search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Presidency College"

    • கல்லூரிக்கு வந்தால் மாணவர்களை திருத்துவதற்கு தயாராக உள்ளோம்.
    • மாணவர்கள் பயணிக்கும் பெட்டிகளில் போலீசாரும் உடன் பயணித்து கண்காணிக்க முடிவு.

    சென்னையில் உள்ள புறநகர் ரெயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சினை காரணமாக தொடர் மோதல் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரெயில் நிலையங்களில் மாணவர்களிடையே மோதல் தொடர்பாக 18 வழக்குகள் பதிவு, 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல், 3 மாதத்திற்கு முன் மோதலில் ஈடுபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் 15 பேரும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    சமீபத்திலும் ரூட் தல பிரச்சினை காரணமாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று மாநிலக்கல்லூரி முதல்வருக்கு ரெயில்வே போலீசார் கடிதம் எழுதினர்.

    இதன் எதிரொலியால், மாநிலக் கல்லூரி மாணவர்கள் 25 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்கு சரியாக வராதவர்கள் என்றும், எப்போதோ ஒரு நாள் கல்லூரிக்க வருபவர்கள் தான் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கல்லூரிக்கு வந்தால் அவர்களை திருத்துவதற்கு தயாராக உள்ளோம் என்றது.

    இதைத்தவிர, மாணவர்கள் பயணிக்கும் பெட்டிகளில் போலீசாரும் உடன் பயணித்து கண்காணிக்கவும், ரெயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் ரெயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • பி.ஏ. தமிழ் பாடப்பிரிவை 9,410 பேரும், பி.எஸ்.சி. வேதியியல் பாடப்பிரிவை 8,229 பேரும், பி.ஏ. ஆங்கிலம் படிக்க 6,717 பேரும் கேட்டுள்ளனர்.
    • சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை கல்லூரியில் 7,599 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன.

    இந்த இடங்களுக்கு 3 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் தயாரிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு வெளியிடப்பட்டது. 29-ந்தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

    வழக்கம் போல இந்த வருடமும் பி.காம் (பொது), பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கடுமையான தேவை ஏற்பட்டுள்ளது.

    மொத்தம் உள்ள அரசு கல்லூரிகளில் சென்னை மாநில கல்லூரியில் படிக்கத்தான் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து முதலிடத்தில் உள்ளது. அதில் பி.காம் (பொது), ஆங்கில வழி முதல் ஷிப்டிற்கு 11,604 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    பி.ஏ. தமிழ் பாடப்பிரிவை 9,410 பேரும், பி.எஸ்.சி. வேதியியல் பாடப்பிரிவை 8,229 பேரும், பி.ஏ. ஆங்கிலம் படிக்க 6,717 பேரும் கேட்டுள்ளனர்.

    கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுக்கு 8,003 பேரும், சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை கல்லூரியில் 7,599 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை ராணி மேரி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் (பொது) பாடப்பிரிவுக்கு 7006 மாணவிகள், ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க 6,887 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    தமிழகத்தில் அதிக மாணவர்கள் விண்ணப்பித்த கல்லூரியாக மாநில கல்லூரியும் 2-வதாக கோவை அரசு கல்லூரியில் 34,743 விண்ணப்பங்களும் 3-வதாக வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் 29,260 பேரும், அதனை தொடர்ந்து ராணிமேரி கல்லூரிக்கு 24,256 பேரும், திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரிக்கு 23,700 பேரும், சேலம் அரசு கல்லூரிக்கு 22,913 பேரும், சென்னை ஆர்.கே.நகர் அரசு கலை கல்லூரிக்கு 20,141 பேரும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாநில கல்லூரி, லயோலா கல்லூரி தேசிய தர வரிசை பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக கவர்னர் பன்வாரிலால் பாராட்டு தெரிவித்துள்ளார். #TNGovernor #AnnaUniversity
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லியில் மனிதவள மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தரப்பட்டியலை ஜனாதிபதி வெளியிட்டார். அதில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாநில கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவை பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்திருப்பது மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது.

    பல்கலைக்கழகங்கள் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடத்தையும், பொறியியல் கல்வி நிறுவனங்கள் 9-வது இடத்தையும் பிடித்திருப்பதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். கல்லூரிகள் வரிசையில் மாநில கல்லூரி 3-வது இடத்தையும், லயோலா கல்லூரி 6-வது இடத்தையும் பெற்றிருப்பது, உயர் கல்வியில் அவர்களின் சிறப்பான செயல்பாட்டினால் கிடைத்த இடமாகும்.

    இந்த புகழுக்கும், சாதனைக்கும் கடுமையாக உழைத்த துணைவேந்தர்கள், முதல்வர்கள், மாணவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernor #AnnaUniversity
     
    ×