search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்ஜான் நோன்பு"

    • ரம்ஜான் நோன்பு திறக்க இளைஞர்கள் இலவசமாக உணவளிக்கின்றனர்.
    • இளைஞர்களை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை ரத்த உறவுகள் அமைப்பு மற்றும் சதக்கத்துல் சுன்னா அறக்கட்டளை சார்பில் சஹர் நேர உணவு தயார் செய்ய முடியாமல் இருக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆலிம்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், வெளியூரில் இருந்து தங்கி பணிபுரியும் ஊழியர்கள், அரசு மருத்து வமனையில் உள்நோயாளிகளுக்கு துணை இருப்ப வர்கள், செவிலியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் ரமலான் நோன்பு வைப்ப தற்கான சஹர் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனர் செய்யது அகமது கபீர் கூறியதாவது:-

    12 பேர் கொண்ட இளைஞர் குழு மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 600 முதல் 700 பேர் வரைக்கும் இலவச உணவு வழங்குகிறோம்.

    பெரும்பாலும் நேரில் வந்து உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மருத்துவ மனையில் இருப்பவர்கள், வீடுகளில் ஆண் உதவி இல்லாத தாய்மார்களுக்கு எங்கள் அமைப்பின் இளைஞர்கள் வீடு தேடி போய் உணவை வழங்கி வருகின்றனர்.

    இலவச உணவு வழங்கு வதில் நாளொன்றுக்கு ரூ, 25 ஆயிரம் முதல் ரூ. 28 ஆயிரம் வரை செலவாகிறது. எங்கள் அமைப்பில் உள்ள இளைஞர்கள் தங்களால் முடிந்த பொருளாதார உதவியை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை.

    நல்லுள்ளம் கொண்ட ஈகையாளர்கள் தங்களால் முடிந்த உதவியை பணமாகவோ, உணவுக்கான பொருளாகவோ வழங்கி னால் ரமலான் முழுவதும் இலவச உணவு வழங்க உதவியாக இருக்கும் என்றார்.

    அமைப்பு நிர்வாகிகள் பாஹிம், ஹமீது, சாலிம், நுஸைர், ஜியாவுல், ஷஹாதத், பாக்கர், முஜீபு ரஹ்மான், காசீம், ஹம்தான், ஜெய்னுலாப்தீன் இவர்களுடன் கீழக்கரை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் இணைந்து இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை உணவு வழங்கும் பணியை சேவை யாக செய்து வருகின்றனர்.

    தூய பொதுசேவைகளின் மூலம் சிறந்த எடுத்துக் காட்டாக வாழும் இளை ஞர்களை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகி ன்றனர்.

    நமது தேவைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை கொண்டவன் இறைவன் மட்டுமே. எனவே எதையும் இறைவனிடமே கேட்போம். அவனருளைப்பெறுவோம்.
    புனிதமான இந்த ரமலானில் நாம் செய்யக்கூடிய நன்மையான அமல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு செய்தால் இறைவனின் நற்கூலியைப்பெறலாம். நரகத்தை விட்டும் பாதுகாப்பும் பெறலாம். நாம் செய்யவேண்டிய அமல்களில் குறிப்பிடத்தக்கது தொழுகை, கடமையான ஐந்து நேரத் தொழுகைகளை குறித்த நரத்தில் இமாம் ஜமாத்துடன் சேர்ந்து தொழுவது சிறப்பு மிக்கது. இதுகுறித்து திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:

    மேலும் பொறுமையை கொண்டும், தொழுகையைக்கொண்டும (அல்லஹ்விடம்) உதவி தேடுங்கள் (திருக்குர்ஆன்2:45)

    நம்பிக்கை கொண்டோரே பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் (திருக்குர்ஆன் 2:153)

    தொழுகையை நிலைநாட்டுவதுடன் திருக்குர்ஆனையும் ஓதிவர வேண்டும். குறிப்பாக திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இந்த ரமலான் மாதத்தில் அதை அதிகமாக ஓதிவர வேண்டும். ஏன்என்றால் மறுமைநாளில் நமக்கு சொர்க்கத்தை பரிந்துரை செய்யும் வல்லமை கொண்டது திருக்குர்ஆன்.

    திருக்குர்ஆனை முறையாக ஓதி வந்தவர் மறுமைநாளில் இறைவனை சந்திக்கும் போது அவருக்காக அவர் ஓதிய திருக்குர்ஆன் சிபாரிசு செய்யும். இறைவா இந்த மனிதன் திருக்குர்ஆனை ஓதிக்கொண்டே இருந்தான். இரவில் தூக்கத்தை விட்டும் விலகி இருந்து இவன் திருக்குர்ஆன் ஓதினான். எனவே இவனுக்கு சொர்க்கத்தை அளிப்பாயாக என்று திருக்குர்ஆன் தனது சிபாரிசை தெரிவிக்கும். இது தவிர சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடையும் இந்த திருக்குர்ஆன் வழிகாட்டும்.

    ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய) தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைக் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது என்று திருக்குர்ஆன்(2:185) குறிப்பிடுகிறது.

    நமக்கு எது தேவை என்றாலும் இறைவனையே அழைக்க வேண்டும், இறைவனிடமே கேட்க வேண்டும்.

    இது குறித்து திருக்குர்ஆன் (2:186) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    (நபியே) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றிக்கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன். ஆதலாம் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும்(அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.

    மற்றொரு வசனத்தில் நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள ரத்த நரம்பை விட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம் எனும் இறைவன் குறிப்பிடுகின்றான் ( திருக்குர்ஆன் 50:16)

    நமது தேவைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை கொண்டவன் இறைவன் மட்டுமே. எனவே எதையும் இறைவனிடமே கேட்போம். அவனருளைப்பெறுவோம்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை. 
    இறைவனின் நற்கூலியைப்பெற நாமும் இறைவன் மீது நம்பிகை கொண்டு, அவன் வகுத்தவழியில் வாழ்ந்து, தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளை நிறைவேற்ற முன் வருவோம்.
    முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்களுக்கிடையில் இருந்தபோது, ஒருவர் அவர்களிடம் வந்து ‘ஈமான் என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனுடைய சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும் மரணத்திற்குப்பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக்கூறினார்கள்.

    அடுத்து இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டதற்கு‘ இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீங்கள் இணையாகக் கருதாத நிலையில் அவனை வணங்குவதும், தொழுகையை நிலை நிறுத்தி வருவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தை வழங்கி வருவதும், ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும் என்ற கூறினார்கள்.

    அடுத்து இஹ்ஸான் என்றால் என்ன? என்று அவர் கேட்ட போது (இஹ்ஸான் என்பது ) அல்லாஹ்வை (நேரில்) காண்பதை போன்று நீர் வணங்குவதாகும். நீர்  அவனைப்பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மை பார்த்து கொண்டே இருக்கிறான் என்றார்கள்.

    அடுத்து உலகம் அழியும் நாள் எப்போது? என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதைப்பற்றி கேட்கப்பட்டவர் (நான்) அதைப்பற்றிக் கேட்கின்ற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களை பற்றி உமக்கு சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப்பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்: மேலும் கருப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக்கொண்டிருந்த மக்கள் உயர்ந்த் கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக்கொள்ளல்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிமாட்டார் என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

    நிச்சயமாக (உலக முடிவு) காலத்தை பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்) தான் இருக்கிறது. (திருக்குர்ஆன்31:34)

    பின்னர் அம்மனிதர் திரும்பிச்சென்றார். அவரை  அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரை காணவில்லை.

    அப்போது இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு  அவர்களின் மார்க்கத்தை கற்றுக்கொடுக்க வந்திருக்கிறார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உமர்(ரலி)

    இதுகுறித்து திருக்குர்ஆன்(2:277) வசனம் குறிப்பிடுகையில், ‘ பார் ஈமான் கொண்டு நற்கருமங்களை செய்து தொழுகையை நியமமாகக் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது: அவர்களுக்கு அச்சமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’ என்று தெரிவிக்கிறது.

    இறைவனின் நற்கூலியைப்பெற நாமும் இறைவன் மீது நம்பிகை கொண்டு, அவன் வகுத்தவழியில் வாழ்ந்து, தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளை நிறைவேற்ற முன் வருவோம்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    தவறு செய்யும் மனதினை இறைவன் மன்னிக்கும் குணம் கொண்டவனாகவே இருக்கின்றான். அவன் செய்யும் தவறுகள் தொடரும் போது சிறிய சிறிய தண்டனைகள் கொடுத்து அவனை எச்சரிக்கை செய்கின்றான்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் மிகவும் கிருபை நிறைந்தவன், மன்னிக்கும் குணம் கொண்டவன். அவன் மனிதர்களை படைத்ததே தன்னை வணங்க வேண்டும், தான் வகுத்த வழியில் வாழ்ந்து சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்குத்தான்.

    தவறு செய்யும் மனிதனை தண்டிக்க வேண்டும் என்பது இறைவனின் நோக்கம் அல்ல. மாறாக தான் படைத்த இந்த மனித இனம் தனது கட்டளைப்படி நடக்கிறதா? என்பதை சோதிக்கவே இந்த உலக வாழ்க்கையை மனித இனத்திற்கு இறைவன் கொடுத்துள்ளான்.

    இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘இறைவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்: உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு. மேலும் எவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்’(திருக்குர்ஆன் 69:2)

    இதனால் தான் நாம் செய்யும் தீமையான எந்த செயல்களுக்கும் உடனடி தண்டனை என்பது கிடையாது. ஏன்எனில் இறைவன் கூறுகிறான், ‘என் அருள், என் கோபத்தை முந்திவிட்டது’ என்று.

    தவறு செய்யும் மனதினை இறைவன் மன்னிக்கும் குணம் கொண்டவனாகவே இருக்கின்றான். அவன் செய்யும் தவறுகள் தொடரும் போது சிறிய சிறிய தண்டனைகள் கொடுத்து அவனை எச்சரிக்கை செய்கின்றான். அப்போதும் மனிதன் தன்னைமாற்றிக்கொள்ளவில்லை என்றால் இவ்வுலகிலும், மறுமையிலும் அவனுக்கு கடும் தண்டனை அளிக்கின்றான்.

    எனவே முதலில் இறைவன் தரும் எச்சரிக்கையை உணர்ந்து கொண்டு, அவன் குறைவான தண்டனை தரும் போதே நம்மை திருத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மறுமை நாளில் காத்திருக்கும் மிக மோசமான தண்டனையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும், நரகத்தில் இருந்தும் விடுதலை பெறலாம்.

    இதற்கு நாம் செய்ய வேண்டியது நமது வாழ்நாளில் இறைவணக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். நற்செயல்களை அதிகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு இந்த ரமலான் மாதம் நமக்கு வழிகாட்டுகிறது.

    ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி வாரி வழங்கினார்கள் என்பது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

    ‘இறைத்தூதுர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள்: ரமலான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல்(அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலான் மாதத்தில் ஒவ்வொர் இரவிலும் நபி(ஸல்) அவர்களை சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருநத) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக்காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களை சந்திக்கும் போது அவர்கள் மழைக்காற்றை விட அதிகமாக (மக்களுக்கு நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.

    புதிதமான இந்த ரமலானில் நாமும் வாரிவழங்குபவர்களாக மாறுவோம். பாவங்களை விட்டு விலகி நன்மைகளை நாளும் பெறுவோம்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    ஒரு மனிதன் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்றால் அவனிடம் கீழ்க்கண்ட 8 விஷயங்கள் இருக்க வேண்டும். இதில் 4 உள்ளம் சம்பந்தப்பட்டது. மீதி 4 உடல் சந்பந்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
    ஒருமுறை நபித்தோழர் அபூஹுரைரா(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘நாயகமே மறுமையில் உங்களின் பரிந்துரையின் மூலம் நற்பாக்கியம் பெறுபவர் யார்?’ எனக்கேட்டார்கள்.

    அதற்கு நபியவர்கள், ‘உமக்கு இருக்கும் பேராசையினால் இந்தக்கேள்வியை கேட்கிறீர்கள். உம்மைத்தவிர வேறு யாரும் இந்தக் கேள்வியை கேட்கமாட்டார்கள் என்பதை நான் அறிவேன்’ என்று கூறினார்கள். பின்னர் தொடர்ந்து என் பரிந்துரையின் மூலம் மறுமையில் நற்பாக்கியம் பெறுபவர்கள் யார் என்றால், எவர் உள்ளத்தூய்மையுடன் மனதாலும், உள்ளத்தாலும், இறைவன் ஒருவனே அவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவாரோ அவர் தான் என்றார்கள்.

    ஒரு மனிதன் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்றால் அவனிடம் கீழ்க்கண்ட 8 விஷயங்கள் இருக்க வேண்டும். இதில் 4 உள்ளம் சம்பந்தப்பட்டது. மீதி 4 உடல் சந்பந்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

    1. தெரிந்தோ, தெரியாமலோ பாவம் செய்து விட்டால், அதன்பிறகு இனிமேல் அந்த பாவத்தை செய்யமாட்டேன் உள்ளத்தால் உறுதி கொள்ள வேண்டும்.

    2. பாவத்தை விட்டு நீங்க வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி செய்த பின்னர் அதை மனதால் செயல்படுத்தவும் முன்வர வேண்டும்.

    3. இதையும் மீறி பாவம் செய்தால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற பயம் மனதில் ஏற்பட வேண்டும்.

    4. யார் மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்கிறார்களோ அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று இறைவன் கூறிஇருக்கிறான். அதன்படி பாவமன்னிப்பு கேட்கும் எனது பாவங்களும் இறைவனால் மன்னிக்கப்படும் என்று மனதில் உறுதியாக எண்ணம் கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட இந்த நான்கும் உள்ளம் சார்ந்தது. இனி உடல் சார்ந்த 4 விஷயங்கள்:

    5. ஏதேனும் பாவம் செய்து விட்டால், உடனே இறைவனிடம் பாவமன்னிப்பு பெற வேண்டும் என்று மனதில் முடிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் உடலை சுத்தம் செய்து பள்ளிவாசல் வரவேண்டும். அங்கு 4 ரக்அத்கள் தொழ வேண்டும்.

    6. தொழுகை முடிந்த பின்னர் 70 முறை ‘அஸ்தஃபிருல்லாஹ் ரப்பீ மின்குல்லி தன்பின்வ கதீஅதின் வஅதூபு இலைஹி’ என்று கூற வேண்டும். (இதன் பொருள் : ‘ எனது எல்லாப்பாவங்களில் இருந்தும் இறைவனிடம் இருந்து மன்னிப்பு கேட்கிறேன். நான் இறைவனின் பக்கமே மீண்டு விட்டேன்’ என்பதாகும்). அடுத்து ‘ சுப்ஹான ரப்பியல் அளீம் வபிஹம் திஹி’ என்று 100 முறை கூற வேண்டும்.

    7. தன்னால் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

    8. பாவ மன்னிப்பு வேண்டி ஒருநாள் நோன்பு இருக்க வேண்டும்.

    ஒருவன் இந்த எட்டு நிலைகளையும் சரியாக கடைப்பிடித்துவிட்டால் அவனது பாவமன்னிப்பு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்.

    இது குறித்து திருக்குர்ஆன் (11:114,115) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்’.

    எனவே இந்த புனிதமிகு ரமலானில் நல்லறங்களை அதிகம் செய்து இறைவனிடம் பாவ மன்னிப்பை பெற்று சுவனபதியில் இடம் பெற நான் அனைவரும் முயற்சி செய்வோம், ஆமீன்.

    வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

    (மனிதர்களே) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனை கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்)அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204)
    புனிதமான இந்த ரமலான் காலங்களில் மிக அதிகமாக திருக்குர்ஆன் ஓத வேண்டும். ஏன் என்றால் மறுமை நாளில் ஒரு மனிதருக்கு சிபாரிசு செய்யக்கூடிய அந்தஸ்து கொண்டவை நோன்பும், திருக்குர்ஆனும். இவை இரண்டும் மறுமைநாளில் அல்லாஹ்விடம் ‘இந்த மனிதன் நோன்பு வைத்து திருக்குர்ஆன் ஓதியதற்கு நாங்கள் சாட்சி கூறுகிறோம். இதற்காக இவனுக்கு நீ சொர்க்கத்தை அளிப்பாயாக’ எனறு இறைவனிடம் சிபாரிசு செய்யும்.

    சிறப்புகள் மிகுந்த திருக்குர்ஆன் ஒரு ரமலான் மாதத்தில் தான் இறக்கப்பட்டது. அந்த திருக்குர்ஆன் மீது நம்பிக்கை கொண்டு அதை ஓதி வருபவர்களுக்கு கிடைக்கும் பரிசு சொர்க்கம் ஆகும். இதை புறக்கணித்தவர்கள் நஷ்டம் அடைந்தவர் ஆவார். இது குறித்த வசனங்கள் வருமாறு:

    ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் -(என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது’. (திருக்குர்ஆன் 2:185)

    ‘எவர்களுக்கு நாம் வேதத்தை அருளியிருக்கின்றோமோ, அவர்கள் இவ்வேதத்தை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகின்றார்கள். இவர்கள் இதன் மீது (இந்தக்குர்ஆன் மீது உண்மையான உள்ளத்துடன்) நம்பிக்கை கொள்கின்றார்கள். இன்னும் எவர்கள் இதனைக் குறித்து நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கிறார்களோ அவர்களே உண்மையில் நஷ்டமைந்தவர்களாவர்’. (திருக்குர்ஆன் 2:212)

    ‘எவர்கள் தங்கள் இறைவனின் (திருக்குர்ஆன் என்னும்) தெளிவான அறிவைப்பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் (“ஈஸா”வுக்கு) அருளப்பட்டது (இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழி காட்டியாகவும் அருளாகவும் அருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக் கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சுவனபதிதான்.) இந்த (மூ)வகுப்பாரில் எவர்கள் இதனை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். (திருக்குர்ஆன் 11:17)

    (மனிதர்களே) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனை கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்)அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204)

    திருக்குர்ஆனை தொடர்ந்து ஓதி வருபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று  இறைவன் வாக்களித்துள்ளான். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அந்த சொர்க்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

    இம்மையில் எப்போதும் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த மனிதன் மறுமையில் சொர்க்கம் செல்வான். அப்போது  அந்த மனிதனிடம், இறைவனின் நல்லடியாரே, நீர் திருக்குர்ஆனை நிதானமாக ஓதியபடி சொர்க்கத்திற்கு செல். நீ ஓதும் திருக்குர்ஆன் வாசகங்களை எந்த இடத்தில் முடிக்கிறாயோ அவ்வளவு தூரும் உள்ள இடமும் உனக்குத்தான். இதுவே சொர்க்கத்தில் நீ தங்குமிடமாகும்.

    இந்த ரமலான் காலத்தில் அதிகமாக திருக்குர்ஆர்ஓதுவோம். சொர்க்கவாதியாக இறைவனின் அருளைப்பெறுவோம், ஆமீன்.

    வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை. 
    நாமும் நபிகள் நாயகம் காட்டித்தந்த வழியில் நடந்து நற்செயல்கள் செய்து இறைவனின் நல்லடியார்களில் ஒருவராக மாற வேண்டும். இதன் மூலம் சொர்க்கத்தையும் பரிசாக பெற வேண்டும். இதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகா, ஆமீன்.
    ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சந்தித்து, ‘நபியே நான் சுவனம் செல்ல விரும்புகிறேன். இதற்கு உதவும் வகையில் நான் கடைபிடிக்க வேண்டியநற்செயல்களை எனக்கு சொல்லித்தாருங்கள்’ என்ற கேட்டார். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட 4 நற்செயல்கள் குறித்து கூறினார்கள்.

    உணவு வழங்குதல்: பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு வயிறார உணவு கொடுக்க வேண்டும். அதுபோல தன் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு முகம் சுளிக்காமல், சளைக்காமல் உணவு அளித்து உபசரிக்க வேண்டும். ‘எவர் அல்லாஹ் மீதும், மறுமை மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் விருந்தாளிகளை மகிழ்வித்து கண்ணியப்படுத்த வேண்டும்’.

    ஸலாம் கூறுதல் : மனிதர்கள் வாழ்வில் சாந்தியையும், சமாதானத்தையும் அளிக்கும் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற சொற்களை அதிகம் பரப்ப வேண்டும். எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எதிரில் இருப்பவர் எந்த மனநிலையில் இருந்தாலும் ஸலாம் கூற வேண்டும். மனிதர்களுக்கு மத்தியில் அன்பும், அரவணைப்பும் பரவ ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற  சொல் உதவும். சுவனம் செல்லவும் இது வழிகாட்டும். மேலும் ஸலாம் கூற முந்திக்கொள்ள வேண்டும். ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எந்த பாகுபாடும் இன்றி ஸலாம் கூறப்பட வேண்டும். இதன் மூலம் அவரது மனதில் பெருமையும், அகங்காரமும் அழியும். எவரிடம் பெருமை இல்லையோ அவர் நிச்சயம் சொர்க்கம் செல்வார்.

    சொந்தங்களுடன் சேர்ந்து வாழுங்கள் : எவர் அல்லாஹ் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தனது சொந்தங்களுடன் சேர்ந்து வாழட்டும். எவர் தனது ஆயுளிலும், உணவிலும் இறைஅருள் வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் சொந்தங்களுடன் சேர்ந்து வாழட்டும்.

    இரவு வணக்கம் : மக்கள் தூங்கிக்கொண்டு இருக்கும் இரவு நேரத்தில் இறைவனை நினைத்து தொழுகை நடத்த வேண்டும். இதன் மூலம் இறைவனின் நல்லடியார்களின் ஒருவராக நாம் ஆக முடியும். இதன் மூலம் சொர்க்கத்தையும் நாம் இறைவனிடம் இருந்து பரிசாக பெறமுடியும்.

    நபிகளார் குறிப்பிட்ட இந்த 4 நற்செயல்களை செய்வதன் மூலம் எளிதில் சுவனம் செல்ல முடியும்.  

    முன்பின் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு சொர்க்கவாதியாக அறிவிக்கப்பட்ட பிறகும் இரவில் நீண்ட நேரம் நின்று தொழுகையில் ஈடுபடும் வழக்கம் நபிகளிடம் இருந்தது. இறைவனின் நல்லடியானாகவே இவ்வாறு நபிகள் நற்செயல்கள் செய்தார்கள்.

    நாமும் நபிகள் நாயகம் காட்டித்தந்த வழியில் நடந்து நற்செயல்கள் செய்து இறைவனின் நல்லடியார்களில் ஒருவராக மாற வேண்டும். இதன் மூலம் சொர்க்கத்தையும் பரிசாக பெற வேண்டும். இதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகா, ஆமீன்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில், காஷிபி, தாங்கல், சென்னை.
    ‘எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள்’ (திருக்குர்ஆன் 40:40)
    புனித ரமலானில் நோக்கமே ‘ இறைவனின் நல்லடியார்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பது தான்’. தனது நல்லடியார்கள் சுவனம் செல்ல எளிய வழிமுறைகளையும் இறைவன் தந்துள்ளான்.

    அதில் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்விற்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பது. இதன் மூலம் நாம் இறைவனின் அருளைப்பெற முடியும்.

    ‘அல்லாஹ்புக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம்’  என்று திருக்குர்ஆன் (3:132) வழிகாட்டுகிறது.

    ‘உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், கவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் திருக்குர்ஆன் (3:133) குறிப்பிடுகிறது.

    மேலும், சொர்க்கம் செல்ல உதவும் நற்செயல்கள் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘மேலும் எவர்கள்  நற்பேறுடையவர்களோ அவர்கள் சுவனம் செல்வார்கள். வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள், முடிவுறாத அருட்கொடைகள் (அங்கு அவர்களுக்குக்கிடைத்துக்கொண்டே இருக்கும்)’.

    ‘எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள்’ (திருக்குர்ஆன் 40:40)

    இறைவனின் நேசத்தைப்பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் திருக்குர்ஆன் (3:134) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றார்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள், தவிர கோபத்தை அடக்கிக்கொள்வார்கள், மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள், (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

    அத்துடன் மறுமைநாளில் இறைவனின் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும், நமது நன்மை, தீமைக்கு ஏற்ப இறைவனிடம் கூலி கிக்கும் என்பதையும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப வாழ்பவர்களின் தங்குமிடம் சொர்க்கம் என்கிறது திருக்குர்ஆன்(79:40-41),

    ‘மேலும், எவன் தன்னுடைய அதிபதியின் முன்னிலையில் நிற்பது குறித்து அஞ்சினானோ இன்னும், தீய இச்சைகளை விட்டுத் தனது மனத்தைத் தடுத்திருந்தானோ, அவனுடைய இருப்பிடம் கவனமாக இருக்கும்’.

    இந்த புதிதமான ரமலான் காலத்திலும் நமது வாழ்நாள் முழுவதிலும் இறைவனுக்கு அஞ்சி நடந்து, நற்செயல்கள் செய்து சுவனத்தில் இடம்பெற நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும், ஆமீன்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை
    வெற்றிகளைத் தேடித்தரும் இந்த ரமலான் மாதத்தில் இறைவனிடம் சொர்க்கத்தையும், வாழ்வில் வெற்றியையும் கேட்டுப்பெறுவோம், ஆமீன்.
    ரமலான் மாதம் வெற்றிகளை தேடித்தரும் மாதமாகும். இதற்கு உதாரணமாக பத்ர்யுத்த நிகழ்வை குறிப்பிடலாம்.

    நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை, அவரது 40-வது வயதில் இறைத்தூதராக ஆக்கினான் இறைவன். மக்கா நகரில் 13 ஆண்டுகள் ஏகத்துவ பிரச்சாரத்தை நபிகளார் மேற்கொண்டார்கள். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இறைவனின் கட்டளையை நபிகளார் நிறைவேற்றினார்கள். பின்னர் மக்காவை விட்டு மதீனா செல்லும்படி அவர்களுக்கு இறைவன் கட்டளை பிறப்பித்தான். இதையடுத்து நபிகளார் தனது கூட்டத்தாருடன் மதீனா சென்றார்கள்.

    மதீனா வந்து ஓராண்டுக்கு பிறகு நபிகளாருக்கு ஒரு செய்தி வந்தது. நபிகளாரை மிகக்கடுமையாக எதிர்த்த அபூ சுப்யான் தலைமையில் ஒரு வியாபாரக்கூட்டம் ஷாம்தேசத்தில் இருந்து மதீனா வழியாக மக்கா செல்வதாக தகவல் வந்தது.

    தங்களுக்கு எதிராக உள்ள கூட்டத்தை அந்த வழியாக செல்லவிடாமல் தடுக்க நபிகளாரின் தோழர்கள் விரும்பினார்கள். நபிகளாரும் இதற்கு அனுமதி கொடுக்கவே 319 நபர்கள் கொண்ட ஒரு சிறிய கடை சென்றது. அவர்களிடம் 2 குதிரைகள், 70 கோ வேறு கழுதைகள் மற்றும் சிறிய ஆயுதங்கள் மட்டுமே இருந்தது.

    இதற்கிடையில் இதுபற்றிய தகவல் அறிந்த அபூ சுப்யான் தனது கூட்டத்தில் இருந்த ஒருவரை குதிரையில் மக்காவுக்கு அனுப்பி பெரும்படையை வரவழைத்தார். குறைந்த எண்ணிக்கையில் இருந்த இறை நம்பிக்கையாளர்கள் கூட்டத்திற்கும், அதிக எண்ணிக்கையில் இருந்த இறை நிராகரிப்பாளர்கள் கூட்டத்திற்கும் இடையே பத்ர் என்ற இடத்தில் யுத்தம் நடந்தது.

    யுத்தம் தொடங்கும் முன்பு நபிகளார் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். இறைவன் இதை ஏற்றுக்கொண்டான். அல்லாஸ் வானவர்களை அனுப்பி வைத்தான். ஆயிரக்கணக்கில் வந்த வானவர்கள் நபிகளாரின் படைகளுடன் சேர்ந்து போரிட்டனர். முடிவில் இறைநம்பிக்கையாளர்களின் கூட்டத்திற்கு வெற்றி கிடைத்தது.

    இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.

    ‘பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளை விட ஆயுதத்திலும் தொலையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்கு பயந்து(வழிப்பட்டு) நடங்கள்’.

    ‘(நபியே அப்பொழுது) நீங்கள் நம்பிக்கையாளர்கள் நோக்கி “(வானத்திலிருந்து)இறங்கிய மூவாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று கூறியதையும் ஞாபகமூட்டுகள்’. (திருக்குர்ஆன் 3:123,124)

    வெற்றிகளைத் தேடித்தரும் இந்த ரமலான் மாதத்தில் இறைவனிடம் சொர்க்கத்தையும், வாழ்வில் வெற்றியையும் கேட்டுப்பெறுவோம், ஆமீன்.

    வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    “இறை நம்பிக்கை கொண்டவர்களே, பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்: நிச்சயம் அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான்”.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதம் குறித்து கூறும் போது, ‘ இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி சொர்க்கம்’ என்றார்கள்.

    பொறுமை குறித்து இறைவன், திருக்குர்ஆனில் (2:153) இவ்வாறு கூறுகிறான்: “இறை நம்பிக்கை கொண்டவர்களே, பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்: நிச்சயம் அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான்”.

    பொறுமையை மேற்கொள்வது என்பது 3 நிலைகளில் அமையும். இதில் முதலிடம் பிடிப்பது, ‘அல்லாஹ்வை வணங்குவதன் மூலம் பொறுமை ஏற்படுவது’.

    இறைவனை தினமும் 5 நேரம் வணங்குவது என்பது அனைவருக்கும் எளிதான செயலாக அமைவதில்லை. உலக வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சிரமங்கள், அதிக குளிர், அதிக வெப்பம், மழை, தூக்கம், சோம்பல் போன்ற தடைகள், உடல்நிலையில் பின்னடைவு, தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்ற நெருக்கடிகள் இறைவணக்கத்திற்கு தடையை ஏற்படுத்தலாம். அது போன்ற நேரங்களில் இறைவணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

    பொறுமை என்பது சோதனை ஏற்பட்ட உடனே வரவேண்டும். எல்லா நிலைகளையும் கடந்து தன்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை வரும் போது இனி இறைவன் விட்டவழி என்று கூறுவது பொறுமை அல்ல, இயலாமை.

    இரண்டாவது நிலை, இறைவனுக்கு மாறு செய்வதில் இருந்து விலகி இருத்தல். பாவமான காரியங்கள் அனைத்தும் இன்பமானவை. இருப்பினும் அதைவிட்டு விலகி பொறுமையுடன் இருப்பது அவசியம். ஏன் என்றால் இறைவனால் தடுக்கப்பட்டவற்றில் இருந்து எவ்வளவு இன்பம் வந்தாலும் அது ஷைத்தானின் செயலாகவே இருக்கும். எனவே அதில் இருந்து விலகி பொறுமையுடன் இருப்பதே இறைவழியில் நடப்பதாகும்.

    மூன்றாவது நிலை: சோதனைகள், சிரமங்கள் ஏற்படும் போது அதற்கு தீயவழியில்தீர்வு தேடுவது கூடாது. பொறுமையுடன் இருந்து இறைவனின் துணையுடன் அதை வெற்றிகொள்ள முன்வர வேண்டும்.

    இதுகுறித்து திருக்குர்ஆன்(2:155) குறிப்பிடும் போது, ‘(நம்பிக்கையாளர்களே) பயம், பசி மேலும் பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே இச்சோதனைகயால் ஏற்படும் கஷ்டங்களை) சகித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள நற்செய்தி கூறுங்கள்’ என்று தெரிவிக்கிறது.

    மேலும் பொறுமையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எது என்பது குறித்தும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.

    ‘அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர் தாம் நேர்வழி பெற்றவர்கள்‘( திருக்குர்ஆன் 2:156, 157)

    இந்த புனித ரமலானில் நாம் பொறுமையாளர்களாய் இருந்து இறைவனின் அருளைப்பெற முயற்சி செய்வோம். ஆமீன்.

    வடகரை, ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    இந்த புனிதமான ரமலான் காலத்தில் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்றாடி பாவமன்னிப்பு பெற முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன், அதற்கு பரிகாரமாக சொர்க்கமும் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.
    இறைவன், படைப்பினங்களை மூன்று நிலையில் படைத்துள்ளான். அவை: மலக்குகள் (வானவர்கள்), ஷைத்தான்கள், மனிதர்கள்.

    குற்றமே செய்யாத, செய்யத்தெரியாத படைப்பு, வானவர்கள், இறைவன் அவர்களுக்கு என்ன கட்டளையிட்டானோ அதை அப்படியே ஏற்று செய்யக்கூடியவர்கள். இது குறித்து திருக்குர்ஆன் 66:7 இவ்வாறு குறிப்பிடுகிறது:‘ அல்லாஹ் ஏவிய எதிலும் மலக்குகள் மாறு செய்யமாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்ட படியே அவர்கள் செய்து வருவார்கள்’.

    இறைவனுக்கு முற்றிலும் மாறுசெய்யக்கூடியவர்கள் ஷைத்தான்கள். இவர்களிடம் எந்ந நல்ல செயலையும் காணமுடியாது. இன்னும் சொல்வதென்றால், நல்லது செய்வோரை தடுக்கவும் செய்வார்கள். மறுமையில் இவர்களது புகலிடம் நரகம் தான்.

    மனிதன் நல்லதும் செய்வான், தீமையும் செய்வான். நற்காரிங்கள் மட்டும் செய்யும் மனிதன், இறைவனின் முதல் படைப்பான வானவர்களை விட உயர்ந்த நிலையை பெறுவான். தீமையான செயல்களை செய்பவன் ஷைத்தானை விட கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு நரக நெருப்பில் கருகுவான்.

    இதுபற்றி இறைவன் கூறும் போது, ‘நாம் இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களை பாதுகாத்து கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) நரகத்தில் தள்ளிவிடுவோம்’ என்று எச்சரிக்கை செய்கிறான். (திருக்குர்ஆன் 19:72)

    மேலும் பாவங்கள் செய்தவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்டால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘ ஒருவர் மானக்கேடான செயலைச்செய்து விட்டால் அல்லது(ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புகோருவார்கள். (ஏனெனில் ) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்க மாட்டார்கள்’.

    ‘இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் கவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள்’. (திருக்குர்ஆன் 3:135,136).

    நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, ‘ ஆதம் உடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்கள் தாம். ஆனால் அவர்களில் சிறந்தவர் யாரென்றால், எவர் தம் பாவத்தை உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுகிறாரோ அவர் தான்’ என்று கூறியுள்ளார்கள்.

    இந்த புனிதமான ரமலான் காலத்தில் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்றாடி பாவமன்னிப்பு பெற முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன், அதற்கு பரிகாரமாக சொர்க்கமும் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

    வடகரை. ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    ‘எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களே, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்’ என்று திருக்குர்ஆன் (3:57) குறிப்பிடுகிறது.
    ரமலான் மாதத்தில் முதல் 10 நாட்கள் இறைவனின் அருளைப்பெறும் நாட்களாகும். நடுப்பகுதி 10 நாட்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் நாட்களாகும். முதல் 10 நாட்கள் மூலம் எவர் அல்லாஹ்வின் அருளைப்பெற்றுக்கொள்கிறாரோ அவருக்கு நடுப்பத்தில் ‘மக்பிரத்’ எனும் பாவமன்னிப்பு இறைவன் வழங்குகிறான்.

    இது குறித்து திருக்குர்ஆன்(66:8) இவ்வாறு கூறுகிறது:

    ‘ஈமான் கொண்டவர்களே, கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்பு பெறுங்கள், உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி உங்களை கவனச்சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் கீழே ஆறுகள் (சதா) ஓடிக்கொண்டே இருக்கும்; (தன்)நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக, எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக, நிச்சயமாக நீ எல்லாப்பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறிப் (பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.

    ஒருவர் பாவமன்னிப்பு பெற வேண்டும் என்றால் 4 முக்கிய நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை

    1. தான் செய்த பாவத்திற்கான, பாவச்செயலுக்காக வருந்த வேண்டும்.

    2. மீண்டும் அந்த பாவத்தை செய்ய மாட்டேன் என்று உறுதிகொள்ள வேண்டும். அந்த உறுதியின் படி நடக்கவும் வேண்டும். இதன்படி மீண்டும் அந்த பாவத்தை செய்யலாமல் இருந்தால் இறைவன் நமது பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டான் என்பது அடையாளமாகும். ஆனால் மீண்டும் அந்த பாவத்தை செய்தால், இறைவனின் பாவமன்னிப்பு கிடைக்கவில்லை என்பது பொருளாகும்.

    3. இறைவன் விதித்த கடமைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும். மனிதர்களில் யாரிடமாவது, ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு பெற வேண்டும். ஏன் என்றால் அவர் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்க மாட்டான்.

    4. பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனை உண்டு என்பதை உணர்ந்து அறிந்து பயம் கொள்ள வேண்டும். அந்த பய உணர்வுடன் நடந்து கொண்டு பாவங்களில் இருந்து விலகிட வேண்டும்.

    ‘எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களே, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்’ என்று திருக்குர்ஆன் (3:57) குறிப்பிடுகிறது.

    இறைவனின் திருப்பொருத்தத்தை பெறக்கூடியவர்களாக வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நம் அனைவரின் கடமையாகும்.

    வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    ×