search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கலம்"

    • பாபநாசம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனம் துவக்க விழா நடந்தது.
    • பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனம் துவக்க விழா நடைபெற்றது.

    பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றுப் பேசினார். விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் கலந்துகொண்டு திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி உதயகுமார், முத்து மேரி மைக்கேல் ராஜ், ஜாஃபர் அலி, புஷ்பா சக்திவேல், கீர்த்தி வாசன், சமீரா பர்வீன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கஜலட்சுமி, கோட்டையம்மாள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
    • விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம் :

    விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தமிழக முதல்வரை சந்திக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி,செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறினர்.

    இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் மூலம் விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை உயர்த்துவது என்றும் மேலும் நிலை கட்டணத்தை உயர்த்துவது என்றும் முடிவு செய்த போது தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதற்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு மின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    தமிழ்நாடு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் மூலம் சென்னை, கோவை மற்றும் மதுரை கருத்து கேட்பு கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பாக கோவையில் ஆயிரக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்கள் எடுத்துரைத்தார்கள்.பின்னர் திருப்பூர் வருகை தந்த முதலமைச்சரை சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி எடுத்துரைக்கப்பட்டது.ஆனால் தற்போது நிலை கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டு மின்சார கட்டணம் ஒரு ரூபாய் 47 பைசா உயர்ந்துள்ள காரணத்தால் விசைத்தறி தொழிலை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மேலும் இதனை சார்ந்த ஜவுளி தொழில்கள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே நூல் விலை ஏற்ற மற்றும் இறக்கம் காரணமாக ஜவுளி தொழில் அதனை சார்ந்த உள்ள விசைத்தறி தொழில் மிகவும் பாதிப்படைந்து அழியும் தருவாயில் உள்ளது. ஆகவே தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் எடுத்துரைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை குழு தலைவர் வழங்கினார்
    • மின்கலம் மூலம் இயங்கும் தெளிப்பான்களின் பயன்கள் பற்றியும் கையாளும் முறை பற்றியும் செயல் விளக்கம்

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் வட்டா ரத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மின்கலத்தில் இயங்கும் தெளிப்பான்கள் வழங்க தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுஇருந்தது.இந்த நிலையில் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் "அட்மா" திட்டத்தின் கீழ் மின்கலத்தில் இயங்கும் தெளிப்பான் செயல்விளக்கம் கொட்டாரம் அருகே உள்ள மந்தாரம்புதூர் கிராமத்தில் நடைபெற்றது.

    இச்செயல் விளக்கத்தின் போது விவசாயிகளுக்கு மின்கலம் மூலம் இயங்கும் தெளிப்பான்களின் பயன்கள் பற்றியும் கையாளும் முறை பற்றியும் செயல் விளக்கம் செய்து காண்பிகப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் தாமரைபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மின்கலத்தில் இயங்கும் தெளிப்பான்களை வழங்கி னார். நிகழ்ச்சிக்கு வேளா ண்மை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரின்ஸ் ஜெயசிங், உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகலெட்சுமி, ஜெயகுமாரி, கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்

    ×