search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை சுத்தம்  செய்ய ரோபோட் எந்திரம்
    X

    பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரோபோட் எந்திரம்

    • பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரோபோட் எந்திரம் வழங்கப்பட்டது
    • ஓ.என்.ஜி.சி சார்பில் அரியலூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டது

    அரியலூர்:

    சென்னை ஓஎன்ஜிசி சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான ரோபோட் இயந்திரம் அரியலூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டது.

    அரியலூர் நகராட்சியில், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யத் தேவையான ரோபோட் இயந்திரத்தினை, சென்னை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திருவனந்தபுரம் ஜெனரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் ரோபோட் இயந்திரத்திரம் வடிவமைக்கப்பட்டது.

    இந்த இயந்திரத்தினை வழங்கும் நிகழ்ச்சி, அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஓஎன்ஜிசி அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் கிரன் கலந்து கொண்டு, ரோபோட் இயந்திரத்தினை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதியிடம் வழங்கினார்.

    இதுகுறித்து ஓஎன்ஜிசி அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் கிரன் தெரிவிக்கையில், இந்த ரோபோட் இயந்திரம் தேவையான அதிகபட்ச ஆழத்திற்கு ஏற்ப தனி திறமையுடன் செயல் பட கூடியது மட்டுமின்றி நீண்ட காலத்திற்கு திறம்பட செயல்பட உதவுகிறது. பாதாள குழிகளில் சுத்தம் செய்யும் நேரம் மற்றும் திறன் ஆகியவை மனிதர்களை விட அதிக திறமையாக சுத்தம் செய்யக் கூடியது.

    மேலும், ஆள் இறங்கும் குழிகளிலிருந்து வெளிவரும் நச்சு வாயுவின் அளவையும் சரிபார்த்து அதற்கு ஏற்ப செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிப்பதுடன் விபத்துகளை தடுக்கும் வகையிலும் இந்த ரோபோட் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் சித்ராசோனியா, ஓ.என்.ஜி.சி அறக்கட்டளை பொது மேலாளர்கள் ஆறுமுகம், சுந்தரன், வெங்கட்ராமன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×