search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கம்பிகள்"

    • மின் இணைப்பு சர்வீஸ் வயர்களை இன்சுலேட்டர் உருளை கொண்டு இழுத்து கட்ட வேண்டும்.
    • கரன்ட் டிவைஸ் பொருத்துவதன் மூலம் மின் விபத்துக்களை தவிர்க்கலாம்.

    தஞ்சாவூர்:

    மழை காலங்களில் பொது மக்கள் மின் விபத்தினை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தஞ்சை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    பழுதடைந்த மின் இணை ப்பு சர்வீஸ் வயர்களை அருகில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் தெரி வித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது சர்வீஸ் வயரில் ஜாயிண்ட் மற்றும் சர்வீஸ் பைப் வாய்பகுதியில் ஜாயிண்ட் போடுவதை தவிர்க்க வேண்டும்.

    மின் இணைப்பு சர்வீஸ் வயர்களை இன்சுலேட்டர் உருளை கொண்டு இழுத்து கட்ட வேண்டும்.

    வீட்டு மின் இணைப்பில் உள்ள நில இணைப்பு பைப் மற்றும் வயர் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். நில இணைப்புக்கு செல்லும் கம்பிகளை தொடக்கூடாது. சர்வீஸ் மின் பைப்பில் கொடிகளை கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

    மின் இணைப்பில் ஈஎல்சிபி எனப்படும் எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் அல்லது ஆர்சிடி'என அழை க்கப்படும் 'ரெசிடுயல் கரன்ட் டிவைஸ் பொருத்துவதன் மூலம் மின் விபத்துக்களை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்கிறது.
    • மின்வெட்டு ஏற்படுவதால் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி குத்தாலத்தில் அமைந்துள்ள திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அகரக்கொந்தகையில் இருந்து வாழ்மங்கலம் செல்லும் மின் கம்பிகள் சேதமடைந்து மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வயல் பகுதியில் காற்று வேகமாக வீசும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு அறுந்து விழுந்து மின் வெட்டு ஏற்படுகிறது.

    மேலும் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்வதால் அடிக்கடி மின்மாற்றில் உள்ள வயர்கள் அறுந்து விடுகிறது.இதனால் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் மின்தட்டுப்பாடு பல மணி நேரம் நீடிப்பதால் பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    மேலும் வாழ்மங்கலம் பகுதி பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு போதிய குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடை பெற உள்ளது.

    எனவே மங்களபுரம் மின் வழித்தடத்தில் உள்ள டி.பி.எஸ்.நகர், ராம்நகர் 1 முதல் 4-ம் தெரு வரை, பாலாஜி நகர் 1 முதல் 7-ம் தெரு வரை, பி.எஸ்.என்.எல். குடியிருப்பு மெயின்ரோடு வரை காலை 9.30 மணி மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பூக்குளம் மின்பாதையில் மின்கம்பிகள் மாற்றும் பணி நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்தில் பூக்குளம் மின்பாதையில் மின்கம்பிகள் மாற்றும் பணி நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அன்பழகன்நகர், ஆனந்தம்நகர், மேட்டுத்தெரு, சுங்கான்திடல், சின்னத்தெரு, பெரியதெரு, ஜெகநாதன்நகர், வடுகத்தெரு, ராஜராஜசோழன்நகர், திருவள்ளுவர் காலனி, பள்ளியக்கிரஹாரம் கடைதெரு மற்றும் பைபாஸ் ஆகிய இடங்களிலும், கம்பம் மாற்றும் பணிக்காக மூலைஅனுமார்கோவில், போலீஸ் ராமசாமி நாயக்கர் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்து உள்ளார்.

    • அறுவடை செய்யும் விவசாயிகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் எந்திரத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்
    • பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து எதுவும் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில், 1200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயிகளின் வயல்வெளிகளில் ஆங்காங்கே மின் கம்பங்கள் உள்ளன.

    இந்த மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாய பணிகள் செய்வதில் அச்சப்படுகின்றனர். மேலும் அறுவடை நேரங்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் விவசாயிகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் எந்திரத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    தற்போது சம்பா சாகுபடி முடிவடைந்த நிலையில் விவசாயிகள் தங்களது நெல் வயல்களில் பயிர், உளுந்து உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். குறுவை சாகுபடி அதனைத் தொடர்ந்து குறுவை சாகுபடி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் இப்பகுதிகளில் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து எதுவும் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'மின்வாரிய துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்' என்றனர்.

    • மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
    • மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் மின்விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர்தெரு பகுதியில் உள்ள ஆலமரம் அருகே மின்கம்பிகள் மரக்கிளைகளுக்கு இடையே செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    அதேபோல வையாபுரி தோப்பு பகுதியில் மரங்கள் அடர்ந்த தோப்பு வழியாக மின்கம்பிகள் செல்வதாலும், மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, குடியிருப்பு வீடுகளுக்கு மேலே செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதாலும் மின் கம்பிகளால் மின்விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கிராமமக்கள் இருந்து வருகின்றனர்.

    மின்பாதையை மாற்றி அமைக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் சோழன் வாயிலாக மின்வாரியத்திடம் கிராமமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நடுவதற்கு மின்கம்பம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் எந்த ஒரு பணியும் நடை பெற வில்லை என்று கூறப்படுகிறது. எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு மின் வாரியம் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டுமென கிராமமக்கள் தொடர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது:-

    ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்பு குடியிருப்பு பகுதியில் அதிகளவில் மின்கம்பிகள் தாழ்வாக தொட்டு விடும் தூரத்தில் செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    பலத்த காற்று அடிக்கும் சமயத்தில் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மின் கம்பிகள் அறுத்து விழுந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் கிராமமக்கள் மின்சாரம் இல்லாமல் பல நாட்கள் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அரசு உடனடியாக நடவடி க்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நள்ளிரவில் பெரிய கிளை முறிந்து விழுந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
    • காற்று அதிகமாக வீசும் நேரத்தில் அந்த பகுதிக்கு செல்ல அச்சமாக உள்ளது.

    திருவையாறு:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கும் அளித்தனர்.

    திருவையாறு தாலுக்கா ராயம்பேட்டை ஊராட்சி ஆக்கினாதபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

    எங்கள் ஊரில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப்பெரிய அரசமரம் ஊரின் முகப்பு பகுதியில் உள்ளது.

    அந்த மரத்தில் ராட்சத ஈக்களால் ஆன தேன் கூடு 25 உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு நள்ளிரவில் பெரிய கிளை முறிந்து விழுந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் வேறு எந்த பாதிப்பும் இல்லாததால் ஊராட்சி மன்ற தலைவர் மரத்தை வெட்டி அகற்றி கொடுத்து மின்சார ஊழியர்களை அழைத்து கம்பிகளை இணைக்கப்பட்டு மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    ஆனால் மரத்தின் நடுவே பொந்து விழுந்து மோசமான நிலையில் ஆபத்தான நிலையிலும் உள்ளது. மழை பெய்யும் நேரத்திலும், காற்று அதிகமாக வீசும் நேரத்திலும் அந்த பகுதிக்கு செல்ல அச்சமாக உள்ளது.

    கடந்த 6-ம் தேதி இரவு மழை பெய்த போது அரச மரத்தின் ஒரு ராட்சசகிளை உத்தமநல்லூர் செல்லும் சாலை எங்கள் கிராமத்தில் இருந்து வெளியேயும் உள்ளேயும் செல்ல முடியாத அளவுக்கு ஆள் நடமாட்டம் இல்லாத போது முறிந்து விழுந்தது.

    இதில் நான்கு போஸ்ட் மரம் உடைந்து மின்கம்பிகள் அறுந்ததில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாதவாறு கிராம இளைஞர்கள் மின்மாற்றிக்கு சென்று மின்சாரத்தை துண்டித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய பெருந்தலைவர் இணைந்து மரத்தை அகற்றியும் மின்சாரத்தை சரி செய்து கொடுத்தனர்.

    எனவே உயிர் சேதம் ஏதும் ஏற்படும் முன்பு ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரத்தை விரைந்து வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதே மனுவை திருவை யாறு தொகுதி எம்.எல்.ஏ துரை சந்திரசேகரனிடமும் பொதுமக்கள் அளித்துள்ளனர்.

    • உயர் அழுத்த மின்மாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது.
    • உயர் அழுத்த மின்கம்பிகள் 6 அடி உயரத்தில் செல்வதால் விவசாயிகள் டிராக்டரை வயலிற்கு கொண்டு செல்லமுடியாத நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வழியாக கும்பகோணம், பூந்தோட்டம், மயிலாடுதுறை, காரைக்கால் செல்லும் மெயின் சாலை உள்ளது.கணபதிபுரம், இடையாத்தாங்குடி, சேஷமூலை, கிடாமங்கலம், ஏர்வாடி, போலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.அதேபோல் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளுர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் அந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் காரைக்கால்- பூந்தோட்டம் சாலையில் கிடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்மாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது.மேலும் மேற்கண்ட பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்துமோ? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.மேலும் அந்த வழியாக செல்லும் லாரி, வேன், கார், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை செல்ல முடியாத நிலை உள்ளது.தற்போது குறுவை நெல் சாகுபடி வேலைகள் நடைபெறுவதால் உயர் அழுத்த மின்கம்பிகள் 6 அடி உயரத்தில் செல்வதால் ஏதேனும் ஆபத்துகள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் விவசாய பணிகளை செய்ய விவசாயிகள் டிராக்டரை வயலிற்கு கொண்டு செல்லமுடியாமலும் அவதிக்கு ள்ளப்பட்டு ள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்த ப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்தவித நடவடி க்கையும் எடுக்கவில்லை எனவும் பெரும் விபத்து கள் ஏற்படுவதற்குமுன்பு தாழ்வாக செல்லும் மின்க ம்பிகள் மற்றும் சேதமடைந்த மின்மாற்றியையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×