசீகர குரலுக்கு சொந்தகாரரான வாணி ஜெயராமை விரும்பாத இசை ரசிகர்களே இருக்க முடியாது.

    வாணி ஜெயராம், பள்ளி பருவத்திலேயே இசை மீது அதிக ஆர்வம் காட்டினார். அப்போதே வகுப்பில் மாணவிகள் மத்தியில் இனிமையான பாடல்களை பாடி வியக்க வைப்பார்.

    மேலும் தனது எண்ணங்களை ஓவியமாக தீட்டி ஆசிரியைகளிடம் காட்டுவார். அதனை கண்டு வியந்து போன ஆசிரியர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அவர் மேலும் அந்த துறையில் சிறந்து விளங்க பாராட்டவும் செய்தனர்.

    இளமையிலேயே பாட்டிலும், இசையிலும் சிறந்து விளங்கிய வாணி ஜெயராம், திருமணத்திற்கு பிறகுதான் சினிமா துறையில் பாடல்கள் பாட தொடங்கினார். அவரது பாடலையும், இனிமையான குரல் வளத்தையும் பலரும் பாராட்டினர்.

    இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் ஒருவர். அவர் வாணி ஜெயராமை ஒருமுறை தனது அலுவலகத்திற்கு அழைத்தார்.

    இருவரும் வாணி ஜெயராம் பாடிய பாடல்கள் குறித்து பல மணி நேரம் பகிர்ந்து கொண்டனர். வாணி ஜெயராமின் குரலை பாராட்டிய அப்துல் கலாம், அவரிடம் தனது கவிதை தொகுப்பு ஒன்றை கொடுத்தார்.

    அந்த கவிதை தொகுப்பை படித்து பார்த்த வாணி ஜெயராம் மிகவும் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த அப்துல் கலாம், இந்த கவிதை தொகுப்பை உங்கள் குரலில் பாடலாக பதிவு செய்து தர முடியுமா? என்று கேட்டார்.

    அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட வாணி ஜெயராம், அப்துல் கலாமின் கவிதை வரிகளுக்கு தன் இனிய குரலால் உயிரூட்டினார். இதற்காக அப்துல் கலாம், வாணி ஜெயராமை வெகுவாக பாராட்டினார்.

    வாணி ஜெயராமும் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அவரும் பல கவிதைகளை எழுதி, இசை அமைத்துள்ளார். அவற்றை கேசட்டுகளாகவும் வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு வெளியான கவிதைகளில் 30 கவிதைகளை தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டார். அது ஒரு குயிலின் குரல் கவி தாய் வடிவில் என்ற பெயரில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.

    வாணி ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். எந்த மொழியில் பாடல் பாடினாலும், அந்த மொழியின் தொன்மையை உணர்ந்து, அதன் அர்த்தம் மாறாமல் பாடுவதில் வல்லவர்.

    பாடல் வரிகளின் பொருள் உணர்ந்து அவர் பாடுவதால் அந்த பாட்டும் உயிரோட்டமாக இருக்கும். இதற்காக அவர் ரொம்பவே மெனக்கெடுவார். இது பற்றி வாணி ஜெயராம் ஒருமுறை கூறும்போது, எனக்கு மலையாள பாடல்கள் பாடுவதில் தான் சிரமம் என்று கூறியிருந்தார். ஆனால் மலையாள இசையமைப்பாளர்கள், ரசிகர்கள் கூறும்போது, வாணி ஜெயராமை மலையாளி என்றே கூறுவார்கள். அந்த அளவுக்கு அவர் மலையாள பாடல்களை பாடி இருந்தார்.

    கணவர் ஜெயராம் இறந்த பிறகு அவர் வாழ்ந்த வீட்டிலேயே வசிக்க வேண்டும் என்பதில் வாணி ஜெயராம் பிடிவாதமாக இருந்தார். உறவினர்கள் அவரை தங்களோடு வந்து விடும்படி அழைத்த பின்னரும் செல்லாமல் சென்னை நுங்கம்பாக்கம் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    அங்கு கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுப்பது, ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது என பொழுதை கழித்தார். அதோடு எம்பிராய்டரியிலும் ஆர்வம் காட்டினார். இதனை செய்யும் போது மனதுக்கு நிம்மதியாக இருப்பதாக தனது பணிபெண்ணிடம் கூறுவார்.

    வாணிக்கு 1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி ஜெயராமை திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஈருடல் ஓருயிராக வாழ்ந்தனர். வாணிக்கு ஜெயராம் எல்லாமுமாக இருந்தார். அவரது இசை வாழ்க்கையில் பெற்ற பெரும் பாராட்டுக்கும் ஜெயராம் காரணமாக இருந்தார்.

    இதனால் கணவரின் மேல் வாணி கொள்ளை அன்புடன் இருந்தார். இந்த நிலையில்தான் 2018-ம் ஆண்டு ஜெயராம் திடீரென இறந்த போது வாணி இடிந்து போனார். அதன்பின்பு பொது வெளி நிகழ்ச்சிகளை குறைத்து கொண்டார். கணவர் வாழ்ந்த வீட்டிலேயே வாழ தொடங்கினார்.

    கணவர் இறந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களின் திருமணம் நடந்த அதே பிப்ரவரி 4-ம் நாள் வாணியின் உயிர் பிரிந்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.  

    • வாணி ஜெயராமின் உடலுக்கு காவல்துறை சார்பில் 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
    • பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில் 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் குடும்பத்தினர் முன்னிலையில் வாணி ஜெயராமின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    • பிரபல பாடகி வாணி ஜெயராம் நேற்று வீட்டில் தவறி விழுந்து காலமானார்.
    • வாணி ஜெயராமின் உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் சற்று நேரத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

    தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78), நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர். வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

     


    அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. தற்போது அவரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் 30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

    சற்று நேரத்தில் வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய திரையுலகின் முன்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.
    • இவரது இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். 'வீட்டுக்குவந்த மருமகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' முதலான படங்களில் பாடியிருந்தாலும் 'தீர்க்கசுமங்கலி' படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.


    வாணி ஜெயராம்

    வாணி ஜெயராம்

     

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

     

    வாணி ஜெயராம்

    வாணி ஜெயராம்


    வாணி ஜெயராம் நேற்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாடகி வாணி ஜெயராம் உடல் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.


    வாணி ஜெயராம்

    வாணி ஜெயராம்

     

    இந்நிலையில், மேசை மீது விழுந்து தலையில் பலத்த அடி-காயம் தான் பிரபல பாடகி வாணி ஜெயராம் இறப்பிற்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர். படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயர மேசை மீது அவர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், நெற்றியிலும், மேசையில் விளிம்பிலும் ரத்தக்கறைகள் இருந்தது என்று தடவியல் நிபுணர் சோதனையில் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில், அவரது வீட்டிற்கு சந்தேகப்படும்படி யாரும் சென்றதற்கான அடையாளங்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

    • தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.
    • இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

     

    வாணி ஜெயராம்

    வாணி ஜெயராம்


    நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர். வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.


    நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


    இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாணி ஜெயராம் மறைவால், திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது என்றும் பல்வேறு மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் வாணி ஜெயராம் என்றும் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.
    • வாணி ஜெயராம் மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும்.

    டெல்லி:

    பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

    டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை நுங்கம்பாக்கத்தில் பாடகி வாணி ஜெயராம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • திரையுலக பிரபலங்கள அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னையில் உள்ள ஓமத்தூரார் அரசு மருத்துவமனையில் இவரது உடல் பிரேத பரிசோதனையானது  நடைப்பெற்றது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து திரையுலகத்தில் உள்ள பிரபல பாடகர், பாடகிகள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்திருக்கிறார். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    • வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம்.
    • வாணி ஜெயராமின் மரணம் குறித்து போலீசார் விசாரணை.

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். 'வீட்டுக்குவந்த மருமகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' முதலான படங்களில் பாடியிருந்தாலும் 'தீர்க்கசுமங்கலி' படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.


    வாணி ஜெயராம்

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, வாணி ஜெயராம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாடகி வாணி ஜெயராம் உடல் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


    வாணி ஜெயராம்

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சம்பவ இடத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் இந்த வழக்கு சந்தேக மரணம் 174 என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம்.
    • வாணி ஜெயராமின் மரணம் குறித்து போலீசார் விசாரணை.

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த இவர் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார்.


    வாணி ஜெயராம்

    சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    ×