search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தர்ணா"

    • கணவர் தன்னை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த மேல் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் அரசு பஸ் டிரைவர் இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா (வயது 27) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    திருமணம் முடிந்து 8 மாதங்கள் மட்டுமே சசிகலா கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

    இதன் சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடைப்பெற்று வருவதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் சசிகலா நேற்று இரவு தன்கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என மேல்பள்ளிப்பட்டில் இருக்கும் அவரின் கணவர் வீட்டிற்கு சென்று என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த பிரபாகரனின் பெற்றோர், கோர்ட்டில் வழக்கு முடிவுக்கு வரட்டும் அப்பறம் ஏற்றுக்கொள்கின்றோம் என்றனர். இதனால் அவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுப்பட்டார். தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் அப்பெண்ணிடம் பேசசுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

    • வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்
    • ஜோலார்பேட்டையில் பரபரப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்த வர் இளையகிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்க ளுக்கும், உறவினர்களுக்கும் இடையே, தமிழ்செல்வி வசிக்கும் வீடு சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வி வீட்டை பூட்டி விட்டு, துக்க நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைக்க முயன் றிருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலோர் பேட்டை போலீசார் சென்று மூன்று பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து உள்ளனர். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழ்செல்வியை போலீ சார் அலைக்கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த தமிழ்செல்வி, வீட்டில் திருட முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று மாலை உடைத்த பூட்டுகளுடன் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டார்.

    இதனையடுத்து போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் ஆகியோர் இரு தரப்பின ரையும் வரவழைத்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்ததன் பேரில் தமிழ்செல்வி தர்ணாவை கைவிட்டு சென்றார்.

    இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பபிதா நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் மேல் புறம் அமைந்துள்ள சக்திவேலின் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பபிதா மற்றும் அவரது 2 குழந்தைகளை தென்காசி அருகே உள்ள நல்வாழ்வு மையத்தில் கொண்டு சேர்த்தனர்.

    தென்காசி:

    தூத்துக்குடி மாவட்டம் கீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகள் பபிதா (வயது 39). இவருக்கும், பாவூர்சத்திரம் குருசாமி புரத்தை சேர்ந்த முத்து மகன் சக்திவேலுக்கும்(39) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்த சக்திவேல் தற்போது வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் பபிதா நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் மேல் புறம் அமைந்துள்ள சக்திவேலின் வீட்டிற்கு வந்துள்ளார். சக்திவேலின் பெற்றோர் மட்டுமே அங்கு இருந்துள்ளனர். அவர்கள் பபிதாவை வீட்டிற்குள் அனுமதிக்காமல் கதவை பூட்டி உள்ளனர்.

    இதனால் விரக்தி அடைந்த பபிதா அதே வீட்டின் முன்பு தனது 2 குழந்தைகள், உடைமைகளுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் பபிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் பபிதா மற்றும் அவரது 2 குழந்தைகளை தென்காசி அருகே உள்ள நல்வாழ்வு மையத்தில் கொண்டு சேர்த்தனர்.

    • சொந்த பிரச்சினையால் மகளும், மருமகனும் தற்கொலை
    • நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை டவுன் புது வாணியங்குளம் முதல் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி ஆதிலட்சுமி (வயது 41). இவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆதிலட்சுமி கூறியதாவது:-

    கணவரால் கைவிடப்பட்ட நான் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் மகளும், அவரது கணவரும் சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.

    இதனால் மூத்த மகளின் குழந்தைகளை அவரது கணவரின் உறவினர்கள் அழைத்து சென்று விட்டனர். தற்போது தனது பேரக்குழந்தைகளை ராஜஸ்தான், ஆந்திரா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் சிவன், பார்வதி போன்ற கடவுள் வேஷமிட்டு பிச்சை எடுக்க வைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

    எனது பேரக்குழந்தைகள் பிச்சை எடுத்ததற்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எனது பேரக்குழந்தைகளை கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், போளூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுத்து எனது பேரக்குழந்தைகளை அவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அப்போது அவருடன் மற்ற மகள்களும் இருந்தனர். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • செந்தமிழ் செல்வி மற்றும் தமிழ் சேரன் என்பவர் என்னை பற்றி அவதூறாக கூறி எனக்கு திருமணம் நடக்கக்கூடாது என்பதற்காக தினந்தோறும் பிரச்சினை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் வல்லம்படுகை வல்லந்துறையை சேர்ந்தவர் செந்தமிழ் அரசி (வயது 30). இவர் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது- 

    நான் எனது குடும்பத்துடன் வல்லந்துறை பகுதியில் வசித்து வருகின்றேன். இந்த நிலையில் எனக்கு திருமணம் நடைபெற வேண்டி பல்வேறு குடும்பத்தில் வரன்கள் பார்த்துவந்த போது அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் தமிழ் சேரன் என்பவர் என்னை பற்றி அவதூறாக கூறி எனக்கு திருமணம் நடக்கக்கூடாது என்பதற்காக தினந்தோறும் பிரச்சினை செய்து வருகின்றனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். 

    இதன் காரணமாக நான் கடும் மன உளைச்சலில் இருந்து வருகின்றேன். இந்த பிரச்சனை தொடர்பாக அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்‌. இது வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் போலீசார் எங்களை மிரட்டும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    • பாண்டியன், மணிமொழியை விவாகரத்து செய்த நிலையில் நஷ்ட ஈடாக மணிமொழிக்கு கொடுத்த பணம், நகை ஆகியவற்றை கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார்.
    • தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் தன்னிடம் வாங்கிய ரூ.35 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மணிமொழி (வயது 44). கும்பகோணத்தை சேர்ந்த இவருக்கும், நகைக்கடையில் வேலை பார்க்கும் மணிகண்டன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் அவரது கணவர் பாண்டியன், மணிமொழியை விவாகரத்து செய்த நிலையில் நஷ்ட ஈடாக மணிமொழிக்கு கொடுத்த பணம், நகை ஆகியவற்றை கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையே மணிகண்டனுக்கு மற்றொரு இடத்தில் திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

    இந்த செய்தியை அறிந்த மணிமொழி மணிகண்டன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் தன்னிடம் வாங்கிய ரூ.35 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதி கவுன்சிலர் அம்பிகாபதி மற்றும் ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் பேசி கலந்து ஆலோசித்து நல்ல முடிவை சொல்வதாக கூறியதன் பேரில் மணிமொழி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே அவர் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் மணிமொழிக்கு தண்ணீர் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மேல குடியிருப்பு கிராமம் பரபரப்பாக காணப்பட்டது. மணிமொழிக்கு முன் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாடகை பாக்கியை வழங்ககோரியும் கடையை காலி செய்ய வலியுறுத்தியும் கலைச்செல்வி நேற்று இரவு கடைமுன் தனி ஆளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • கலைச்செல்வி பல முறை கடைக்கு நேரில் சென்று கேட்டும் வாடகை பாக்கி வழங்காததால் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார்.

    புதுவை கோவிந்தசாலை கல்வே பங்களா பகுதியை சேர்ந்தவர் மேகநாதன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு சொந்தமான கடை அண்ணா சாலையில் உள்ளது.

    இந்த கடையை சிவக்குமார் என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு வாடகைக்கு விட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் மேகநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அதன் பிறகு கடை வாடகையை சிவக்குமார் கலைச்செல்வியிடம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    கலைச்செல்வி பல முறை கடைக்கு நேரில் சென்று கேட்டும் வாடகை பாக்கி வழங்காததால் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகும் வாடகை பாக்கியை வழங்கவில்லை. வாடகை பாக்கியை வழங்ககோரியும் கடையை காலி செய்ய வலியுறுத்தியும் கலைச்செல்வி நேற்று இரவு கடைமுன் தனி ஆளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×