search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடு விடும் விழா"

    • 3 பேர் கைது
    • 8 பேர் மீது வழக்கு பதிவு

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த குடையம்பாக்கத்தை சேர்ந்தவர் உமாபதி (வயது 27), இவரது தம்பி பொன்னம்பலம் (21). இவர்கள் இருவரும் கூலி தொழிலாளிகள். அண்ணன், தம்பி இருவரும் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகின்றனர்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் நீலவண்ணன். இவரும் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் எருது விடும் விழாவில் உமாபதி காளை வெற்றி பெற்றது.

    இதனால் நீலவண்ண னுக்கும், உமாபதிக்கும் இடையே காளை வெற்றி பெற்றது சம்பந்தமாகவும், தொழில்போட்டி காரணமாகவும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று உமாபதி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த நீலவண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வயலூர் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, தென்கழனி சேர்ந்த சரவணன், வெங்க டேசன், சந்தோஷ் ஆகியோர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆத்திரமடைந்த அவர்கள் உமாபதியை சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டினர்.

    இது குறித்து உமாபதி மோரணம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமூர்த்தி, சரவணன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் உமாபதியின் தம்பி பொன்னம்பலம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நீல வண்ணன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடு விடும் விழா நடந்தது
    • 200-க்கும் மேற்ப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பொய்கை மோட்டூர் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போட்டிக்காக காளைகள் கொண்டு வரப்பட்டன.

    சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட காளைகள் பங்கேற்ற ஓடின.

    காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் வித விதமான அலங்காரங்கள் செய்து இருந்தனர். போட்டியில் பெற்றி பெற்ற காளைகளுக்கு பரிவுகள் வழங்கப்பட்டது.

    போட்டியின் போது தீயணைப்பு மீட்பு பணித் துறையினர் மற்றும் விரிஞ்சிபுரம் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் காளைகள் முட்டியதில் சுமார் 10 பேர் காயமடைந்தனர்.

    இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • 71 காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் 125-ம்ஆண்டு காளைவிடும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்த 250 காளைகள் பங்கேற்று ஓடியது.

    இதில் வேகமாக ஓடி முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற காளைகளுக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் உள்பட 71 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக வாடி வாசல் வழியாக கலசபாக்கம் எம் எல் ஏ சரவணன் காளைவிடும் திருவிழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர்.வி.சேகர், நாட்டாண்மை சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில், கண்ணமங்கலம்போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காளை விடும் விழாவில் முன்னாள் எம் எல் ஏக்கள் பன்னீர்செல்வம், தூசி மோகன், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் தஞ்சிம்மாள்லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளைச் விழாக்குழுவினர் இளைஞர்கள், பொது மக்கள் செய்திருந்தனர்.

    • சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என உறவினர்கள் எழுதி கொடுத்தனர்

    ஆரணி:

    ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் கடந்த 1-ந் தேதி கிருத்திகை பெருவிழாவையொட்டி நடைபெற்ற காளை விடும் விழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    காளைவிடும் விழா நடந்தபோது பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டை அருகே இருந்த ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப் பையன் (வயது 65) என்பவரை சீறிப்பாய்ந்த காளை மிதித்து சென்றது. இதில் சின்னப் பையன் படுகாயம் அடைந்தார்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் முதியவரை மீட்டு 108 அவசர ஆம்புலன்சில் உதவியாளர்கள் மருத்துவ சிகிச்சைகள் வழங்கினர். மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவம னைக்கு அவரை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னப்பையன் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என போலீஸ் நிலையத்தில் சின்னப்பையனின் உறவினர்கள் எழுதி கொடுத்துவிட்டு உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கலெக்டர் அறிவிப்பு
    • கிராமங்களின் பெயர்களை அரசாணை மூலம் வெளியிட நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு எருது விடும் விழாக்கள் நடத்தியவர்களுக்கு மட்டும் இந்தாண்டு அனுமதி வழங்கப்படும் என்றும், புதிதாக விழா நடத்துபவர்கள் யாருக்கும் அனுமதி யில்லை என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி மாவட்ட நிர்வாகம் அனுமதித்த கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    விழா நடத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு விதிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை இரண்டு கட்டங்களாக எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது மூன்றாம் கட்டமாக 42 கிராமங்களில் விழாக்கள் நடத்த அதற்கான தேதிகள் இறுதி செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது. விரைவில் இவற்றுக்கான அரசாணை வெளியிடப்பட வுள்ளன.

    இந்நிலையில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

    வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி கோரிய கிராமங்களின் பெயர்களை அரசாணை மூலம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கான நடவடிக்கையில் கால்நடை பராமரிப்புத் துறை ஈடுபட்டது. அதில், கடந்த ஆண்டுகளில் அரசால் அறிவிப்பு செய்யப்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே தற்போது விழா நடத்த அரசாணை வழங்கப்படுகிறது.

    கடந்தாண்டு அரசாணையில் இல்லாத கிராமங்களில் இந்தாண்டு விழா நடத்த அரசாணை வெளியிட முடியாது என திருப்பி அனுப்பியுள்ளனர்.

    எனவே, கடந்த ஆண்டு விழா நடத்த அரசாணை பெறாத கிராமங்களில் இந்த ஆண்டு விழா நடத்த அனுமதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய முடியாது. எனவே, புதிதாக விழா நடத்த யாரும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டாம்.

    கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் எருது விடும் விழா நிகழ்ச்சிகளில் பெரும்பாலான கிரா மங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

    அரசு வழிகாட்டு நெறிமுறைகளை விழாக்கு ழுவினர் முறையாக கடைபிடித்து எருது விடும் விழாவை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் அருகே உள்ள மருதவல்லி பாளையம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாடு விடும் விழா நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    குடியாத்தம் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 28) இவர் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    மருதவல்லி பாளையத்தில் நடந்த எருது விடும் விழாவில் வேடிக்கை பார்க்க சென்றார். அவர் தடுப்புகளை தாண்டி நின்றபடி ஆரவாரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது வேகமாக அந்த காளை அவர் மீது மோதி முட்டியது.இதில் சுரேஷ் கீழே விழுந்தார். அவர் மீது காளை மாடும் விழுந்தது.

    சுதாரித்துக் கொண்டு எழுந்த காளை மீண்டும் சுரேஷின் மார்பு பகுதியில் மிதித்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    சுரேஷ் மீது காளை மாடு மோதிய பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    விரிஞ்சிபுரம் போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணைக்கட்டு கீழ்கொத்தூரில் மாடு விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தில் 62 ம் ஆண்டு எருது விடும் விழா க்நடைப்பெற்றது.

    வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய கவுன்சிலர் கணபதி, ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் மற்றும் போலீசார் ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு காளை விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பல்வேறு பகுதிகளி லிருந்து 190 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக காளைகள் வெளி யேற்றப்பட்டது.

    விழாவை பார்க்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். குறுகிய காலத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய வேகமாக ஓடிய காளைகளின் எதிரே நின்ற வீரர்களை தூக்கி வீசியதில் 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தீபிகா தலைமை யிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    வேகமாக ஓட முயன்ற 2 காளைகள் ஓடும் பாதையில் நிலை தடுமாறி வழுக்கி விழுந்தன. இதனை உடனடியாக அந்த காளைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வெற்றி பெற்ற காளைகளுக்கு மொத்தம் 52 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 100 க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.

    • மாடு விடும் விழாவில் விபரீதம்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தில் மயிலார் பண்டிகையை ஒட்டி எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம் மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு இல்லை என 3 முறை தள்ளி வைத்தனர்.

    இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய் துறை பேச்சுவார்த்தைக்குப் பின்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வேலூர், கிருஷ்ண கிரி, ராணிப்பேட்டை, தர்மபுரி, மாவட்டங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 305 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றனர்.

    நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமை யில் வருவாய் அலுவலர்கள் முன்னிலையில் விழா குழுவினர் உறுதி மொழி ஏற்றனர்.

    கால் நடை மருத்துவர்கள் மாடுகளை பரிசோதனை செய்த பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. இதில் காளைகள் முட்டி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    மாடு விடும் திருவிழாவில் விதிமுறைகளை பின்பற்றி விழா நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • 55 ஆண்டுகளாக நடந்து வருகிறது
    • முதலிடம் வந்த காளைக்கு பரிசாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங் கலத்திலிருந்து ஆற்காடு செல்லும் ரோட்டில் உள்ள ராணுவப்பேட்டை என்கிற கம்மவான்பேட்டை கிராமத்தில் 55-ம் ஆண்டு காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது.

    இந்த விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து 115 காளைகள் கொண்டு வரப்பட்டன. பஜனை கோயில் தெருவில் வாடி வாசல் வழியாக ஓடவிடப்பட்டது.

    இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற சூப்பர் ஸ்டார் முத்து காளைக்கு ரொக்கப் பரிசு ரூ.75 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற வாணியம்பாடி அன்வர் காளைக்கு ரூ.65 ஆயிரம், 3-ம் இடம் பெற்ற நெல்வாய் ராஜாபாபு காளைக்கு ரூ.55 ஆயிரம் உள்பட 55 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பரிசுகளை தவமணி, பிரதீப், விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, துணை தலைவர் லோகலட்சுமி குமரன் ஆகியோர் வழங்கினர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    மேலும் விழாவை வேலூர் தாலுகா தாசில்தார் செந்தில்குமார், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா, கம்மவான்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

    • 200-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது
    • முதல் பரிசாக ரூ.1.10 லட்சம் வழங்கப்பட்டது

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சிக்குட்பட்ட மாங்குப்பம் கிராமத்தில் பொன்னியம்மன் திருவி ழாவை முன்னிட்டு 44-வது ஆண்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. விழாவை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மிக குறைந்த நேரத்தில் ஓடி எல்லையை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.85 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.73 ஆயிரம் உள்ளிட்ட 56 பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தேசிய பிராணிகள் பாதுகப்பு நலவாரிய உறுப்பின ரும், ஜல்லிக்கட்டு மேற்பார்வை யாளருமான எஸ்.கே.மிட்டல் மற்றும் வருவாய்துறை அதிகாரி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன் னிட்டு பலத்த போலீஸ் பாது காப்பு போட்டப்பட்டிருந்தது. வேலூர், திருப்பத்தூர், திருவண் ணாமலை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200- க்கும் மேற்பட்ட எருதுகள் போட்டியில் கலந்து கொண் டன. எருதுகளை அடக்க முயன்ற வாலிபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

    • கசிநாயக்கன்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
    • காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு ஓட அனுமதிக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே கல்நார்சம் பட்டி மாடு விடும் திருவிழாவில் மாடு முட்டி வாலிபர் இறந்தார்.

    இதனால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டு போலீசார் மீது கல்வீசினர் மற்றும் போலீஸ் வாகனங்கள் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடு விடும் திருவிழாக்கள் நடத்த தடை செய்யப்பட்டது. பிறகு எருது விடும் திருவிழா குழுவினருடன் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் மாடு விடும் திருவிழாவின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி கூறினர்.

    பின்னர் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு மாடு விடும் திருவிழா நடத்த தடை நீக்கப்பட்டது.

    திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் மாடு விடும் திருவிழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட வருவாய்துறை சார்பில் கோட்டாட்சியர் லட்சுமி முன்னிலையில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது. 200 காளைகள் பங்கேற்றன.

    கால்நடை துறை சார்பில் காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு ஓட அனுமதிக்கப்பட்டது.

    வாடி வாசலில் இருந்து விடப்பட்ட காளைகள் மிக வேகமாக ஓடி வந்தது. இளைஞர்கள், பொதுமக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அறிக்கை அனுப்ப சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • ஒரு சுற்றுக்கு மேல் காளையை ஓடவிட்டதால் இறந்து விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதில் காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக ஓட விடப்பட்டது. காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. போட்டியை காண வந்த பொதுமக்களும் மற்றும் இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர்.

    இதில் காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் பாகுபலி என்ற காளை ஓட விடப்பட்டது.

    அப்போது பாதையில் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென பாகுபலி காளைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது.

    பெரும் சோகத்தை ஏற்படுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவிந்தரெட்டி பாளையத்தில் ஒரு சுற்றுக்கு மேல் காளையை ஓடவிட்டதால் அந்த காளை இறந்து விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து விரிவான விசாரணை செய்து அறிக்கை அனுப்ப சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ×