search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போபண்ணா"

    • போபண்ணா ஜோடி இறுதிப் போட்டியில் இவான் டோடிக் (குரோசியா)- ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது.
    • 14-வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டியாகும்.

    மியாமி ஓபனில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, மார்சன் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்)- ஹொராசியோ ஜெபலாஸ் (அர்ஜென்டியா) ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    துபாய் சாம்பியன்ஷிப் காலிறுதியில் தோல்வி, இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் ரவுண்ட் ஆஃப் 32-ல் வெளியேற்றம் ஆகியவை காரணமாக இரட்டையர் பிரிவில் போபண்ணா 2-வது இடத்திற்கு பின்தங்கினார். தற்போது மியாமி ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார். ஆஸ்திரேலிய ஓபனில் பதக்கம் வென்றதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். மேலும், தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வயதான வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

    போபண்ணா ஜோடி இறுதிப் போட்டியில் இவான் டோடிக் (குரோசியா)- ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது. போபண்ணாவின் 14-வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டியாகும். மேலும், மியாமி தொடரில் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார். ஏடிபி தொடர் அளவிலான 63-வது இறுதிப் போட்டி இதுவாகும். இரட்டையர் பிரிவில் 25 சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    போபண்ணா- எப்டன் ஜோடி ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரின் இறுதிப் போட்டியில் ஐந்தாவது முறையாக களம் காண்கிறது. லியாண்டர் பயேஸ்க்குப் பிறகு அனைத்து வகையிலான 9 ஏடிபி மாஸ்டர்ஸ் (9) தொடரிலும் இறுதிப் போட்டிக்கு நுழைந்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் அர்ஜெண்டினாவின் ஹோராசியோ ஜெபலோஸ் இணையை எதிர்கொண்டது.

    மியாமி:

    அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் அர்ஜெண்டினாவின் ஹோராசியோ ஜெபலோஸ் இணையை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா இணை 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மார்செல் கிரானோலர்ஸ் - ஹோராசியோ ஜெபலோஸ் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    • முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என இழந்தது.
    • 2-வது செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் போபண்ணா ஜோடி அதை கைப்பற்றியது.

    மியாமி ஒபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணைந்து விளையாடி வருகிறது.

    இந்த ஜோடி செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா)யை காலிறுதியில் எதிர்கொண்டது.

    முதல் இடத்தில் இருக்கும் போபண்ணா ஜோடிக்கு செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது.

    முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என அதிர்ச்சிகரமாக இழந்தது. 2-வது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடியது. இருந்தபோதிலும் செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியாக போபண்ணா ஜோடி 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றியது.

    3-வது செட்டில் போபண்ணா ஜோடி கை ஓங்கியது. அந்த செட்டை 10-7 எனக் கைப்பற்றி போபண்ணா ஜோடி 3-6, 7(7)-6(4), 10-7 என வெற்றி பெற்றது. இதன் மூலம் போபண்ணா- மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போபண்ணா ஜோடி, மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 7(7)-6(3) என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தாமஸ் மகாச்- ஜேனிக் சின்னெர், அலேக்சாண்டர் ஸ்வெரேவ்- பேஃபியன் மரோஸ்சன், நிக்கோலஸ் ஜார்ரி- டேனில் மெட்வதேவ், அல்காரஸ் கார்பியா- டிமிட்ரோவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    • போபண்ணா ஜோடி முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றியது.
    • 2-வது செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7-6 எனக் கைப்பற்றியது.

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து களம் இறங்கினார். இந்த ஜோடி மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 76 (3) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை பெற போபண்ணா ஜோடிக்கு ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    போபண்ணா ஜோடி காலிறுதியில் ஜான் பாட்ரிக் (ஆஸ்திரேலியா)- செம் வீர்பீக் (நெதர்லாந்து) ஜோடியை எதிர்கொள்கிறது.

    போபண்ணா ஜோடி இந்த போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்டது. முதல் செட்டில் 6-5 என முன்னிலையில் இருந்தபோது இரண்டு பிரேக் பாயின்ட்ஸ்களை சேவ் செய்ததன் மூலம் 7-5 என முதல் செட்டை கைப்பற்றியது.

    2-வது செட்டில் 6-6 என சமநிலை பெற்றதால் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் எதிர்ஜோடி டபுள் ஃபால்ட்-க்கு உட்பட்டதால் போபண்ணா ஜோடி முன்னிலை பெற்று 7-6(3) என கைப்பற்றியது.

    • 2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • இதில் 7 விளையாட்டு பிரபலங்களும் கவுரவிக்கப்படுகிறார்கள்.

    புதுடெல்லி:

    2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். பாரத ரத்னா மிக உயரிய சிவிலியன் விருதாகும், அதே சமயம் பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் தனிமனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக வழங்கப்படும் மரியாதைகளின் படிநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன: அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன்.

    பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.

    இதில் 7 விளையாட்டு பிரபலங்களும் கவுரவிக்கப்படுகிறார்கள். 43 வயதில் டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்த ரோகன் போபண்ணா, ஸ்குவாஷ் வீராங்கனை தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா, மல்லர்கம்ப பயிற்சியாளர் உதய் விஷ்வநாத் தேஷ்பாண்டே, வில்வித்தை பயிற்சியாளர் பூர்ணிமா மஹட்டோ, கவுரவ் கண்ணா (பாரா பேட்மிண்டன் பயிற்சியாளர்), சதேந்திர சிங் லோஹியா (நீச்சல்), ஹர்பிந்தர் சிங் (ஆக்கி பயிற்சியாளர்) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.
    • லீக் சுற்று முடிவில் ‘ரெட்’ பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜீவ் ராம் - சாலிஸ்பரி (இங்கிலாந்து), போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

    துரின்:

    தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மற்றும் ஜோடிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் வீரர்கள் 'கிரீன்', 'ரெட்', என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதினர்.

    இதன் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இத்தாலி வீரர் யானிக் சின்னெர் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனேவை வீழ்த்தினார். லீக் சுற்று முடிவில் 'கிரீன்' பிரிவில் யானிக் சின்னெர் 3 வெற்றியுடன் முதலிடம் பிடித்தும், 'நம்பர் ஒன்' வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும் பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினர். சின்னெர் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

    இரட்டையர் பிரிவில் (ரெட்) தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)-நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை வீழ்த்தியது. லீக் சுற்று முடிவில் 'ரெட்' பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜீவ் ராம் - சாலிஸ்பரி (இங்கிலாந்து), போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

    • கனடா ஓபன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று போட்டி நடந்தது.
    • இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிவடைய உள்ளது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜேமி முர்ரே- நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியைச் சந்தித்தது.

    இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
    • 43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூர்- பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை சந்தித்தது.

    இதில் போபண்ணா ஜோடி 6-7 (3-7), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • போபண்ணா- மேத்யூ எப்டென் ஜோடி 7-5, 4-6, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் அமெரிக்கா இணையை தோற்கடித்தது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் கூட்டணி டேவிட் பெல் (நெதர்லாந்து)-ரீஸ் ஸ்டால்டெர் (அமெரிக்கா) இணையை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்தில் போபண்ணா- மேத்யூ எப்டென் கூட்டணி 7-5, 4-6, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் டேவிட் பெல் - (அமெரிக்கா) இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

    • போபண்ணா ஜோடி கத்தார் ஓபன் டென்னிஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
    • போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    தோகா:

    கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - கான்ஸ்டன் லெஸ்டினே (பிரான்ஸ்)- போடிக் வான் டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.

    இதில் 6-7 (5-7), 6-4, 10-6 என்ற செட் கணக்கில் போராடி போபண்ணா ஜோடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    இந்த ஆட்டம் 1 மணி 39 நிமிடங்கள் நீடித்தது. போபண்ணா- எப்டன் ஜோடியாக வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ரூ.60 லட்சம் பரிசாக கிடைத்தது.

    பெங்களூருவைச் சேர்ந்த 42 வயதான போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    • சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    • தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நடந்தது.

    இதில் இந்தியாவின் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி பிரேசிலின் லூசா ஸ்டெபானி-ரபெல் மேட்டோஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி 6-7 (2-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது. பிரேசில் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.


    சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.


    தோல்விக்கு பிறகு சானியா மிர்சா கூறும் போது, எனது டென்னிஸ் வாழ்க்கை மெல்போர்னில் தொடங்கியது. எனது கிராண்ட்சிலாம் வாழ்க்கையை முடிக்க இதை விட ஒரு சிறந்த அரங்கை என்னால் நினைக்க முடியவில்லை என்றார்.

    அப்போது சானியா மிர்சா உணர்ச்சி வசத்தில் கண் கலங்கினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதில் சிட்சிபாஸ் (கிரீஸ்)-கரன் கச்சனோவ் (ரஷியா), ஜோகோவிச் (செர்பியா)-டாமி பால் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதி போட்டியில் சபலென்கா (பெலாரஸ்)-ரைபகினா (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    ×