search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு பணிகள்"

    • வீடுகளுக்குள்ளும், சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும்.
    • மழை வெள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கான்கிரீட் வீடுகளை அமைத்து தர வேண்டும்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் காயல்பட்டினம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு தனித்தீவாக காட்சியளிக்கிறது.

    இது சம்பந்தமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகம்மது அபூபக்கர் தலைமையில் மாநில செயலாளர் காயல் மகபூப், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் நவாஸ் அகமது, மில்லி கவுன்சில் நிர்வாகி இபுனு சவூது ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளரான சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் செயலாளர் முருகானந்தன் ஆகியோரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    காயல்பட்டினம் நகர் முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வரும் நிலையில் பொதுநல அமைப்புகளின் மூலம் இயன்ற அளவு மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியையும் செய்து அரசு சார்பில் போர்க்கால அடிப்படையிலான மீட்பு பணிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இதன்படி நகரில் உடனடியாக மின்விநியோகத்தை வழங்கவும், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவையை தொடர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வீடுகளுக்குள்ளும், சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண தொகையை வழங்கவும், ஆவின் பால் தடையின்றி கிடைக்கவும், ஆண்டுதோறும் நிகழும் மழை வெள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கான்கிரீட் வீடுகளை அமைத்து தர வேண்டும். கிடப்பில் உள்ள மழை நீர் வடிகால் திட்டத்திற்கு உடனடியாக செயல் வடிவம் கொடுக்கவும், சிறிய அளவு மழை பெய்தால் கூட வரண்டியவேல் விலக்கு அருகில் உள்ள பாலம் தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டு தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு விடுவதால் குறிப்பிட்ட அந்த பாலத்தை உயர்த்தி அமைக்கும் பணியை உடனே மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து காயல்பட்டினத்திற்கு ஆவின் பால் விநியோகத்தை தொடரவும், உப மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை விரைந்து சீரமைக்கவும், காயல்பட்டினத்தில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளை விரைந்து செயல்படுத்த சிறப்பு அதிகாரியை நியமித்தும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடனடியாக உத்தரவிட்டார். 

    • நிலநடுக்கத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்; பல வீடுகள் இடிந்து விழுந்தன
    • ட்சாய், ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் பதிவிட்டுள்ளார்

    நேற்று மதியம், சீனாவின் வடமேற்கு எல்லையில் கிங்காய்-திபெத் பீடபூமி (Qinghai-Tibet plateau) பிராந்தியத்தில் கான்சு-கிங்காய் (Gansu-Qinghai) எல்லைக்கருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை 118க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன.

    பலர் உயிரை காத்து கொள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

    சீன அரசு, மீட்பு பணிகளை விரைவாக துவங்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், பாதிக்கப்பட்டோருக்கு புகலிடம் மற்றும் உடனடி நிவாரணம் கிடைக்க ஒருங்கிணைந்த முயற்சிக்கு உத்தரவிட்டார்.

    இந்நிலையில், வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான தைவான் நாட்டின் முதல் பெண் அதிபர், ட்சாய் இங்-வென் (Tsai Ing-Wen), சீனாவில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அத்துடன் சீனாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தைவான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ட்சாய் ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் இரங்கலை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது பதிவில், "நிலநடுக்கத்தில் தங்களின் உயிருக்கு உயிரானவர்களை இழந்து வாடும் சீனர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவிக்கிறேன். உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ள அனைவருக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என நாங்கள் நம்புகிறோம். கடினமான இயற்கை பேரிடர் மீட்பு பணியில் சீனாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தைவான் தயாராக உள்ளது" என தெரிவித்தார்.

    சுயாட்சி பெற்ற நாடாக தன்னை தைவான் அறிவித்தாலும், சீனா அந்நாட்டின் மீது முழு உரிமை கொண்டாடி வருகிறது.

    சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வரும் நிலையில், சீனா தனது உரிமையை நிலைநாட்ட தைவானின் வான்வெளியிலும், நீர்பரப்பிலும், தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரித்து வந்தது.

    ஆனால், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு, தைவான் அதிபர் உதவிக்கரம் நீட்டுவதை அரசியல் விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர்.

    2008ல் சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் (Sichuan province) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அப்போதும் தைவான், சீனாவிற்கு நேசக்கரம் நீட்டி தன் நாட்டிலிருந்து நிபுணர் குழுவை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    • 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்
    • புவியியல் சூழல் மிகவும் சவாலாக இருந்ததாக ஐரோப்பிய நிறுவனம் தெரிவித்தது

    பெரும் மழை, கடும் பனி, மலைச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனைத்துவிதமான பருவகால மாற்றங்களிலும் சீராக பக்தர்கள் பயணிக்கும் வகையில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் எனப்படும் நான்கு இந்து மத புனித தலங்களை இணைக்கும் வகையில் "சார் தாம்" (Char Dham) சாலைகள் அமைக்கும் திட்டத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    மலைமாநிலம் என அழைக்கப்படும் உத்தரகாண்ட்டில், உத்தரகாசி மாவட்டத்தில் அமைக்கப்படும் சாலை பணிகளின் தொடர்ச்சியாக எண்-134 தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுரங்க நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களுக்கு பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த சுரங்கம் இடிந்து விழுவது இது முதல் முறை அல்ல என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    "இரு புறம் எதிரெதிர் திசையில் மக்கள் பயணிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்ட சுமார் 4.5 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சுரங்க பாதையில் இது போன்ற நிகழ்வுகள் சுமார் 20 முறை ஏற்பட்டுள்ளது. சுரங்கங்கள் அமைக்கும் பணியில் இடிந்து விழும் நிகழ்வு வழக்கமான ஒன்றுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இம்முறை 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 'கேவிட்டி' என அழைக்கப்படும் இத்தகைய இடிந்து விழும் நிகழ்வுகள், சில்க்யாரா பகுதியை விட பார்கோட் பகுதியில் அதிகம் நடந்தன" என பொதுத்துறை நிறுவனமான தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன (NHIDCL) இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    இந்த சாலை பணிகளுக்கான ஒப்பந்தத்தை நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி எனும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு செயல்திட்ட வடிவமைப்பை வழங்கும் பணியை ஐரோப்பிய நிறுவனமான பெர்னார்ட் க்ரூப் (Bernard Gruppe) முன்னெடுத்தது. முன்னர், இந்நிறுவனம், சுரங்கம் அமைக்கும் இடங்களின் புவியியல் சூழல், ஆவணங்களில் கொடுக்கப்பட்டிருந்ததை காட்டிலும் பெரும் சவாலாக இருந்தது என குறிப்பிட்டிருந்தது.

    ஆனால், மலைப்பகுதியில் சுரங்க சாலைகள் அமைக்கும் பணி மிகவும் சிக்கலானது என ஒப்பு கொள்ளும் கட்டிட வல்லுனர்கள், கான்க்ரீட் சாலைகளும் சுரங்கமும் கட்டுவது நிறைவடைந்தால், அதன் பிறகு அது இடிந்து விழும் சாத்தியம் மிக குறைவு என கூறுகின்றனர்.

    ×