என் மலர்
நீங்கள் தேடியது "Bihar minister"
- நிதின் நபின் தற்போது பீகார் சட்டசபையில் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
- மூத்த பாஜக தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின்
பாஜகவின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய செயல் தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், மக்களவை தேர்தல் போன்ற முக்கிய காரணங்களால் அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் உத்தரவின்பேரில், இந்த நியமனத்தை கட்சியின் நாடாளுமன்ற வாரியம் அங்கீகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகத் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபினை பாஜக நாடாளுமன்ற வாரியம் நியமித்துள்ளது" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இன்றுமுதல் அவர் தேசிய செயல் தலைவராக செயல்படுவார்.
மூத்த பாஜக தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு நிதின் நபின் தீவிர தேர்தல் அரசியலில் நுழைந்தார். தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசில், சாலை கட்டுமானத் துறை அமைச்சராக பதவியாற்றி வருகிறார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தொடர்ச்சியாக நான்கு முறை - 2010, 2015, 2020 மற்றும் 2025 பங்கிபூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நிதின் நபினின் நியமனம் பீகாரிலும், தேசிய அரசியலிலும் பாஜகவிற்கு ஒரு மூலோபாய ஊக்கமாக பார்க்கப்படுகிறது. அவரது நிர்வாக திறன், அனுபவம் போன்றவற்றை காரணம் காட்டி கட்சித் தலைமை இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இவர் சத்தீஸ்கர் மாநில பாஜக இணைப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
- அக்னிபாத் போராட்டகாரர்களை அவர் பயங்கரவாதிகள் என கூறியிருந்தார்.
- முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிரான அவரது கருத்து தலைப்புச் செய்தியானது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜகவை சேர்ந்த அமைச்சர் ராம் சூரத் ராயின் சர்ச்சை பேச்சுக்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து வருகின்றன.
கடந்த மாதம், 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு குறித்து முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக அவர் தெரிவித்திருந்த கருத்துகள் அம்மாநில தலைப்புச் செய்திகளாக மாறின. அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ரயில்களுக்கு தீ வைத்தவர்களை, அவர் பயங்கரவாதிகள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் முசாப்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராம் சூரத் ராய், அங்கிருந்தவர்களை பார்த்து, பிரதமர் மோடியால்தான், நீங்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கொரோனா ஏற்படுத்திய பேரழிவை பாருங்கள் என்றும், மோடியின் தடுப்பூசி மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அவர் திறமையாக கையாண்டதன் மூலம் நாம் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், அண்மையில் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.
சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கடந்த மாதம் 29-ந்தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இந்தநிலையில் அவருடைய மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று பீகார் மாநில போலீசாருக்கு கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பெகுசராய் நகர கோர்ட்டு மஞ்சு வர்மாவின் சொத்துகளை முடக்கியது.
இதனால் வேறு வழியின்றி அவர் நேற்று பெகுசராய் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். வருகிற 1-ந்தேதி மஞ்சுவர்மாவை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இந்தநிலையில் முசாபர்பூர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு செக்ஸ் உறவு கொள்வது எப்படி என்றும் ஆபாச பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது எப்படி எனவும் சொல்லிக் கொடுத்த சைஸ்தா பிரவீன் (எ) மது என்ற பெண்ணை சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் இவரையும் சேர்த்து இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் மது நேற்று காலை சி.பி.ஐ.யிடம் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார். தீவிர விசாரணைக்கு பிறகு சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்தனர்.






