என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்த போது எடுத்த படம்.
அனைத்து கிராமங்களிலும் மாடு விடும் விழா நடத்த அனுமதி பெற்று தர வேண்டும்
- கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் மனு
- 250 முதல் 300 வரை மட்டுமே டோக்கன்கள் வழங்க வேண்டும்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இருந்து மாடு விடும் திருவிழா நடைபெற அனுமதி பெற்றுத் தரக் கோரி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் காலம் தொட்டு சுமார் 100 ஆண்டுகளாக கோவில் திருவிழாக்களின் போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்று வந்தது.
கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா காரணமாக 30-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே எருது விடும் திருவிழா நடைபெற்றது.
மேலும் பக்கத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் சுமார் 150 இடங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 இடங்களிலும் நடைபெற்றது.
சென்ற ஆண்டு இந்த மாவட்டத்தில் மட்டும் தான் தமிழகத்தில் மிக குறைவான இடங்களில் நடைபெற்றது. மேற்படி எருது விடும் திருவிழாவின் பொழுது தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெற்றி டவும் எருதுகள் ஒவ்வொரு முறையும் இரண்டு சுற்றுகள் விட ஆவண செய்யுமாறும்,
ஏற்கனவே கிராமங்களில் நடைபெற்ற வீதிகளில் எருது விடும் திருவிழா நடைபெற்ற ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் எருது விடும் கிராமங்களில் 250 முதல் 300 வரை மட்டுமே டோக்கன்கள் அட்டைகள் வழங்குமாறும் சங்கத்தின் மூலம் அனுமதித்து பெற்று விடவேண்டும்.
மேலும் மற்ற மாவட்டங்களில் நடைபெறுவது போல இந்த ஆண்டு அனைத்து கிராமங்களிலும் கோவில் திருவிழாவின் போதும் எருது விடும் திருவிழா நடத்த அனுமதி பெற்று தர வேண்டுகிறோம்.
அதன்படி திருப்பத்தூர் தாலுகாவில் 33 கிராமங்களிலும், நாட்டறம்பள்ளி தாலுகாவில் 15 கிராமங்களிலும், வாணியம்பாடி தாலுகாவில் 22 கிராமங்களிலும், ஆம்பூர் தாலுகாவில் 7 இடங்களிலும் இந்த எருது விடும் திருவிழா அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே தடையின்றி எருது விடும் திருவிழா நடத்த கூடிய அனுமதி பெற்று தரும்படி கேட்டுக் கொள்கின்றோம் என தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.






