search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோன்"

    • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
    • சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில், லோன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அதன்பிறகு பணம் முழுவதையும் கட்டி முடித்தார். ஆனால் அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கடனுக்கான தொகையை வட்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்பிறகு அந்த வாலிபர், கூடுதல் பணத்தை கட்டவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமி ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அந்த வாலிபரின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதைப்பார்த்து அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் காமத் (வயது 22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஹரியானாவில் வைத்து கடந்த மாதம் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் தலைமையிலான தனிப்படையினர் பீகார் விரைந்தனர்.

    அங்கு பாட்னாவில் பதுங்கி இருந்த அர்ஜூன்குமார் (26) என்பவரை பிடித்தனர். அவர் சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார். அவர் கடன் வசூலிப்பு பிரிவில் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். ஆபாச படத்தை சித்தரித்து அனுப்பியது தொடர்பாக அர்ஜூன் குமாரை போலீசார் கைது செய்து பின்னர் திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

    • எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பரபரப்பு புகார்
    • ரூ.30 ஆயிரம் முன் பணம் செலுத்தினால் ரூ.3 லட்சம் லோன் கிடைக்கும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலஞ்சியை சேர்ந்த மேரி ஸ்டெல்லா என்பவர் தலைமையில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், சங்கம் மூலமாக லோன் தருவதாக எங்களிடம் கூறினார். ரூ.30 ஆயிரம் முன் பணம் செலுத்தினால் ரூ.3 லட்சம் லோன் கிடைக்கும் என்றும், அதில் பாதி பணம் தள்ளுபடி ஆகும் என்றும் அந்த பெண் தெரிவித்தார். மேலும் அந்த பெண்ணின் கணவர் காவல்துறையில் பணியாற்றி இறந்து விட்ட தாகவும் கூறினார்.

    இந்த நிலையில் அந்த பெண் கூறியதை நம்பி குமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பணம் செலுத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி இருக்கிறார்கள். அந்த பணத்தை சம்பந்தப்பட்ட பெண் பல முறை நேரில் வந்து வாங்கி சென்றார். மேலும் நெல்லை மாவட்டத்துக்கு அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட சங்க அலுவலகத்தில் வைத்தும் பணம் வாங்கினர்.

    ஆனால் முன் பணம் செலுத்தியவர்களுக்கு பணம் கெடுக்காததால் கட்டிய பணத்தை நாங்கள் திருப்பி கேட்டோம். அப்போது டெல்லியில் இருந்து பணம் வரவில்லை என்று எங்களிடம் கூறினர். பின்னர் கொரோனா பிரச்சினை முடிந்து கடந்த ஒரு ஆண்டாக சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகியை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து நேரில் சென்று பார்த்த போது சம்பந்தப்பட்ட நபர் பணமே வாங்காதது போல எங்களிடம் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். எஸ்.பி. அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டு மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

    • தட்டிக் கேட்டவரை கத்தியால் குத்தினார்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் ஜோயல் சிங். இவரது வீட்டின் அருகில் வயதான தம்பதியர் வசித்து வருகின்றனர்.

    நேற்று அந்த தம்பதியர் வீட்டுக்கு இரு சக்கர வாகன த்தில் மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் முதிய தம்ப தியரிடம் லோன் வாங்கி தரு வதாக கூறி உள்ளார்.மேலும் அதற்கு முதலில் முன் பணம் கட்ட வேண்டும் என்றும் அந்த நபர் கூறி உள்ளார்.

    ஆனால் முதிய தம்பதி யினர் பணம் கொடுக்க மறுத்தனர். ஆனால் அந்த நபர் முதிய தம்பதியிடம் பணம் பறிக்க முயன்று உள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்ச லிட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து வாலிபர் அங்கி ருந்து ஒட்டம் பிடித்தார்.

    இதற்கிடையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜோயல் சிங் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ரசல் ராஜ் ஆலய பங்கு தந்தை உள்ளிட்டோர் வாலிபரை துரத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோயல் சிங்கை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    படுகாயம் அடைந்த ஜோயல் சிங் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளையும் கைப்பற்றி பார்த்தனர்.

    இதில் தப்பி ஒடிய வாலிபர் கேரள மாநிலம் காஞ்சிராங்குளம் பகுதியை சேர்ந்த சிபு நாயர் என தெரிய வந்தது. அவர் மீது கேரள மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×