search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோபோட்"

    • பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரோபோட் எந்திரம் வழங்கப்பட்டது
    • ஓ.என்.ஜி.சி சார்பில் அரியலூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டது

    அரியலூர்:

    சென்னை ஓஎன்ஜிசி சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான ரோபோட் இயந்திரம் அரியலூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டது.

    அரியலூர் நகராட்சியில், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யத் தேவையான ரோபோட் இயந்திரத்தினை, சென்னை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திருவனந்தபுரம் ஜெனரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் ரோபோட் இயந்திரத்திரம் வடிவமைக்கப்பட்டது.

    இந்த இயந்திரத்தினை வழங்கும் நிகழ்ச்சி, அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஓஎன்ஜிசி அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் கிரன் கலந்து கொண்டு, ரோபோட் இயந்திரத்தினை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதியிடம் வழங்கினார்.

    இதுகுறித்து ஓஎன்ஜிசி அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் கிரன் தெரிவிக்கையில், இந்த ரோபோட் இயந்திரம் தேவையான அதிகபட்ச ஆழத்திற்கு ஏற்ப தனி திறமையுடன் செயல் பட கூடியது மட்டுமின்றி நீண்ட காலத்திற்கு திறம்பட செயல்பட உதவுகிறது. பாதாள குழிகளில் சுத்தம் செய்யும் நேரம் மற்றும் திறன் ஆகியவை மனிதர்களை விட அதிக திறமையாக சுத்தம் செய்யக் கூடியது.

    மேலும், ஆள் இறங்கும் குழிகளிலிருந்து வெளிவரும் நச்சு வாயுவின் அளவையும் சரிபார்த்து அதற்கு ஏற்ப செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிப்பதுடன் விபத்துகளை தடுக்கும் வகையிலும் இந்த ரோபோட் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் சித்ராசோனியா, ஓ.என்.ஜி.சி அறக்கட்டளை பொது மேலாளர்கள் ஆறுமுகம், சுந்தரன், வெங்கட்ராமன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சியோமி நிறுவனம் மிக்ஸ் போல்டு 2 அறிமுக நிகழ்வில் சைபர் ஒன் ரோபோட்-ஐ அறிமுகம் செய்தது.
    • இதன் மொத்த எடை 52 கிலோ, உயரம் 1.77 மீட்டர்கள் ஆகும்.

    சியோமி நிறுவனம் நேரலை நிகழ்ச்சியில் தனது சைபர் ஒன் ரோபோட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இது மனித உருவம் கொண்ட ரோபோட் ஆகும். மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ரோபோட் மணிக்கு 3.6 கிமீ வேகத்தில் செல்லும்.

    சியோமி சைபர் குடும்பத்தில் இரண்டாவதாக அறிமுகமாகி இருக்கிறது சைபர் ஒன் ரோபோட். முன்னதாக கடந்த ஆண்டு நான்கு பயோனிக் கால்களை கொண்ட ரோபோட் டாக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோட் பற்றிய தகவல்கள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.


    இந்த ரோபோட் மொத்த எடை 52 கிலோ, உயரம் 1.77 மீட்டர்கள் ஆகும். நடப்பது, ஓடுவது, பொருட்களை எடுப்பது உள்ளிட்டவைகளை இந்த ரோபோட் செய்யும். மேலும் மணிக்கு அதிகபட்சமாக 3.6 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைபர் டாக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சைபர் ஒன் ரோபோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோட் 45 வித்தியாசமான உணர்ச்சிகளை கண்டறிய முடியும். இதன் முகம் வளைந்த OLED பேனல் கொண்டிருக்கிறது.

    மேலும் இதில் உள்ள இரு மைக்ரோபோன்கள் காதாகவும், இரண்டு கேமராக்கள் மூன்று கோணங்களில் பார்க்கவும் வழி செய்கிறது. 13 மணிக்கட்டுகள் மூலம் இந்த ரோபோட் 21 வித்தியாசமான டிகிரிக்களில் நடமாட முடியும். இதில் உள்ள மோட்டார்கள் 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

    ஆரம்பக் கட்டத்தில் உள்ள சியோமி சைபர் ஒன் ரோபோட்-ஐ உருவாக்க சுமார் ஒரு லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 79 லட்சத்து 68 ஆயிரம் வரை செலவாகும் என சியோமி நிறுவன தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தெரிவித்தார். 

    ×