search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசாருக்கு பயிற்சி"

    • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது
    • ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்கினார்.

    கோவை,

    கோவை மாநகரில் போலீசாரின் மன அழுத்த த்தை குறைக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறார்.

    இதில் போலீசாருக்கான உடற்பயிற்சிக்கூடம், வாகனங்களில் 'மினி' நூலகம், போலீசாரின் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான பயிற்சி கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தீவிரவாதம் தடுப்பதற்கு உரித்தான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்கினார்.

    இதில் குற்றச்செயல்களை எவ்வாறு கண்டறிவது எவ்வாறு அதனை தொடர்ந்து கண்காணிப்பது, அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து பயிற்சி பெற்றனர். 

    • கோட்டை அகழியில் ஒத்திைக
    • பருவ மழை தொடங்க உள்ளதால் நடவடிக்கை

    வேலுார்:

    தமிழகத்தில் பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழை வெளுத்து வாங்கி விட்டது. பெரும்பாலான நீர் நிலை கள் நிரம்பி வழிகிறது. பல நிரம்பும் சூழலில் உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.

    வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பது தொடர்பான பயிற்சிகளை போலீசாருக்கு வழங்கும் படி தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி. பாலநாக தேவி உத்தரவிட்டார். இதையடுத்து, கடல் சாரா மாவட்டங்களில் போலீசா ருக்கு மீட்பு, முதலுதவி குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அளிக்கும் பணிகள் 3 நாட்கள் நடக்க உள்ளது.

    இதன் அடிப்படையில் வேலுார் மாவட்டத்தில் ஆயுதப்படை மற்றும் சாதா ரண போலீசார் என 60 பேருக்கு பயிற்சிகள் அளிக் கும் பணிகள் நேற்று முன் தினம் தொடங்கியது.முதல் நாளான நேற்று முன்தினம் பாதிக்கப்பட் டவர்களுக்கு மீட்டு முதல் உதவி அளிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 2-வது நாளான நேற்று வெள் ளத்தில் தத்தளித்தவர்களை மீட்பது குறித்து கோட்டை அகழியில் செயல் விளக்க மளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு கமாண்டோ பிரிவு வேலுார் பொறுப் பாளர் ஸ்ரீதர் தலைமையி லான குழுவினர் பயிற்சி அளித்தனர்.

    • சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது
    • இப்பயிற்சியில் தேனி மாவட்ட எஸ்.பி போலீசாருக்கு பல்வேறு செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உயர்அதிகாரிகளின் உத்தரவுப்படி சைபர் உதவி அலுவலர்கள் எனப்படும் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசாரை கொண்ட 31 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினருக்கு சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

    இந்த பயிற்சி வகுப்பில் சைபர் கிரைம் உதவி எண் மற்றும் இணையதளம் மூலம் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்டோங்கரே எடுத்துரைத்தார்.

    இந்த பயிற்சி வகுப்பில் ஏ.டி.எஸ்.பி கார்த்தி, இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தாமரைக்கண்ணன், அழகுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 110 சைபர் கிரைம் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு ஈரோடு செங்குந்தர் பள்ளியில் பயிற்சி நடந்தது.
    • பொது மக்களின் புகார்களை எவ்வாறு பெறுவது அவற்றை எவ்வாறு தீர்க்க நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் சைபர் க்ரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவின் ஏ.டி.எஸ்.பி.யாக ஜானகி ராமன் உள்ளார். மாவட்டத்தில் சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சமூக வலை தளம் மோசடி குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சைபர் கிரைம் தொடர் தொடர்பாக ஒரு குற்றம் நடந்தால் 24 நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்தால் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட இணையதளத்தை முடக்கி பணத்தை திரும்பப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சைபர் கிரைம் பிரிவு ஈரோடு எஸ.பி. அலுவலகத்தில் மட்டுமே உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் புகாரை விசாரிப்பதற்கு ஏதுவாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 3 சைபர் பிரிவு போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதில் ஒரு எஸ்.எஸ்.ஐ, அவருக்கு 2 போலீசார் இருப்பார்கள். அவர்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை பெற்று அதனை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறாக மாவட்டம் முழுவதும் 110 சைபர் கிரைம் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி இன்று ஈரோடு செங்குந்தர் பள்ளியில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமை தாங்கினார். சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. ஜானகிராமன் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட சைபர்கிரைம் போலீசாருக்கு பொது மக்களின் புகார்களை எவ்வாறு பெறுவது அவற்றை எவ்வாறு தீர்க்க நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    ×