search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைகள்"

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள மளிகை கடை, உணவகம், பழக்கடை, காய்கறி மற்றும் பூக்கடைகளில், பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1200 அபராதம் விதித்த னர். கடையின் உரிமையா ளர்கள், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் அலுவலக பணியா ளர்கள் உடனிருந்தனர்.

    • பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவது, வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
    • பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், ஒன்பத்துவேலி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் விஜயாமதியழகன் தொடங்கி வைத்தார்.

    பேரணியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவது, வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்கும்படி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வலியுறுத்தினார்.

    பேரணி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது.

    இதில் ஊராட்சி துணை தலைவர் திவ்யாசிவக்குமார், ஊராட்சி செயலாளர் குமரமோகன், ஊராட்சி மன்ற உறுப்பினர் அரவிந்த் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.
    • புகாரின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல் :

    நாமக்கல் நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவின் பேரில் நகர் நலஅலுவலர் டாக்டர் பரிதாவாணி, சுகாதார துப்புரவு அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் நாமக்கல் கடைவீதி, நந்தவனத்தெரு, மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40 வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ 6,000 அபராதம் விதித்தனர்.

    ×