என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
Byமாலை மலர்14 May 2018 10:18 AM GMT (Updated: 14 May 2018 10:18 AM GMT)
கடலூரில் மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் பகுதியை சேர்ந்த 17-வயது மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவரை காணவில்லை. இது குறித்து அவரது தந்தை கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
இதில் பண்ருட்டி தாலுகா கீழ்கவரப்பட்டு சலங்கைநகரை சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் ஜெயராஜ் (வயது 23) அந்த மாணவியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று ஜெயராஜும், மாணவியும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவர்களை கடலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை கடத்தி சென்ற ஜெயராஜ் ஓசூர், கோவை ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெயராஜை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X