search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுபரிசீலனை"

    • மேயர் மகேஷிடம் வியாபாரிகள் வலியுறுத்தல்
    • வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சியில் வியாழக்கிழமை தோறும் பொதுமக்களிட மிருந்து மேயர் மகேஷ் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி இன்று அவர் மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

    அப்போது வடசேரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், மேயர் மகேசை சந்தித்து பேசினார்கள். காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வடசேரியில் தொடர்ந்து மார்க்கெட் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

    இதற்கு பதிலளித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கனகமூலம் சந்தை யில் 123 கடைகள், கடந்த 17 மாதங்களாக காலியாக இருந்து வருகிறது. பலமுறை ஏலத்துக்கு வைத்தும் அவை ஏலம் செல்லவில்லை. இந்த நிலையில் வடசேரி பகுதியில் புதிதாக ரூ.55 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். புதிதாக ரூ. 55 கோடியில் பஸ் நிலையம் அமைக்கும் போது அந்த பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்றும் கட்டப்பட உள்ளது. அந்த கட்டிடத்தில் காய்கறி சந்தையை அமைக்கலாமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பது தெரியவந்தது. பஸ் நிலையத்தை யொட்டி காய்கறி மார்க்கெட் இருந்தால் வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு அண்ணா பஸ் நிலையத்தில் காய்கறி மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை மேற் கொண்டுள்ளோம்.

    ஏற்கனவே கனகமூலம் சந்தையில் உள்ள கடைகள் குறுகிய அளவில் உள்ளது. இனிவரும் காலங்களில் கடையின் அளவை அதிகரித்து கட்ட நட வடிக்கை எடுக்கப்படும். தற்பொழுது வியாபாரம் செய்து வரும் வியாபாரி களுக்கு முன்னுரிமை அளித்து கடை வழங்கப்ப டும். இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், என்ஜினியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராசு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஞானமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிவச்சந்திரன், ஒன்றிய தலைவர் ராஜா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×