search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில கல்லூரி"

    அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாநில கல்லூரி, லயோலா கல்லூரி தேசிய தர வரிசை பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக கவர்னர் பன்வாரிலால் பாராட்டு தெரிவித்துள்ளார். #TNGovernor #AnnaUniversity
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லியில் மனிதவள மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தரப்பட்டியலை ஜனாதிபதி வெளியிட்டார். அதில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாநில கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவை பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்திருப்பது மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது.

    பல்கலைக்கழகங்கள் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடத்தையும், பொறியியல் கல்வி நிறுவனங்கள் 9-வது இடத்தையும் பிடித்திருப்பதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். கல்லூரிகள் வரிசையில் மாநில கல்லூரி 3-வது இடத்தையும், லயோலா கல்லூரி 6-வது இடத்தையும் பெற்றிருப்பது, உயர் கல்வியில் அவர்களின் சிறப்பான செயல்பாட்டினால் கிடைத்த இடமாகும்.

    இந்த புகழுக்கும், சாதனைக்கும் கடுமையாக உழைத்த துணைவேந்தர்கள், முதல்வர்கள், மாணவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernor #AnnaUniversity
     
    ஆவடி பஸ் நிலையம் அருகே மாநில கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருநின்றவூர்:

    ஆவடி, கோவர்த்தனகிரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 21). மாநில கல்லூரியில் விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று மாலை அவர் ஆவடி பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு நின்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் முகேசை வழிமறித்து அரிவாளால் வெட்டி தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் முகேசின் கை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ‘ரூட்டுதல’ பிரச்சனையில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் முகேஷ் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து பச்சையப்பன் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் யோகேஷ்வரன், மணிகண்டன், விஷால் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே மாணவர் முகேசை ஓட ஓட விரட்டி வெடும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வாட்ஸ்-அப்களில் பரவி வருகிறது.
    ×