search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்ணம்"

    • கோபுரத்துக்கு வர்ணம் தீட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்டளையினர் முன்வந்துள்ளனர்.
    • திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெறும்.

    அவிநாசி ூ

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அம்மன் ராஜகோபுரம் பாலாயம் செய்யப்ப ட்டுள்ளது. கோபுரத்துக்கு வர்ணம் தீட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்ட ளையினர் முன்வந்து ள்ளனர்.

    இதனால் அம்மன் ராஜகோபுரத்துக்கு மூங்கில் சாரம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெறும் என செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் தெரிவித்தார்.

    • குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி
    • மாணவ, மாணவிகளும் ஊக்கம் அடைந்துள்ளனர்

    குடிமங்கலம் :

    உடுமலை அடுத்த குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி.இவர் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    சமீபத்தில், தனது சொந்த செலவில் வகுப்பறைக்கு வர்ணம் பூசி, சக ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதேநேரம், இவரது செயலைக்கண்ட மாணவ, மாணவிகளும் ஊக்கம் அடைந்துள்ளனர்.இதன் காரணமாக பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து, தாங்கள் சேமித்த தொகையை திரட்டி, அவர்களே வகுப்பறைக்கு பெயின்ட் அடித்து ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளின் செயலை தலைமையாசிரியர் பழனிசாமி, ஆசிரியர் உட்பட பலரும் வாழ்த்தினர்.

    • பள்ளி வளாகத்தை தூய்மை செய்து 350 மீட்டர் நீளமுள்ள பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து வர்ணம் பூசினர்.
    • பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையில் தற்போது படிக்கும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வேதார ண்யம் அடுத்த பஞ்சநதி க்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து 350 மீட்டர் நீளமுள்ள பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவ -மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து நிதி சேர்த்து ரூ.25000 செலவு செய்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து வர்ணம் பூசினர்.இதை அறிந்த இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளியை நேசித்து தூய்மை பணி மேற்கொண்ட மாணவ ர்களுக்கும் பொற்றோ ர்களுக்கும் விருந்து வைக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் முரளி தரனை அணுகி அனுமதி பெற்று 500 நபர்களுக்கு பள்ளி வளாகத்தில்ஆறு சுவை உணவு விருந்து அளித்தனர்.பள்ளியில் முன்னாள் மாணவர்கள்தங்கள் படித்த வகுப்பறையில் தற்போது படிக்கும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன், ஒய்வு பெற்ற இந்திய ராணுவ விரார் தமிழரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் ,மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    ×