search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சு வர்மா"

    ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ManjuVerma
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
      
    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், இந்த பாலியல் புகாரால் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார்.
    அவரது மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

    கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மஞ்சு வர்மா சரணடைந்தார். அவரை ஜாமினில் விடுதலை செய்யும்படி பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பன்கேற்றது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவருக்கு பின்புறமாக மேடையின் முன்வரிசையில் மஞ்சு வர்மா அமர்ந்திருந்தார்.

    ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மத்திய மந்திரி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ManjuVerma  
    முசாபர்பூர் சிறுமிகள் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை தொடர்பாக நடந்த சோதனையில் ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதான பீகார் முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா இன்று ஜாமினில் விடுதலையானார். #ManjuVerma #ManjuVermabail
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
     
    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், இந்த பாலியல் புகாரால் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்தநிலையில் அவருடைய மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று பீகார் மாநில போலீசாருக்கு கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பெகுசராய் நகர கோர்ட்டு மஞ்சு வர்மாவின் சொத்துகளை முடக்கியது.

    சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடியால் கலக்கமடைந்த பீகார் போலீசார் மஞ்சு வர்மாவை கைது செய்ய வாரண்ட் வழங்குமாறு உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மஞ்சு சர்மாவை போலீசார் தேடி வந்தனர்.

    சுமார் 3 மாதங்களாக போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்த மஞ்சு வர்மா, கடந்த 20-11-2018 அன்று பேகுசராய் மாவட்டத்தில் உள்ள மஞ்ஹவுல் நீதிமன்றத்தில் ஆஜரானார். சுமார் 4 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மஞ்சு வர்மாவை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில், இதே கோரிக்கையுடன் பாட்னா ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மஞ்சு வர்மாவை ஜாமினில் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். #FormerBiharMinister #ManjuVerma #ManjuVermabail #PatnaHighCourt 
    சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார். #Muzaffarpur #BiharMinister #ManjuVerma #Surrender
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், அண்மையில் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கடந்த மாதம் 29-ந்தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்தநிலையில் அவருடைய மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று பீகார் மாநில போலீசாருக்கு கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பெகுசராய் நகர கோர்ட்டு மஞ்சு வர்மாவின் சொத்துகளை முடக்கியது.

    இதனால் வேறு வழியின்றி அவர் நேற்று பெகுசராய் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். வருகிற 1-ந்தேதி மஞ்சுவர்மாவை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் முசாபர்பூர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு செக்ஸ் உறவு கொள்வது எப்படி என்றும் ஆபாச பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது எப்படி எனவும் சொல்லிக் கொடுத்த சைஸ்தா பிரவீன் (எ) மது என்ற பெண்ணை சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்த வழக்கில் இவரையும் சேர்த்து இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் மது நேற்று காலை சி.பி.ஐ.யிடம் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார். தீவிர விசாரணைக்கு பிறகு சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்தனர்.
    பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் சுமார் 30 சிறுமிகள் சீரழிக்கப்பட்டது தொடர்பாக பதவி விலகிய முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். #ManjuVerma #ManjuVermasurrenders
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில்  நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்திரசேகர்  வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகள் மஞ்சு சர்மா வீட்டில் கிடைத்தன. இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இவ்விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த தொடங்கியது.

    இதனால் தன்னை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க பாட்னா உயர் நீதிமன்றத்தில் மஞ்சு வர்மா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா கடந்த மாதம் பேகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.பி.லோக்குர், எஸ்.அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது.

    பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி ரஜேஷ் தாக்கூர் சிறைக்குள் கைபேசி வைத்திருந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குறிப்பிட்டதையடுத்து, பிரஜேஷ் தாக்கூரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு நிறைந்த பாட்டியாலா சிறைக்கு உடனடியாக மாற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய தவறியதற்காக பீகார் அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் இன்னும் மஞ்சு வர்மாவை கைது செய்யாதது ஏன்? என பீகார் மாநில அரசின் சார்பில் வாதாடும் வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினர்.

    மஞ்சு வர்மா முன்னாள் மந்திரியாக இருக்கலாம். ஆனால், அவர் என்ன சட்டத்தை விட உயர்ந்தவரா? இன்னும் அவரை கைது செய்யாதது ஏன்? இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எனவும் கண்டனம் தெரிவித்தனர்.



    சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடியால் கலக்கமடைந்துள்ள பீகார் போலீசார் மஞ்சு வர்மாவை கைது செய்ய வாரண்ட் வழங்குமாறு உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட  நிலையில் மஞ்சு சர்மாவை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், சுமார் 3 மாதங்களாக போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்த மஞ்சு வர்மா பேகுசராய் மாவட்டத்தில் உள்ள மஞ்ஹவுல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். யாரும் தன்னை அடையாளம் காணாமல் இருப்பதற்காக முகத்தை துப்பட்டாவால் மறைத்தவாறு நீதிமன்றத்துக்குள் நுழைந்த அவர் நீதிபதியிடம் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். #ManjuVerma #ManjuVermasurrenders

    பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் சுமார் 30 சிறுமிகள் சீரழிக்கப்பட்டது தொடர்பாக பதவி விலகிய முன்னாள் மந்திரி மஞ்சு வர்மாவை கைது செய்ய இன்று வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. #Bihargovt #ManjuVerma #MuzaffarpurShelterHome
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

    இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்திரசேகர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகள் மஞ்சு சர்மா வீட்டில் கிடைத்தன. இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனால் தன்னை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க பாட்னா உயர் நீதிமன்றத்தில் மஞ்சு வர்மா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 9-ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா நேற்று (திங்கட்கிழமை) பேகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.பி.லோக்குர், எஸ்.அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் நேற்று விசாரணைக்கு வந்தது. 

    பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி ரஜேஷ் தாக்கூர் சிறைக்குள் கைபேசி வைத்திருந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குறிப்பிட்டதையடுத்து, பிரஜேஷ் தாக்கூரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு நிறைந்த பாட்டியாலா சிறைக்கு உடனடியாக மாற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய தவறியதற்காக பீகார் அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு 9-ம் தேதியே தள்ளுபடியான நிலையில் இன்னும் மஞ்சு வர்மாவை கைது செய்யாதது ஏன்? என பீகார் மாநில அரசின் சார்பில் வாதாடும் வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினர்.

    மஞ்சு வர்மா முன்னாள் மந்திரியாக இருக்கலாம். ஆனால், அவர் என்ன சட்டத்தை விட உயர்ந்தவரா? இன்னும் அவரை கைது செய்யாதது ஏன்? இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இவ்வழக்கின் மறுவிசாரணையை நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடியால் கலக்கமடைந்துள்ள பீகார் போலீசார் மஞ்சு வர்மாவை கைது செய்ய வாரண்ட் வழங்குமாறு உள்ளூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மஞ்சு வர்மாவை போலீசார் தேடி வருகின்றனர். #Bihargovt #ManjuVerma #MuzaffarpurShelterHome  
    பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் சுமார் 30 சிறுமிகள் சீரழிக்கப்பட்டது தொடர்பாக பதவி விலகிய முன்னாள் மந்திரி மஞ்சு வர்மாவை கைது செய்யாதது ஏன்? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. #ManjuVerma #MuzaffarpurShelterHome
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்திரசேகர்  வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகள் மஞ்சு சர்மா வீட்டில் கிடைத்தன. இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.

    இதனால் தன்னை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க பாட்னா உயர் நீதிமன்றத்தில் மஞ்சு வர்மா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 9-ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா நேற்று (திங்கட்கிழமை) பேகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.பி.லோக்குர், எஸ்.அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி ரஜேஷ் தாக்கூர் சிறைக்குள் கைபேசி வைத்திருந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குறிப்பிட்டதையடுத்து, பிரஜேஷ் தாக்கூரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு நிறைந்த பாட்டியாலா சிறைக்கு உடனடியாக மாற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    இன்றைய விசாரணையின்போது முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய தவறியதற்காக பீகார் அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு 9-ம் தேதியே தள்ளுபடியான நிலையில் இன்னும் மஞ்சு வர்மாவை கைது செய்யாதது ஏன்? என பீகார் மாநில அரசின் சார்பில் வாதாடும் வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினர்.

    மஞ்சு வர்மா முன்னாள் மந்திரியாக இருக்கலாம். ஆனால், அவர் என்ன சட்டத்தை விட உயர்ந்தவரா? இன்னும் அவரை கைது செய்யாதது ஏன்? இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இவ்வழக்கின் மறுவிசாரணையை நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். #SCpullsup #Bihargovt #ManjuVerma #MuzaffarpurShelterHome
    ×