search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கம்பிகளில் கொடிக்கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும்
    X

    மின்கம்பிகளில் கொடிக்கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும்

    • மின் இணைப்பு சர்வீஸ் வயர்களை இன்சுலேட்டர் உருளை கொண்டு இழுத்து கட்ட வேண்டும்.
    • கரன்ட் டிவைஸ் பொருத்துவதன் மூலம் மின் விபத்துக்களை தவிர்க்கலாம்.

    தஞ்சாவூர்:

    மழை காலங்களில் பொது மக்கள் மின் விபத்தினை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தஞ்சை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    பழுதடைந்த மின் இணை ப்பு சர்வீஸ் வயர்களை அருகில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் தெரி வித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது சர்வீஸ் வயரில் ஜாயிண்ட் மற்றும் சர்வீஸ் பைப் வாய்பகுதியில் ஜாயிண்ட் போடுவதை தவிர்க்க வேண்டும்.

    மின் இணைப்பு சர்வீஸ் வயர்களை இன்சுலேட்டர் உருளை கொண்டு இழுத்து கட்ட வேண்டும்.

    வீட்டு மின் இணைப்பில் உள்ள நில இணைப்பு பைப் மற்றும் வயர் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். நில இணைப்புக்கு செல்லும் கம்பிகளை தொடக்கூடாது. சர்வீஸ் மின் பைப்பில் கொடிகளை கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

    மின் இணைப்பில் ஈஎல்சிபி எனப்படும் எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் அல்லது ஆர்சிடி'என அழை க்கப்படும் 'ரெசிடுயல் கரன்ட் டிவைஸ் பொருத்துவதன் மூலம் மின் விபத்துக்களை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    Next Story
    ×