search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேக்ளா பந்தயம்"

    • ஈஷா யோக மையத்தில் மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது.

    'தமிழ் தெம்பு' திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில் ரேக்ளா பந்தயப் போட்டி இன்று (மார்ச் 17) விறுவிறுப்பாக நடைபெற்றது.

    200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் இடம் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

    தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றி கொண்டாடும் 'தமிழ் தெம்பு' என்னும் 9 நாள் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

    நிறைவு நாளான இன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் மாட்டு வண்டிப் போட்டி (ரேக்ளா பந்தயம்) ஆதியோகி முன்பு நடத்தப்பட்டது. ஈஷாவில் முதல்முறையாக நடந்த ரேக்ளா போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    இதற்காக, கோவை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவே ஈஷாவிற்கு வருகை தந்தனர்.

    முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது. தொடக்க புள்ளியில் இருந்து கொடி அசைத்த உடன் 2 நாட்டு மாடுகளுடன் கூடிய ரேக்ளா வண்டி மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்தது. ஒரு வண்டி பந்தய கோட்டை அடைந்த பின்னர் அடுத்த வண்டி அனுமதிக்கப்பட்டது. 

    ஒவ்வொரு நாட்டு மாடுகளும் காண்போரை அசர வைக்கும் வகையில் எல்லை கோட்டை நோக்கி சீறி பாய்ந்தன. 200 மீட்டர் போட்டி நிறைவு பெற்ற பின்னர் 300 மீட்டர் போட்டி நடத்தப்பட்டது. இவ்விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

    இரண்டு பிரிவிலும், முதல் இடம் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

    2-ம் பரிசாக ரூ.50,000, 3-ம் பரிசாக ரூ.25,000, 4-ம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டது. இதுதவிர 5 முதல் 15 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.3,000-ம், 16 முதல் 30 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.2,000-ம் பரிசு தொகையாக வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

    • மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
    • தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    உடுமலை,அக்.17-

    உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் ஒன்றியம், துங்காவியில் ராமேகவுண்டன்புதூர் மற்றும் துங்காவி பொதுமக்கள், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசெந்தில், கு.சாமிதுரை, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கௌதம்ராஜ் உட்பட இளைஞர் அணி நண்பர்கள், கிளைக்கழக செயலாளர்கள் கோவிந்தசாமி, சிவராஜ் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • தாராபுரம் சாலையில் குண்டடம் ஒன்றிய திமுக., சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது
    • முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1 பவுன் தங்க நாணயம் வழ்ஙகப்பட்டது.

    தாராபுரம்:

    தாராபுரத்தை அருகேயுள்ள உப்பாறு அணை அருகே பூளவாடி_தாராபுரம் சாலையில் குண்டடம் ஒன்றிய திமுக., சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்திற்கு பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், சென்னிமலை, முத்தூர் ,ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், கரூர், அரவக்குறிச்சி ,கன்னிவாடி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமானோர் பந்தயத்தில் கலந்து கொண்டனர். 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

    200 மீட்டர் மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.இரண்டாம் பரிசு 3/4 தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஐந்தாவது பரிசு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.

    300 மீட்டர் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு 3/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம்- கோப்பை வழங்கப்பட்டது.நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

    உப்பாறு அணை அருகே நடைபெற்ற ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தை காண குண்டடம் ,கொடுவாய் ,தாராபுரம் ,உடுமலைப்பேட்டை ,காங்கேயம் பகுதிகளிலிருந்து ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    • இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு 200 மீட்டர் ,300 மீட்டர் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு பந்தயங்கள் நடைபெற்றது.
    • 280 ரேக்ளா வண்டிகளில் இரண்டு மாடுகள் பந்தயங்கள் நடைபெற்றது.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் சார்பில் 10ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் நடைபெற்ற பந்தயத்தில் தாராபுரம் ,பழனி, சத்திரப்பட்டி ,திருப்பூர்,பொள்ளாச்சி, காங்கேயம், சங்கரண்டாம்பாளையம், புளியம்பட்டி, சோமனூர், அன்னூர், சத்தியமங்கலம், என 50க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த 280 ரேக்ளா வண்டிகளில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு 200 மீட்டர் ,300 மீட்டர் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு பந்தயங்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் தாளாளரும் ,பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. எஸ். என். வேணுகோபாலு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஆபீஸ் தோட்டம் செல்லமுத்து மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரேக்ளா பந்தயத்தில் வாலிபர்கள் பங்கேற்று மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்தனர்.
    • வாலிபர்கள் பங்கேற்று 20 மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்த னர்.

    வடவள்ளி

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது தேவராயபுரம். இந்த பகுதியில் அதிகாலை ரேக்ளா பந்தய போட்டி நடைபெற்றது.

    இதில் நரசீபுரம், பேரூர், தீத்திபாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் பங்கேற்று 20 மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்த னர்.

    ரேக்ளா பந்தயம் தேவராயபுரத்தில் தொடங்கி நரசீபுரம் வரை சென்றது. இதனால் அந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் சத்தம் கேட்டு மக்கள் எழுந்து பார்த்தனர்.

    அதிகாலை நேரத்தில் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறிய தாவது:-

    கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் ரேக்ளா பந்தயம் போட்டி நடத்தி வருகின்றனர். இதனால் இரவில் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது. மேலும் இரவில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்சுக்கும் வழிவிடுவதில்லை. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது.

    அதிகாலை நேரத்தில் மக்கள் தூங்கி கொண்டிருக்கும் வேளையில் அதிக சத்தத்துடன் செல்வதால் அவதியாக உள்ளது. எனவே போலீசார் இரவு நேரங்களில் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரங்கம்புதூரில் கக்கடவு, ரங்கம்புதூர், மூட்டாம்பாளையம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் இரண்டாமாண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
    • 200 மீட்டர், 300 மீட்டர் தூரம் காளைகள் சீறிப்பாய்ந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கோைவ:

    நெகமம் அடுத்த ரங்கம்புதூரில் கக்கடவு, ரங்கம்புதூர், மூட்டாம்பாளையம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் இரண்டாமாண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

    இதில் பழனி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பொள்ளாச்சி, மூலனூர், செஞ்சேரிமலை, சாளையூர், கரட்டுமடம், ஆனைமலை, வேட்டைகாரன்புதூர், கோட்டூர், மலையாண்டிபட்டினம், அங்கலக்குறிச்சி, காளியாபுரம், நெகமம், செட்டியக்காபாளையம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, எரிசனம்பட்டி, ஆவலப்பம்பட்டி, சடையபாளையம், காளியப்பம்பாளையம், தேவிபட்டணம், புரவிபாளையம், வடக்கிபாளையம், சமுத்தூர், மடத்துக்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், துங்காவி ஆகிய பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன.

    இதில் 200 மீட்டர், 300 மீட்டர் தூரம் காளைகள் சீறிப்பாய்ந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரேக்ளா பந்தயத்தை காண அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.   

    ×