search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துப்பேட்டையில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
    X

    விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.

    முத்துப்பேட்டையில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்

    • நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராசு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஞானமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிவச்சந்திரன், ஒன்றிய தலைவர் ராஜா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×