search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லெஜண்ட் சரவணன்"

    • தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன்.
    • இவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.


    மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து சமீபத்தில் லெஜண்ட் சரவணன் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.


    இந்நிலையில், தற்போது இவர் காஷ்மீரில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில், "அடுத்த படத்துக்கு எல்லாமே தயாராகிவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்'என குறிப்பிட்டுள்ளார்.


    லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    • ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
    • இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.


    சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.

    வளர்ந்து வரும் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் 'லெஜண்ட்' சரவணன் கலந்து கொண்டார். மேலும், அவர் தனது சமூக வலைதளத்தில், "என்றென்றும் நம் நினைவில் வாழும் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • ஒரு வெற்றிகரமான வியாபாரத்திற்கு அதில் உள்ள உண்மைத்தனமும், கடினமான உழைப்பும் மிக முக்கியமானதாகும்.
    • இன்றைய மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்னை கே.கே.நகரில் 2 கிரவுண்ட் பரப்பளவில் ரூ.6 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரபல தொழில் அதிபர் லெஜண்ட் சரவணன் கூறியிருப்பதாவது:-

    எந்த ஒரு நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் மிகவும் வலிமை மிக்கதாக இருக்கும்.

    ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார சுழற்சியில் வியாபாரத்துறை மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

    ஒரு வெற்றிகரமான வியாபாரத்திற்கு அதில் உள்ள உண்மைத்தனமும், கடினமான உழைப்பும் மிக முக்கியமானதாகும்.

    இன்றைய மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    ஆனால் அதில் காக்கா, கழுகு கதைகள், இவருக்கு இந்த பட்டம், அவருக்கு அந்த பட்டம் போன்ற விஷயங்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டும் தான் உயர முடியும். நாம் உயரந்தால் மட்டும்தான் நாடும் உயரும் என்று கூறினார்.

    • ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
    • அண்ணாமலை, வணிகர் சங்கப் பேரமைப்பு புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்னை கே.கே.நகரில் 2 கிரவுண்ட் பரப்பளவில் ரூ.6 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    5 மாடிகள் கொண்டதாக அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் கடைகள் அமைந்துள்ளது. முதல் மாடியில் பேரமைப்பு தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. 2-வது மாடியில் கருத்த ரங்கம், கூட்டம் நடைபெறுவதற்காக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    3-வது மாடியில் 'சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்' அமைக்கப்பட்டுள்ளது. 4-வது மாடியில் ஆலோசனை அரங்கமும், 5-வது மாடியில் வெளியூர்களில் இருந்து வரும் வணிகர்கள் தங்குவதற்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 15 அறைகள் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    பேரமைப்பு தலைமை அலுவலக திறப்பு விழா இன்று காலையில் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கோவிந்த ராஜூலு வரவேற்க பொருளாளர் ஹாஜி ஏ.எம். சதக்கத்துல்லா கொடி ஏற்றினார்.

    பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் வளாக கட்டிடத்தை லெஜண்ட் குழும தலைவர் லெஜன்ட் சரவணன் திறந்து வைத்தார்.

    யோக ரத்தினம் லெஜண்ட் சரவணன் அரங்கத்தை ஸ்ரீ கோகுலம் குழுமம் நிறுவனர் கோகுலம் கோபாலன் திறந்து வைத்தார்.

    சிட்டி யூனியன் பெயரிலான அரங்கத்தை வங்கியின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் காமகோடி, பேரமைப்பு அலுவலகத்தை போத்தீஸ் ரமேஷ் திறந்து வைத்தனர். பேரமைப்பு அரங்கத்தை ஹட்சன் அக்ரோ நிர்வாக இயக்குனர் சந்திரமோகன் திறந்து வைத்தார்.

    நலிந்த வணிகர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், கரு.நாகராஜன், தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோசம், ஜெயமுருகன், பத்மஸ்ரீ ஐசக், மெடிமிக்ஸ் அனுப், ஜமாலுதீன், கிருஷ்ண மூர்த்தி.


    புதுச்சேரி சிவசங்கர் எம்.எல்.ஏ., பிரபாகரராஜா எம்.எல்.ஏ. மற்றும் சிவ அருள் துரை, அருள் முருகன், மண்டலத் தலைவர்கள் சண்முகம், சூலூர் சந்திர சேகரன், ஆம்பூர் கிருஷ்ணன், கிருபாகரன், ஜோதிலிங்கம், ஆற்காடு சவுகத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், பேரமைப்பு துணைத் தலைவர்கள் கொரட்டூர் த.ராமச்சந்திரன், ஆவடி அய்யார் பவன் அய்யாத் துரை, பேரமைப்பு மாநில துணைத் தலைவரும், செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நலச்சங்க தலைவருமான எஸ்.உத்திரகுமார், மாவட்ட தலைவர்கள் என்.டி.மோகன், அயனாவரம் எஸ்.சாமுவேல், கிழக்கு மாவட்ட தலைவர் திருவொற்றியூர் ஆதி குருசாமி,

    ஆவடி மாநகராட்சி அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர்கள் ஆர்.கே.எம்.துரைராஜ், ஆர்.வேலுச்சாமி, கூட்டமைப்பு தலைவர் அய்யார்பவன் வி.அய்யாத் துரை, சட்ட ஆலோசகர் இரா. அந்திரிதாஜ், செயலாளர் சத்யா கோ.ரவி, பொருளாளர் கே.ஆனந்தன், துணைத் தலைவர் கே.தாமோதரன், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இப்ரா கிம்பாஷா, ராஜேந்திர பிரசாத், வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் என்.ஜெயபால், மாவட்ட செயலாளர் ஹாஜி கே.முகமது, பொருளாளர் சி.மகேஷ்,

    முத்தமிழ்நகர் வியாபாரிகள் சங்க தலைவர் என்.ரவிச்சந்திரன், செயலாளர் ஜெ.சங்கர், பொருளாளர் ராஜா, வி.பி.வில்லியம்ஸ், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.தேசிகன், பொருளாளர் ஜெ. சின்னவன், திருவான்மியூர் செந்தில்குமார், கந்தன் சாவடி வில்சன், மாவட்ட துணைத் தலைவர் சி.எம்.சாமி, அடையாறு பாஸ்கர், அண்ணாநகர் ஆர்.பாலாஜி, வி.ராஜேந்திரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல், மாவட்ட செயலாளர் ஷேக் முகைதீன், பொருளாளர் சத்திய ரீகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, வணிகர் சங்கப் பேரமைப்பு புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்.

    • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
    • லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார்.

    தமிழ்நாடு முழுக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வார இறுதியை தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை என நீண்ட விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாடினர்.

     

    இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டுனர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆயுத பூஜை சிறப்பு பரிசை வழங்கிய லெஜண்ட் சரவணன் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    கொண்டாட்டத்தின் அங்கமாக, ஆட்டோ ஓட்டுனரின் ஆசைக்கு இணங்க லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார். மேலும் அங்கு கூடிய பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'.
    • இப்படம் நேற்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.


    தி லெஜண்ட் போஸ்டர்

    மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியானது. இதையடுத்து 'தி லெஜண்ட்' திரைப்படம் நேற்று (03.03.2023) டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 12.30 மணிக்கு வெளியானது. இந்நிலையில், இப்படம் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாக லெஜண்ட் சரவணன் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    • இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த படம் 'தி லெஜண்ட்'.
    • இப்படம் இன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.

     

    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்


    மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியானது.


    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்


    இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படம் இன்று (03.03.2023) டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 12.30 மணிக்கு ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக தி லெஜண்ட் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    • இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த படம் 'தி லெஜண்ட்'.
    • இப்படத்தின் கதாநாயகியாக இந்தி பட நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார்.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.

     

    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்


    மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்

    இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் நாளை (03.03.2023) அன்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • லெஜண்ட் சரவணன் தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'.
    • இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஆண்டு வெளியானது.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.


    லெஜண்ட் சரவணன்

    மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.


    லெஜண்ட் சரவணன்

    இவர் காஷ்மீர் சென்றுள்ளதால் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது இவரின் பதிவு வைரலாகி வருகிறது. அதில், 'காத்திருப்பு நெருங்குகிறது. விரைவில் அப்டேட்கள் வெளியாகும்' என புகைப்படங்களை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். இதனால் 'லியோ' படம் குறித்த அப்டேட்டாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த படம் 'தி லெஜண்ட்'.
    • இப்படத்தின் கதாநாயகியாக இந்தி பட நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார்.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.

     

    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்

    மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

     

    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்

    இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து லெஜண்ட் சரவணன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், நீங்கள் அனைவரும் காணும் வகையில் தி லெஜெண்ட் விரைவில் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தி லெஜண்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • 'தி லெஜண்ட்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன்.
    • இவர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    தி லெஜண்ட்

    இதைத்தொடர்ந்து, பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரைடல் ஸ்டூடியோவை திறந்து வைத்த லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் கூறினார்.


    திறப்பு விழாவில் லெஜண்ட் சரவணன்

    மேலும் அவர் பேசியதாவது, "மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். கடுமையாக உழைப்பவர்களை எனக்கு எப்போதும் பிடிக்கும். அப்பேற்பட்ட ஒருத்தர் தான் பிரைடல் ஸ்டுடியோ நூரின் நிறுவனர் நூர் முகமது. அவர் மிகவும் அன்பான மனிதர். அவரது அன்பிற்கு கட்டுப்பட்டு தான் இங்கு வந்தேன். நடிகர் நடிகைகளை மிகவும் அழகாக திரையில் காட்டுவதில் ஒப்பனை கலைஞர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நூர் முகமது மிகவும் திறமையான கலைஞர்" என்று பேசினார்.

    • தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தலா.
    • இவரை சர்ச்சை கருத்தால் ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சித்தனர்.

    பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தலா சமீபத்தில் இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவருக்கும் இந்திய கிரிகெட் வீரர் ரிஷப் பண்டுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வந்தன.


    ஊர்வசி ரவுத்தலா

    சமீபத்தில் ஊர்வசி ரவுத்தலா அளித்த பேட்டியில், ரிஷப் பண்ட் தன்னை பார்க்க வந்து பலமணி நேரம் காத்து இருந்ததாகவும், நான் சோர்வாக இருந்ததால் அவரை சந்திக்கவில்லை என்றும் மறைமுகமாக பேசி இருந்தார். இதனால் அதிர்ச்சியான ரிஷப் பண்ட் ரசிகர்கள் ஊர்வசி ரவுத்தலாவை கடுமையாக விமர்சித்தனர்.

    ரிஷப் பண்டும் கோபமாகி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ''வெற்று விளம்பரத்திற்காக சிலர் பொய்களாக பேசுகின்றனர். அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று ஊர்வசி ரவுத்தலாவை கண்டித்து பதிவு வெளியிட்டு பின்னர் அதை நீக்கினார்.


    ஊர்வசி ரவுத்தலா

    இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ரிஷப் பண்டுடனான சர்ச்சை குறித்து ஊர்வசி ரவுத்தலாவிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியபோது, ''நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் என்னை மன்னிக்கவும்" என்று கூறினார். ஊர்வசி மன்னிப்பு கேட்டதால் இருவருக்குமான மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

    ×