search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி பாலியல் தொல்லை"

    கடலூரில் மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் பகுதியை சேர்ந்த 17-வயது மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவரை காணவில்லை. இது குறித்து அவரது தந்தை கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பண்ருட்டி தாலுகா கீழ்கவரப்பட்டு சலங்கைநகரை சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் ஜெயராஜ் (வயது 23) அந்த மாணவியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. 

    இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று ஜெயராஜும், மாணவியும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவர்களை கடலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை கடத்தி சென்ற ஜெயராஜ் ஓசூர், கோவை ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெயராஜை போலீசார் கைது செய்தனர். 
    ×