என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவி படுகாயம்"
- அனிதா மீனா நேற்று இரவு வீட்டின் 2-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
- பலத்த காயம் அடைந்த அனிதாமீனாவுக்கு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் அனிதா மீனா (வயது8) தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அனிதா மீனா நேற்று இரவு வீட்டின் 2-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தாள். இதில் பலத்த காயம் அடைந்த அனிதாமீனாவுக்கு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.
- சிறுமி தொடர்ந்து வாந்தி எடுப்பதால் பெற்றோர் தரப்பில் விபத்து எப்படி நடந்தது என்று பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
சென்னை:
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகரில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மகள் சித்திமா (6). அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சிறுமி படிக்கட்டில் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் தொடர்ந்து வாந்தி எடுப்பதால் பெற்றோர் தரப்பில் விபத்து எப்படி நடந்தது என்று பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமரா பதிவை தந்தால் மேல் சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
ஆனால் பள்ளி தரப்பில் சி.சி.டி.வி. கேமரா பதிவை தர விருப்பம் இல்லாமல் பல்வேறு காரணங்களை சொல்லி இழுத்தடிப்பதாக திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்